Home அந்தரங்கம் எனது துணைக்கு தாமதமாகவே உணர்ச்சி வருகிறது, இதனால் எங்களுக்குஉடலுறவில் ஒத்து வரவில்லை என்ன செய்வது ?

எனது துணைக்கு தாமதமாகவே உணர்ச்சி வருகிறது, இதனால் எங்களுக்குஉடலுறவில் ஒத்து வரவில்லை என்ன செய்வது ?

3250

கேள்வி: நான் சமீபத்தில் திருமணமான பெண். இதுவரை நான் உடலுறவில் உச்சமடைந்ததாக தெரியவில்லை. என் கணவர் அனைத்து விதத்திலும் என்னை திருப்திப்படுத்த முயலுகிறார் ஆனாலும் நான் உச்சமடைவதை உணரவில்லை. இது எதனால் ?

மருத்துவர் பதில்: ஆரம்பகால உடல்உறவுகளில் சில பெண்கள் உச்சத்தை எட்டுவதில்லை இரண்டு மூன்று மாதங்களில் சரியாகிவிடும். அப்படியும் சரியாகவில்லை என்றால். உங்களின் உடல் தேவையை கணவரிடம் கூறவும். அதன் பின்பும் சரியாகவில்லை என்றால்.தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசிக்கவும்.

கேள்வி: எனது மனைவியுடன்ஆசனவாய் வழி்யாக உறவுகொள்ள ஆசை.. பயம் காரணமாக மனைவி மறுத்துவிட்டாள். அவ்வாறு உறவு கொள்வதால் ஏதேனும் விளைவு ஏற்படுமா?.

மருத்துவர் பதில்: மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்தல் சரி அல்ல. அப்படி செய்தால் ஆசனவாயில் எரிச்சல் மற்றும் பல பாலியல் நோய்கள் கூட வரலாம்.

கேள்வி: நீல படங்களில் மணிக்கணக்காக உடலுறவு கொள்கிறார்களே இது உண்மையா?

மருத்துவர் பதில்: நீல படங்களில் காணும் காட்சி மிகைப்படுத்தபட்டவை அது உண்மையல்ல.
உடலுறவு சாதாரணமாக 30லிருந்து 45நிமிடங்களுக்குநீடிக்கும். இதில்புணர்ச்சி என்பது ஒன்று முதல் இரண்டு நிமிடங்களே மீதி உள்ள நேரம் முன் விளையாட்டுக்களில் களிக்கலாம்.

கேள்வி: எனது கணவரும் நானும் வாரத்திற்கு 4 முறை மிகவும் மகிழ்ச்சியாக உடலுறவு கொள்கிறோம்.இருந்த போதும், அவர் படுக்கையிலும் குளியலறையிலும் சுயஇன்பம் காண்கிறார். இது என் மனதிற்க்கு கஷ்டமாக உள்ளது. ஏன் இப்படி செய்கிறார்??

மருத்துவர் பதில்: பொதுவாக ஆண்களுக்கு பல நேரங்களில் பல விதங்களில் உடலுறவு கொள்வது பிடிக்கும்.அதனால்அவர் அவ்வாறு சுயஇன்பம் கண்டிருக்கலாம். அவர் இன்னொரு பெண்ணை நினைத்து சுயஇன்பம் காண்பதாக நினைத்திருக்கிறீர்கள். அதனால் தான் உங்களுக்கு இந்த கஷ்டம்.இனி அவர் சுயஇன்பம்காணுவதை பார்த்தால் உடனே அவரை உடலுறவுக்கு அழைக்கவும். அல்லது அவருக்கு நீங்களே செய்துவிடவும்.

கேள்வி: நான் 26வயதான பெண். எனது மார்பகங்கள் மிகவும் சிறிதாக இருக்கின்றது. மார்பகங்களை பெரிதாக்க என்னவழி?

மருத்துவர் பதில்: நன்கு சாப்பிடவும், இப்பொழுது மூலிகை எண்ணெய் கிடைக்கிறது. அவற்றை முயற்சித்து பார்க்கலாம். இவை அனைவருக்கும் ஒரே மாதிரி பலன் தராது.

கேள்வி: 24 வயதான மார்பகம் எடுப்பாகவுள்ள பெண் நான். எனக்கு அடுத்த மாதம் திருமணம். மார்பகங்கள் சுவைக்கப்படுவதாலோ அல்லது அமுக்குவதாலோ என் மார்பு தளர்ச்சி அடையுமா?

மருத்துவர் பதில்: கண்டிப்பாக கிடையாது. உடலுறவு கொள்ளும் பெண்ணிற்கு உடலும், மனமும் நன்கு பொலிவுடன் காணப்படும்.

கேள்வி: எனக்கு விரைவாக விந்து வெளியேறுகிறது. ஆனால் எனது துணைக்கு தாமதமாகவே உணர்ச்சி வருகிறது, இதனால் எங்களுக்குஉடலுறவில் ஒத்து வரவில்லை என்ன செய்வது ?

மருத்துவர் பதில்: 60% மேலான ஆண்களுக்கு இந்த பிரச்சனை உண்டு. பயம் தேவையில்லை, முறையான சிகிச்சையும் ஆலோசனையும், விந்து முந்துதலை தவிர்த்து இருவரும் சமகாலத்தில் உச்சத்தை எட்ட வழிவகுக்கும். மருத்துவரை ஆலோசித்து பயன் பெறவும் மேலும் உங்களுக்கு மன அழுத்தமோ, குடும்ப பிரச்சனையோ, விந்து முந்துமோ என்கிற பயமோ, மனைவியை திருப்திப்படுத்த முடியவில்லை என்ற எண்ணமோ? இருந்தால் அதை போக்கி கொள்ளுங்கள். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுங்கள். அப்படியும் சரியாகவில்லை என்றால் தாமதிக்காமல் மருத்துவரை ஆலோசியுங்கள்.

கேள்வி: தீராததலைவலிக்குசெக்ஸ் ஒரு மருந்து என்று சொல்கிறார்களே அது உண்மையா?

மருத்துவர் பதில்: உண்மைதான் , சிலருக்குதுணைவியை திருப்திபடுத்த முடியவில்லையே என்று கூடதலைவலி எற்படலாம். ஆனால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத்தலைவலிக்கு ‘செக்ஸ்’ஒரு அற்புதமான மருந்து.உடலுறவு கொள்ளும் போது அட்ரினல் சுரப்பியும், கார்டினலையும் தூண்டுவதால் உடனே மறைந்துவிடும். இருந்த போதும் செக்ஸ் மட்டுமே மருந்து என்றிறாமல் மருத்துவரை ஆலோசித்து தலைவலிக்கு என்ன காரணமென கண்டறிந்து சிகிச்சை பெறவும்.

கேள்வி: தாய்ப்பால் கொடுப்பதால் மார்பகங்கள் தளருமா?

மருத்துவர் பதில்: கண்டிபாக இல்லை. தாய்ப்பால் கொடுப்பதால், உடலும், மார்பும் நன்கு பொலிவுடன் காணப்படும். மேலும் குழந்தைக்கு பாலுட்டுவது போன்ற உணர்ச்சியும் மகிழ்ச்சியும் உடலுறவில் கூட கிடைக்காது.

கேள்வி: உடலுறுவுக்குப்பின் பெண்கள் சிறுநீர் கழிப்பது கர்ப்பத்தை தடுக்குமா?

மருத்துவர் பதில்: மிகவும் தவறான தகவல் இது.சிறுநீர்ப்பை நோய் தொற்று ஏற்படவேண்டுமானால் வாய்ப்புகள் உண்டு. முறையான குடும்பக்கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டுமே கர்பத்தை தடுக்கும்.

கேள்வி: டைட் ஜீன்ஸ் போடுவது கர்ப்பமாவதற்குத்தடையா?

மருத்துவர் பதில்: இறுக்கமான உள்ளாடைகள், ஜீன்ஸ் போன்றவற்றை அணியும் போது வியர்வை வெளியேற்றம் தடைப்பட்டு நோய் தொற்று எற்பட வாய்ப்பு உண்டு. மேலும் விதை பையில்ஏற்படும் அதிக சூட்டினால் விந்து உற்பத்திபாதிக்கப்படும். எனவே இறுக்கமான உள்ளடைகளை தவிர்ப்பது நல்லது.

கேள்வி: எனக்கு விரைப்புத்தன்மை குறைவாக உள்ளது எனக்கு குழந்தை பிறக்காதா?

மருத்துவர் பதில்: முறையான சிகிச்சை மூலம் விரைப்பு தன்மை குறைப்பாட்டை சரி செய்ய முடியும். பயப்படாமல் உடன் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவரை ஆலோசித்து முறையாக சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் தந்தையாக வாழ்த்துக்கள்.

கேள்வி: மாதவிடாய்க்கு பிறகு கருமுட்டை வெளிப்படுவதை எப்படி தெரிந்துக் கொள்வது?

மருத்துவர் பதில்: மார்பகங்கள் கணமாக இருக்கும், அடிவயிறு வலிக்கும், லேசான இரத்த கசிவு இருக்கலாம்.உடல் வெப்பம் கூடி குறையலாம். முறையான scan பரிசோதனை மூலம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்..

கேள்வி: 26 வயது ஆண் நான் எனது மனைவியுடன் செக்ஸில் ஈடுபடும்போது அவள் எனது உறுப்பை பிடித்தலே விந்து, வெளிப்படுகிறது. இதனால் எனக்கு கவலையாக உள்ளது.

மருத்துவர் பதில்: உங்களுக்கு விந்து முந்துதல் குறைபாடு இருக்கலாம். முறையாக ஒரு மருத்துவரை ஆலோசித்து சிகிச்சை பெறுவது நலம்.

கேள்வி: சுய இன்பத்தால் ஆண்மைகுறையுமா? –

மருத்துவர் பதில்: அறிவியல் ரீதியாக சுய இன்பத்தால் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது. ஆனால் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் செய்யும் போது மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
உடல் ரீதியாக விரைப்பு தன்மை குறைபாடு , ஆண் உறுப்பில் சுருக்கம் போன்றவை வரலாம்.
மனரீதியாக உடலுறவில் நாட்டமின்மை, ஆண்மை போய்விடும் என்ற பயம், மணைவியை திருப்த்திப்படுத்த முடியதோ என்ற எண்ணம் போன்றவை வரலாம். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளவும்.
தகுதி வாய்ந்த மருத்துவரை கொண்டு ஆலோசித்து சிகிச்சை பெறுவது நலம்.

கேள்வி: எங்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் குழந்தை இல்லை என்ன செய்யலாம்?

மருத்துவர் பதில்: ஆண், பெண் இருவருமே குழந்தையின்மைக்கு காரணமாக இருக்கலாம். தகுதி வாய்ந்த மருத்துவரை ஆலோசித்து
1.விந்தணு பரிசோதனை

2.விரைப்பை ஸ்கேன் பரிசோதனை

3.பெண்களுக்கு தைராய்டு, ஹார்மோன் பரிசோதனை

4.கருப்பை ஸ்கேன் பரிசோதனை

தேவைப்படின் மற்ற ஹார்மோன் பரிசோதனை மேற்கொள்ளவும்.

முறையான பரிசோதனை மூலம் குழந்தையின்மைக்கான காரணம் கண்டறிந்த சிகிச்சை மேற்க்கொண்டால் தாய்மை பேற்றை அடையலாம்.

கேள்வி: 25 வயது பெண் நான் திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது குழந்தை இல்லை இதுவரை நான் உச்ச நிலையை அடைந்ததில்லை, உச்ச நிலையை அடைந்தற்கான அறிகுறி என்ன?

மருத்துவர் பதில்: உங்களின் உடலுறவின் நிலைபாட்டை பற்றி சரியாக குறிபிடவில்லை,
உச்சநிலையை அடைவதை கண்டறிய சில அறிகுறிகள்.

1.பெண்ணுறுப்பில் அதிகப்படியான திரவம் சுரத்தல்

2.பெண்குறியின் நுழைவாயில் விரிந்து கொடுத்தல்

3.மார்பு காம்புகள் நன்கு விரைத்து நிற்கும்.

4.Monaing எனப்படும் பெண் உணர்வு வேட்கை முணுகும் நிலைக்கு தள்ளப்படுவாள்.

5.கைகளால் ஆணையோ அல்லது படுக்கையயோ இறுகப்பற்றி கொள்வாள்.

இவையெல்லாமே பெண்கள் உச்சத்தை அடைவதற்கான அறிகுறிகள்.

கேள்வி: நான்35 வயதான ஆண், என் மணைவியின் வயது 25 சில நிமிடங்களுக்கு மேல் உடலுறவுக் கொள்ள சம்மதிப்பதில்லை, கொஞ்சம்நேரம் கூடினாலும் உடனே நிறுத்த சொல்லி அழுகிறாள். இதற்கு என்ன காரணம்? வயது வித்தியாசம் ஒரு காரணமா?

மருத்துவர் பதில்: சில பெண்களுக்கு, பெண் உறுப்பில் ஈரத்தன்மை குறைவதால் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அல்லதுdyspareunia எனப்படும் உடலுறவின் பொது பெண்ணுறுப்பில் ஈரத்தன்மைகுறைபாடு ஏற்படலாம்.
Foreplay எனப்படும் முன் விளையாட்டுக்களில் அதிக நேரம் ஈடுபடவும். அதன் பின்பும் குறைபாடு இருந்தால் தயங்காமல் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.

கேள்வி: 40 வயது பெண் நான். என் கணவருக்கு அதிகமாக உடலுறவில் ஈடுபடவேண்டும் என ஆசை, ஆனால் எனக்கு நேரமின்மை , உடல் அசதி, பெண்ணுறுப்பில் வலி மற்றும் உடலுறவில் நாட்டமின்மையால் எனக்கு உடலுறவின் மேல் வெறுப்பு வருகிறது. என்னசெய்வது?

மருத்துவர் பதில்: உங்களுக்கு மெனொபாஸல் சின்ட்ரோம் எனப்படும் மாதவிடாய் நிற்பதற்கான அறிகுறிகள் ஆரம்பித்துள்ளன.
இதனால் இந்த தொந்தரவுகள் ஏற்படலாம். மதவிடாய் ஒழுங்காக வருகிறது என்றால் உங்களுக்கு மன அழுத்தமோ அல்லது உங்கள் கணவரின் உடலுறவு செயல்பாட்டுகளில் திருப்தியில்லை என்று அர்த்தம்.
உங்கள் கணவருடன் நல்ல புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம்.அப்படியும் உடலுறவில் நாட்டமில்லை என்றால், தகுதிவாய்ந்த மருத்துவரை அல்லது ஆலோசகரின் உதவியை பெறவும்.

கேள்வி: நான்முத்தமிடுவதில்அவசரப்படுவதாக எனது துணை கூறுகிறார். நல்லதொரு முத்தமிடுதலை எவ்வாறு செய்ய வேண்டும்?

மருத்துவர் பதில்: அவசரப்படவேண்டாம். மெதுவாகநடந்துகொள்ளுங்கள்
உணர்வுபூர்வமாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.
நாக்கை பயன்படுத்த கொஞ்சம் பொறுத்திருங்கள். பயன்படுத்தும்போதும் மற்றவரின் வாயினுள் நுழைக்கவேண்டாம்.
மென்மையாக உதடுகளை கடியுங்கள். இதற்கு கீழ் உதடுகள் மிக பொருத்தமானவை.
கைகளை சரியாக பயன்படுத்துங்கள். முத்தமிடும்போது பெண்களின் தலையை சாய்த்திருக்க உங்கள் கைகளால் உதவிடுங்கள். அப்போது தலையை தடவலாம், கூந்தலோடு விளையாடலாம். கொஞ்சம் நேரம் சென்றபின் லேசான பலத்துடன் தலையை அழுத்திப்பிடிக்கலாம்.

கேள்வி: எனக்கு தொடை இடுக்குகளில் அதிகமாக அரிக்கிறது, கடைகளில் மருந்து வாங்கி போட்டுவிட்டேன், சரியாகவில்லை இதற்கு என்ன காரணம்?

மருத்துவர் பதில்: உடல் எடை அதிகமாக இருந்தாலோ, பொது கழிப்பறைகளை அடிக்கடி உபயோகித்தலோ, ஈரமான உள்ளாடைகளை அணிவதலோ. குளித்துவிட்டு சரியாக துவட்டாமல் ஆடைகளை அணிந்தலோ, நீண்ட நேரம் ஒரே உள்ளாடை அணிவதலோ, ஆண், பெண் டைட் ஜீன்ஸ் அணிவதலோ, பெண்கள் மாதவிடாய் சமயத்தில் அடிக்கடி நாஃப்கின் மாற்றி சுத்தமாக இல்லாததாலோ, அரிப்பு வரலாம். பொதுவாக சுகாதரத்தை பேணி பாதுகாப்பது நல்லது. கடைகளில் நீங்களாகவே மருந்து வாங்குவதை தவிர்கவும். தகுதிவாய்ந்த மருத்துவரை ஆலோசித்து பலன் பெறுவது நல்லது..,