Home சூடான செய்திகள் ஆண்களே பெண்களே பொது இடங்களில் இதை செய்யாதீர்கள்

ஆண்களே பெண்களே பொது இடங்களில் இதை செய்யாதீர்கள்

112

பொதுவான தகவல்:ஆமா! இதெல்லாம் ஃபாரின்ல தான் நடக்குது… நம்ம ஊருல எங்கப்பா நடக்குதுன்னு நீங்க கேட்டா… கடந்த சில வருஷமா நீங்க கோமாவுல இருந்தீங்களான்னு எங்களுக்கு சந்தேகம் வரும். முக்கிய நகரங்கள்ல பொது இடத்துல ‘ஜாலி’ பண்றத ஏதோ நகைக்கடை விளம்பரத்துல பிரபு சார் என் உரிமைன்னு சொல்றது மாதிரி நெனச்சுக்கிட்டு கண்டதும் பண்ணிக்கிட்டு இருக்காங்க.

நடிகர் விவேக் கூட ஒரு காமெடியில நம்ம ஊருல பொது இடத்துல கிஸ் அடிக்க முடியாது ஆனா, பிஸ் அடிக்கலாம். ஆனா, இங்க பொது இடத்துல பிஸ் அடிக்க கூடாது, ஆனா, கிஸ் அடிச்சுக்கலாம்ன்னு காமெடி பண்ணி இருப்பர். என்ன தான் இருந்தாலும் கலாச்சாரம்ன்னு ஒன்னு இருக்குல.

அடிங்க..! பொது இடத்துல பிஸ் அடிக்கிறது தான் கலாச்சாரமான்னு திட்டாதீங்க… நாங்க அப்படி சொல்ல வரல, பொது இடத்துல பிஸ் அடிக்கிறது குத்தம் தான். அநாகரீகம் தான். அதே அளவு, பொது இடத்துல கிஸ் பண்றது, ரொமான்ஸ், காதல்ங்கிற பேருல மத்தவங்க கண்ணு கூசுற மாதிரி நடந்துக்குறதும் தப்பு தான், அநாகரீகம் தான்.

சரி! அப்படி தான் பண்ணுவேன்னு சிலர் சொன்னா… இந்த காரணம் எல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுக்குங்க… இதுக்கு அப்பறம் பொது இடத்துல நீங்க என்ன வேணாலும் பண்ணிக்கங்க…

உகந்த இடம் இல்லை! ஃபர்ஸ்ட் விஷயம்… பொது இடத்துல இருந்துக்கிட்டு கிஸ் பண்ணிக்கிறது, கொஞ்சுக்கிறது, ரொமான்ஸ் பண்றது எல்லாம் சரியானது இல்ல. ரொமான்ஸ் பண்றதுக்குன்னே சில இடங்கள் இருக்கு அங்க போலாம் பண்ணலாம். நூறு பேரு வந்து போற ரோட்டுல, பஸ் ஸ்டாப்ல, பார்க்ல, பீச்சுல ரொமான்ஸ் தேவையானது இல்ல.

வயிறு எரியும்! ரெண்டாவது என்னன்னா… ஒரு உதாரணம் எடுத்துக்குவோம்… உங்கனால சாப்பிட முடியும், கையில காசும் இருக்கு… பிட்சா, பிரியாணின்னு எத வேணாலும், எவ்வளவு வேணாலும் வாங்கி சாப்பிடலாம். நாங்க என்ன சொல்றோம்னா ஒன்னு வீட்டுக்கு வாங்கிட்டு போய் சாப்பிடுங்க.. இல்ல ஹோட்டலுக்கு உள்ள உட்கார்ந்து சாப்பிடுங்க… அதில்லாம, அந்த பிட்சா, பிரியாணிய வாழ்க்கையில பார்த்திடாத, அதுக்காக ஏங்கி கிடக்கிற மக்கள் முன்னாடி அத சாப்பிடணுமா.. அப்படி அது அவசியமா.. ? புரியல… ஊரு உலகத்துல காலாகாலமாக சிங்கிளா வாழ்ற ஜீவன்கள் எவ்வளவோ இருக்கு அவங்க மனசு புன்படுற மாதிரி பொது இடத்துல நின்னு தான் ரொமான்ஸ் பண்ணனுமா?

வைரல் ஆக்கிடுவாங்க! அப்படியே இல்ல என் தங்கம் என் உரிமை மாதிரி… என் லவ்வர் என் இஷ்டம்ன்னு பொது இடத்துல இருந்துட்டு ரொமான்ஸ் பண்றாங்கன்னு வெச்சுப்போம். காலம் முன்ன மாதிரி இல்ல பாஸ்… பாத்ரூம்குள்ளே கேமரா வெச்சு ரெகார்ட் பண்றாங்க… ரோட்ல ரொமான்ஸ் பண்ணா ரெகார்ட் பண்ண மாட்டாங்களா? நிச்சயம் பண்ணுவாங்க. அப்பறம் ரோட்ல இருக்கவன் மட்டும் பார்த்தது இல்லாம, இன்டர்நெட் முழுக்க பார்ப்பாங்க. நீங்க வாட்ஸ்-அப்ல ஃபார்வேர்ட் பண்ணது போக, உங்களுக்கு உங்க வீடியோ வாட்ஸ்-அப்ல ஃபார்வேர்ட் ஆகி வரும். இதெல்லாம் நமக்கு தேவையா?

யாரு வேணாலும் பார்க்கலாம்… சரி! யாருமே வீடியோ எடுக்கலன்னு வெச்சுக்கோங்க… உங்க ரொமான்ஸ் எல்லாம் ஒதுக்குப்புறமா வெச்சுக்கிட்டா மக்களுக்கும் கஷ்டம் இல்ல, உங்களுக்கும் கஷ்டம் இல்ல. இதுவே நீங்க பொது இடத்துல தான் ரொமான்ஸ் பண்றேன்னு அடம் பிடிக்கிறீங்கன்னு வெச்சுக்குங்க.. உங்கள யாரு வேணாலும் நோட்டம் விடலாம்.. நோட்டம் விடுறவன் உங்கள யாருன்னு தெரியாதவனா இருக்கலாம், உங்க பக்கத்து வீட்டு காரரா இருக்கலாம். உங்க மாமாவோட நண்பரா இருக்கலாம்.. ஏன் சில சமயம் உங்க அப்பா, அம்மாவே இருக்கலாம். அந்த மாதிரியான சமயத்துல பப்ளிக்கா ரொமான்ஸ் பண்ணி சிக்கிக்காம அடக்க ஒடக்கமா இருக்கனுமா இல்லையா… இல்லாங்காட்டி தேவையில்லாத தலைவலி தான் வரும்.

சாபம் தேவையா? ஏற்கனவே நாம சிங்கிள்ஸ் பத்தி பேசி இருந்தோம் அவங்க கடும் பசியில இருக்கும் போது, அவங்கள பார்க்க வெச்சு சாப்பிடுறது தப்புன்னு பாடம் எடுத்திருந்தோம். எல்லாருமே ஏக்கமா பார்த்துட்டு கண்ண கசக்கிட்டு போக மாட்டாங்க. சிலர், வயிறு எரிஞ்சு கூட சாபம் விடுவாங்க. இதெல்லாம் நமக்கு தேவையா.. அதுக்கு பேசாமா பொது இடத்துல கைய கோர்த்து நடந்து போயிடலாம். எதுக்கு தேவை இல்லாம சில்மிஷம் பண்ணிக்கிட்டு.

பேரு கெடும்… ஒருவேளை பொது இடத்துல நீங்க ரொமான்ஸ் பண்ணி மாட்டிக்கிட்டீங்கன்னு வெச்சுப்போம்.. நான் துப்புனாலும் தொடச்சிப்பேன்னு சொல்ற ஆளா நீங்க இருந்தாலுமே கூட… அது உங்களுக்கு மட்டும் தான் அசிங்கம்ன்னு நினைக்கிறீங்களா? தெரிஞ்சவரா இருந்து நேரா பெத்தவங்க கிட்ட வத்தி வைப்பாங்க. தெரியாதா ஆளா இருந்தாலும்.. வளர்ப்பு சரியில்லன்னு பெத்தவங்கள தான் டைரக்டா திட்டுவாங்க. நம்ம பண்ண தப்புக்கு பெத்தவங்க மானம் போகனுமா?

ஒருவேளை… இது நடக்கும்னு சொல்லல… ஆனா இது நடக்க நிறையா வாய்ப்பு இருக்கு. ஒருவேளை ஏதேனும் கருத்து வேறுபாடு, பிரச்சனை வந்து காதல் அம்பேல் ஆகிட்டா… அடுத்து வேற யாரையாவது லவ்வோ, கல்யாணமோ பண்ணிக்கிட்டா… அந்த ஜோடி / துணை கூட ரோட்டுல சும்மா போனாலும் கூட… அட இவன் / இவள் அன்னிக்கி அவன்கூட / அவள் கூட சுத்திட்டு இருந்தாலேன்னு ஒரு பக்கம் நாலு பேரு பேசுவாங்க. இன்னொன்னு.. தேவை இல்லாம நம்ம துணைக்கும் கெட்ட பேரு வரும். அதனால…. பொது இடத்துல எப்படி எச்சில் துப்புறது, குப்பை போடுறது தப்போ… அதே மாதிரி தான் அநாகரீகமா கண்ட இடத்துல தொட்டுட்டு, கட்டிப்பிடிச்சுக்கிட்டு கிஸ் பண்றதும், சில்மிஷம் பண்றதும் தப்பு.