Home குழந்தை நலம் சளி தொல்லை அதிகமா இருக்கா?… இதையும் கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்க..

சளி தொல்லை அதிகமா இருக்கா?… இதையும் கொஞ்சம் ஃபாலோ பண்ணுங்க..

40

குழந்தைகளைப் பொருத்தவரையில், அவர்களுக்கு பசியோ வலியோ அவர்களால் வெளிப்படுத்த முடியாது. அழ மட்டுமே தெரியும். அதேசமயம் குழந்தைகளுக்கு சளி பிடித்தால் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாம் குழந்தைகளை கவனிக்கும் போது செய்கிற சில சில தவறுகள் அவர்களுடைய உடல்நிலையை பாதித்துவிடுகிறது.

சிறு குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்து விட்டால் துணியை உடனே மாற்றிவிட வேண்டும்.

ஈரப்பதம் மிகுந்த இடத்தில் குழந்தைகளை தூங்க வைக்ககூடாது.

குளிர் காலங்களில் ஈரக்காற்று படாதவாறு குழந்தைகளை கம்பளியால் சுற்றி குழந்தைகளின் உடலையும், காதுகளையும் மூடவேண்டும்.

குளிர் காலத்தில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை குடிக்கவும்.

எளிதில் சீரணமாகும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரூட்டப்பட்ட மற்றும் பதப்படுத்தபட்ட உணவுகளை குழந்தைகளை தருவதை தவிர்க்க வேண்டும்.

பாலூட்டும் தாய்மார்கள் முதலில் தங்களுக்கு சளித்தொல்லை ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் தாய்க்கு சளி பிரச்சனை இருந்தால் பாலூட்டுவதால் குழந்தைகளுக்கும் சளி பிடித்துவிடும்.

எனவே தலைகுளித்தால் நன்கு தலையை துவட்டி பிறகே பால் கொடுக்க வேண்டும்.

அதே போல் மலச்சிக்கலுடன் குழந்தைகளுக்கு பால் கொடுத்தால் குழந்தைகளுக்கும் வயிற்று தொந்தரவுகள் உண்டாகும்.

எனவே பாலூட்டும் தாய்மார்கள் தங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.மலச்சிக்கலைத் தவிர்க்க பழங்கள், காய்கள், கீரைகள், மற்றும் நார்சத்து மிகுந்ந உணவுகளை சாப்பிடவேண்டும்.