Home பெண்கள் பெண்குறி பெண்ணின் அந்த இடத்தில் கருமையா? இதோ சூப்பரான டிப்ஸ்

பெண்ணின் அந்த இடத்தில் கருமையா? இதோ சூப்பரான டிப்ஸ்

40

love-and-sex-resizedபெண்களுக்கு முக்கியமாக அந்தரங்க உறுப்புகளில் அதிகமாக கருமை நிறங்கள் ஏற்படும்.

இதற்கு முக்கிய காரணம் பெண்களின் அந்த இடத்தில் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை ஏற்படுகிறது.

இதனால் அந்த இடங்களில் இறந்த செல்கள் அதிகமாக தேங்குகின்றது.

அந்த இறந்த செல்கள் வெளியேற முடியாமல் இருப்பதால் அந்தரங்க இடத்தில் கருமை நிறங்கள் அதிகரிக்கிறது.

எலுமிச்சை சாறு

பெண்களின் அந்தரங்க உறுப்பில் கருமை நிறம் இருக்கும் இடத்தில் தினமும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, காட்டன் துணியைப் பயன்படுத்தி தடவி, பின் 5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

பின் அந்த இடத்தில் அரிப்பு மற்றிம் எரிச்சல் ஏற்பட்டால் தேங்காய் எண்ணெயைத் தடவ வேண்டும்.

இதே போல தினமும் ஒரு நாளைக்கு மூன்று முறை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

கற்றாழை

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, பின் 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, நீரில் நனைத்த பஞ்சைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும்.

இதனை ஒரு நாளைக்கு தினமும் மூன்று முறை செய்து வந்தால், விரைவில் கருமை நிறம் மறைந்து விடும்.

அரிசி மாவு

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, அதோடு சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீரீல் நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும்.

சந்தனம் மற்றும் ஆரஞ்சு

1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல செய்து கொண்டு, பின் அந்த பேஸ்டை அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

தயிர்

தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

இப்படி ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளைகள் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து கொண்டு, மென்மையாக இருக்கும் அந்தரங்க உறுப்பின் பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் அந்த இடத்தை துடைக்க வேண்டும்.

இதனால் அந்த இடத்தில் கருமை நிறம் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தேங்காய் எண்ணெய்

பெண்களின் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை நீக்கி, பின் அந்த இடத்தில் பால் பயன்படுத்தி துடைக்க வேண்டும்.

பின் அந்த இடத்தில் தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமை நீங்கிவிடும்.