Home சூடான செய்திகள் பெண்களை ஆத்திரமடைய வைக்கும் ஆண்களின் 15 செயல்கள்!

பெண்களை ஆத்திரமடைய வைக்கும் ஆண்களின் 15 செயல்கள்!

17

“ஒவ்வொரு பொண்ணுக்கு ஒவ்வொரு ஃபீலிங் மச்சி…” இது வசனம். ஆனால், எல்லா பெண்களுக்கும் ஆண்கள் மத்தியில் பிடிக்காத விஷயங்கள் பொதுவாக தான் இருக்கின்றன. ஏன் என்றால் நம்ம டிசைன் அப்படி. ஆண்கள் ஒரு சில செயல்களில் ஈடுபடும் போது பெண்களுக்கு பொத்தாம்பொதுவாக அப்படி ஒரு ஆத்திரம் பீறிட்டுக் கொண்டு வருகிறதாம். அது என்ன செயல்கள் என்று இங்கு காணலாம்…

அதே கண்கள்! பேசி கொண்டிருக்கும் போது கண்களால் கண்ட இடத்தை நோட்டம் விட்டால் பெண்கள் ஆத்திரம் அடைவார்கள்.

போர்வை! இது மனைவிகள் செக்ஷன்: உறங்கும் போது போர்வையை முழுவதுமாக அவர்கள் பக்கம் இழுத்து போர்த்தி கொள்ளும் போது!

நகைச்சுவை! நகைச்சுவை என்ற பெயரில் காட்டு மொக்கை போடும் போது…

பழைய காதலியுடன் பேசுவது! பழைய காதலியுடன் நட்பு பாராட்டுகிறேன் என கடலை வறுக்கும் போது…

அதிகபிரசங்கி! என்ன நடக்கிறது, என்ன பிரச்சனை என தெரியாமல் அதிகபிரசங்கியாக பேசும் போது…

உணர்ச்சிகள்! எந்த விதமான உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கும் போது.. (எல்லா சூழலிலும்)

தவறான பெயர்! அவர்களை வேறு பெண்ணின் பெயர் வைத்து அழைக்கும் போது…

பொறுமை! அவர்கள் மேக்கப் அல்லது உடை உடுத்தும் போது பொறுமை காக்க மறக்கும் போது.

ஃபேஷன்! ஃபேஷன் என்ற பெயரில் கிறுக்குத்தனமாக ஹேர் ஸ்டைல், கன்றாவியான உடை அணிந்து வரும் போது…

அகம் – புறம்! முகத்திற்கு முன் ஒரு மாதிரியும், முதுகுக்கு பின் ஒரு மாதிரியும் விமர்சனம் செய்யும் போது…

கார், பைக்! தங்களை விட அதிகமாக காய், பைக்கை நேசிக்கும் போது…

நாயை வெறுத்தால்! தாங்கள் ஆசையை வளர்க்கும் நாயை வெறுத்து, நக்கலடித்து பேசும் போது.

மொபைலை நோண்டினால்! தாங்கள் உடன் இருக்கும் போது மொபைலையே மணிக்கணக்கில் நோண்டி கொண்டிருக்கும் போது…

மூளை விளையாட்டு! பெண்களை குழப்பமடைய வைக்க ஆண்கள் பல சமயங்களில் மூளை விளையாட்டில் ஈடுபடுவார்கள். பதில்களை மாற்றி கூறி, சம்பவங்களை மாற்றி கூறி மழுப்பி குழப்பம் அடைய செய்வார்கள். இது பெண்களை பெருமளவில் ஆத்திரமடைய வைக்கும்.

குடி! லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்! குடியே கதியென இருக்கும் போது!