Home காமசூத்ரா உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே…

உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே…

37

ரொமான்ஸுக்கு நேரம், காலம் கிடையாது…மூடு வந்திருச்சுன்னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க முடியும்… உதடுகள் தயார் என்றால் போர்களைத் தொடங்கி விட வேண்டியதுதானே… முத்தம் தருவது என்பது உதடுகளின் சந்திப்பு என்று மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணைப்பு, ஆசையின் அரவணைப்பு என்று பார்க்க வேண்டும்.. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை போய் சந்தோஷ உணர்வை கிளறி விட வேண்டும்.

உன் இதழ் மீது அழுந்தப் பதியும் என் இதழ் சொல்லும் நான் உன் மீது வைத்துள்ள அன்பின் ஆழத்தை…

முத்தமிட ஏற்ற நேரம் என்று எதுவும் இல்லை. இருவருக்கும் நல்ல மனநிலை, ஒத்த மனநிலை, மூடு இருக்கும்போது முத்தம் தருவது இனிமை சேர்க்கும்.. சரி முத்தம் கொடு்ப்பது என்று முடிவாகி விட்டது.. எங்கு தருவது என்ற கேள்வியும் கூடவே வரும்.

முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்… ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்குமே… பார்க்கலாமா…

உதடுகள்…

இதழ்களில் தரப்படும் இனிமையான முத்தம் தரும் சந்தோஷம் போல வேறு எங்குமே கிடைப்பதில்லை. அன்பின் ஆழத்தைக் காட்ட உதடுகள்தான் சிறந்த இடம். அதிலும் பெண்களுக்கு உதடுகளில் ஆழமான அதேசமயம், அன்பான முத்தத்தை நீண்ட நேரம் தரும் ஆண்களை நிறையப் பிடிக்குமாம்.

தன்னை ஒருவன் எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்பதை அவன் தனது இதழ்களில் தரும் முத்தத்தை வைத்துத்தான் ஒரு பெண் முடிவு செய்கிறாளாம். உதடுகளில் முத்தமிடும்போது அவசரம் கூடாது, அதி வேகம் கூடாது.. அன்பாக, மெதுவாக, ஆசையாக முத்தமிட வேண்டும். சின்னதாக கவ்வியபடியும், சுவைத்தபடியும் இடப்படும் முத்தத்திற்கு நிறைய வேல்யூ உண்டு…

காது மடல்களுக்குப் பின்னால்

காது மடல்களுக்குப் பின்னால் தரப்படும் முத்தம், உணர்ச்சிகளை ஒட்டுமொத்தமாக தூண்டி விட உதவுகிறதாம். ஆணாக இருந்தாலம் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி காதுகளிலும், காது மடல்களிலும், பின்புறமும் இடப்படும் முத்தம் பெரும் உணர்ச்சித் தூண்டலாக அமையுமாம். சின்னதாக நாக்கால் வருடி விடும்போது அடி வயிற்றிலிருந்து உணர்ச்சி கொந்தளிப்பதை உணர முடியும்.

கழுத்து
கழுத்தின் பின்பக்கமும் மற்றும் முன்பக்கமும் உணர்ச்சிகரமான பகுதிகள்தான். இங்கும் நிதானமாகவும், அழுத்தமாகவும் முத்தம் பதிக்கும்போது உணர்ச்சிகள் ஊற்றெடுக்குமாம். குறிப்பாக பெண்களின் கழுத்தின் பின்பக்கம் செல்லமாகவும், ஆசையாகவும், அன்பாகவும் சின்னச் சின்னதாக முத்தம் வைத்துப் பாருங்கள்…அவருடைய அன்பு மழையில் சிக்கித் திண்டாடிப் போவீர்கள்.

தொடைகள்

தொடைகளைப் போல உணர்ச்சிகரமான பகுதி எதுவும் கிடையாது. சும்மா கை பட்டாலே சிலிர்த்துப் போய்விடுவார் உங்கள் துணை. அப்படி இருக்கையில் அங்கு போய் ஆற அமர அழுத்தம் திருத்தமாக முத்தம் வைத்தால் எப்படி இருக்கும்… கிளுகிளுப்பின் உச்சத்திற்கே போய் விடுவார்.

தொடைகளின் மேல் பகுதியை விட உட்புறப் பகுதியில் வைக்கப்படும் முத்தம்தான் இன்ஸ்டன்ட் உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு உதவுமாம். சின்னச் சின்னதாக முத்தம் வைக்க வேண்டும்… லேசாக நாவால் வருட வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் இருவருக்குமே இன்பம் கூடும்.

பாதம்

கால் பாதத்தை நாவால் வருடி முத்தமிடும்போது பெண்களுக்கு பெரும் சுகமும், ஆசையும் அதிகரிக்குமாம். எடுத்துதமே காலைத் தூக்கி முத்தமிடாமல் முதலில் லேசாக கால் விரல்களை சொடுக்கு எடுத்து விடுங்கள். சின்னதாக மசாஜ் செய்யுங்கள்.

கால் பாதத்தை அமுக்கி விடுங்கள். அதன் பின்னர் காலைத் தூக்கி வைத்துக் கொண்டு பாதத்தில் சின்னச் சின்னதாக முத்தம் வையுங்கள். உணர்ச்சியால் உந்தப்பட்டு உங்களது துணை நெளிவார், சொக்கிப் போவார்…. செக்ஸ் வைக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் பாதத்திற்குப் போகாமல் இருக்காதீர்கள்…

வயிறு
வயிற்றுப் பகுதியிலும் உணர்வுத் தூண்டல்கள் அதிகம். உங்களது துணையை மெதுவாக படுக்க வைத்துக் கொள்ளுங்கள். சேலை கட்டியிருந்தால், மெதுவாக விலக்கி விட்டு வயிறு முழுவதும் முதலி்ல் உதடுளால் தடவிக் கொடுங்கள்.

பின்னர் அங்குமிங்குமாக ரேண்டமாக முத்தம் வையுங்கள். சின்னதாக, அழுத்தமாக வையுங்கள். பிறகு தொப்புள்… நாவால் மென்மையாக வருடிக் கொடுக்கும்போது உணர்ச்சிகள் கொந்தளிக்கும்.

மார்புகள்
மார்புகளில் முத்தமிடுவது தனிக் கலை. அதுகுறித்து நிறையவே சொல்லியுள்ளோம். மார்புகளில் முத்தமிடும்போது மிகுந்த நிதானத்துடன், அழகுணர்ச்சியுடன் கையாள வேண்டும்.

ஒவ்வொரு மார்பாக முத்தமிட வேண்டும். மார்பின் அடிப்பகுதியைப் பிடித்து வருடித் தர வேண்டும். அங்கு முதலில் முத்தமிட வேண்டும். பின்னர் காம்புப் பகுதியைச் சுற்றியுள்ள இடம்.. அடுத்து காம்புப் பகுதி என்று போக வேண்டும்.

ஒவ்வொரு முத்தமும் தித்திக்க சின்னச் சின்னதாக கற்பனை நயத்தையும் சேர்த்து கலையுணர்வோடு முத்தமிடுங்கள்..அன்பும், ஆசையும் பெருகட்டும்.