Home காமசூத்ரா படுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே!

படுக்கை அறையில் பாடம் நடத்த வேண்டாமே!

39

எல்லாம் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை அதேபோல் எதுவும் தெரியாதவர்களும் இருக்கமாட்டார். சில விசயங்களில் ஜீனியசாக இருப்பவர்கள் கூட படுக்கை அறையில் நர்சரி மாணவர்களாகத்தான் இருப்பார்கள்.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்யப் போய் அப்புறம் சொதப்பலாகிவிடும். சந்தோசத்தை எதிர்பார்த்து படுக்கை அறைக்குள் நுழைந்தவர்கள் சங்கடத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே படுக்கை அறையில் தேவையற்ற பரிசோதனைகள், அலட்சியங்களை விட்டுவிட்டு இயல்பாக எளிமையாக கையாண்டால் உறவை சந்தோசமாக உற்சாகமாக அனுபவிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

உடனே முடிக்காதீங்க
ஆண்களுக்கு எளிதில் உச்சக்கட்டம் எட்டிவிடும். பெண்களுக்கு சற்று நேரம் பிடிக்கும். அதான் முடிஞ்சி போச்சே அப்புறம் என்ன என்பதுபோல் ஆண்கள் எழுந்து போய்விடுவார்கள். இது பெண்களின் மனதை பாதிப்பிற்குள்ளாக்கிவிடும். எனவே ஆண்கள் உச்சநிலையை அடைந்த பின்னரும் பெண்களுக்கு கிளைமேக்ஸ் வரும் வரை கட்டி அணைத்து கொண்டிருக்கலாம். ஜாலியாக பேசி அவர்களை ஆசுவாசப்படுத்தலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஓவர் செக்ஸ் வேண்டாமே
சில பெண்கள் மென்மையானவர்கள் அவர்களுக்கு அதீதமான, கடுமையான பொசிசன்கள் காயத்தை ஏற்படுத்திவிடும். செக்ஸ் என்பது இருவருக்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கவேண்டுமே தவிர ஒருவரை சங்கடப்படுத்தி மற்றவர் சந்தோசப்படக்கூடாது. எனவே உங்கள் துணை ரெடி என்றால் மட்டுமே கடுமையான பொசிசன்களை கையாளவேண்டும்.

பாடம் நடத்த வேண்டாம்
சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை. சில விசயங்களைப் பற்றி தெரியாவிட்டால் கற்றுக் கொடுக்கலாம். அதற்காக ஓவராக படுக்கை அறையில் டீச்சராக மாறி பாடம் நடத்த வேண்டாம். அது எரிச்சலை ஏற்படுத்திவிடும். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக காட்டிக் கொண்டால் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்.

ஜி ஸ்பாட் எது?
உணர்வுகள் அதிகம் கொட்டிக்கிடக்கும் ஜி.ஸ்பாட் பற்றி பலவித தகவல்கள் உலவுகின்றன. உங்களவரின் ஜி.ஸ்பாட் எது என்பதை சரியாக கண்டறிந்து முன்னேருங்கள். அப்போதுதான் சந்தோசத்திற்கு சரியான வழி கிடைக்கும்.

ஒரே மாதிரி வேண்டாமே
எப்பவுமே ஒரே மாதிரி என்றால் போர் அடிக்கத்தான் செய்யும். எனவே கொஞ்சம் இடத்தை மாற்றியோ, படுக்கை அறையின் அமைப்பை மாற்றியோ உறவில் ஈடுபடலாம். யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு உறவில் ஈடுபட்டால் மட்டுமே அந்த உறவில் சந்தோச சங்கீதம் ஒலிக்கும் என்பதை மறக்கவேண்டாம்.