Home சூடான செய்திகள் புதுப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தவர் உன் மேல என் காதல் மாறாது நீ எனக்காக வெயிட் பண்ணு

புதுப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்தவர் உன் மேல என் காதல் மாறாது நீ எனக்காக வெயிட் பண்ணு

39

சென்னிமலை: திருமணமான அடுத்த நாளே புதுப்பெண்ணுடன் ஓட்டம் பிடித்த கவுன்சிலர், மனைவிக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை கந்தசாமிபாளையம் வெள்ளியங்கிரி மகள் கோகிலா (23). பி.காம் பட்டதாரி. திருமணமான அடுத்த நாளே அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலர் செல்வம் (39) என்பவருடன் மாயமானார். செல்வத்துக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மதுரை வழியாக இருவரும் காரில் சென்ற போது எப்போதும் வென்றான் போலீசில் சிக்கினர்.
அப்போது ஓட்டம் பிடித்த இருவரும் விஷ மாத்திரையை தின்று தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் மீட்ட போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் கோகிலாவுடன் ஓடிய கவுன்சிலர் செல்வம் தனது மனைவி, சுதாவுக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பது: Ôஅன்புள்ள மனைவி சுதாவிற்கு, கோகிலா 2010ல் ஒரு பையன லவ் பண்ணினா. அவன் செத்துட்டான். அதனால் வேறு மாப்பிள்ளை எதுவும் வேண்டாம்னு சொல்லி இருந்தாள். ஆனாலும் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. நான் தான் அவளை வற்புறுத்தி திருமணத்துக்கு பணிய வைத்தேன்.

அதே சமயம் 6 மாசம் எந்த உறவும் வேண்டாம் என்று புதுக் கணவரிடம் வலியுறுத்தவும் கூறியிருந்தேன். அவளும் முதலிரவின் போது இதை தெரிவித்துள்ளாள். ஆனால் அவரோ Ôதொடுவேன்Õ என்று அடம் பிடித்துள்ளார். தொட்டால் செத்து விடுவேன் என்று சொல்லி முதலிரவுக்கு மறுத்து விட்டாள். ஆனால் புது கணவரோ, கண்டிப்பாக அடுத்த நாள் தொடுவேன் என்று கூறியுள்ளார். இதனால் நான் சாகப் போகிறேன் என்று கோகிலா என்னிடம் தெரிவித்தாள். இதனால் நான் அதிர்ச்சி அடைந்தேன். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்னையாகி விடும். எனவே நான் அவள எங்காவது கூட்டிட்டு போயிட்டு வர்றேன். வர்றதுக்கு நாள் ஆகும். உன் மேல நான் வச்ச காதல் மாறாது. நீ எனக்காக வெயிட் பண்ணு. கிஷோர், கீர்த்திகாவை பார்த்துக்க, எல்லோரும் என்ன மன்னிச்சுடுங்க. கோகிலா மேல ரொம்ப பாசம் வச்சுட்டேன். நீ சொன்னப்ப நான் கேக்கல, உண்மையா லவ் பண்ணின உனக்கு துரோகம் பண்ணிட்டு நான் போறேன். கண்டிப்பா திரும்பி வருவேன்…. என்னை தப்பா நினைக்காத.

செத்துறலாம் போல இருக்கு. எவ்வளவு நாள் ஆனாலும் நான் வருவேன். கோகிலாவை சாக விடக்கூடாது என்பதுக்காகதான் இப்ப போறேன். அவளும் குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு ஒத்துகிட்டா. சுதா நீ இருந்தா நா இருப்«ன். நீ இல்லேன்னா நானும் கண்டிப்பா செத்துருவேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் விஷ மாத்திரை தின்ற கோகிலாவின் நிலைமை இன்னும் சீரியசாகவே உள்ளது. செல்வம் உடல்நிலை தேறி உள்ளது. அவரிடம் போலீசார் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோகிலா அணிந்திருந்த 30 பவுன் நகை குறித்தும், காரில் அவர்கள் எங்கெல்லாம் சென்று தங்கினார்கள் என்றும் சென்னிமலை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.