Home இரகசியகேள்வி-பதில் பாலியல் இன்பத்தில் முழுத் திருப்தி அடைய பலருடன் உடல் உறவு கொள்ளுவது அவசியம் உண்டா?

பாலியல் இன்பத்தில் முழுத் திருப்தி அடைய பலருடன் உடல் உறவு கொள்ளுவது அவசியம் உண்டா?

182

hyderabad-desi-bhabhi-ki-chut-me-lund-sexபாலுறவிற்கும், காம வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

ஒருவர் உயிர் வாழ உணவு தேவைப்படுகிறது. தன் தேவையை உணர்ந்து போதுமான அளவு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டு வாழ்பவர் மகிழ்ச்சியுடன் நோய் இல்லாமல் இருப்பர். ஆனால் பசியில்லாத போதும் உணவை உண்பவருக்கு நோய்கள் வருவது உண்மை. இந்த உண்மை பாலியலுக்கும் பொருந்தும். தன் உடலுக்கும், உள்ளத்திற்கும் உடல் உறவு தேவையாக இருப்பதை உணர்ந்து, அதைத் தேவையான வேளைகளில் அனுபவிக்க வேண்டும். அவ்வாறு உள்ளோருக்கு மன மகிழ்ச்சியும், மன அமைதியும் அமையும். அப்படியில்லாமல், காண்போரை எல்லாம் புணரத்துடிப்பது காமவெறி ஆகும். இது மேலும் மேலும், வக்கிர உணர்வைத் தூண்டி மனிதனையும், சமூகத்தையும் அழிக்கும். இத்தகைய காமவெறி, உடல் மற்றும் மன வியாதிகளை ஏற்படுத்துவதோடு, முழுமையான பாலியல் உடல் உறவு இன்பத்தையும் அடையச் செய்யாது.

66.காம வெறியால் ஏற்படும் சிக்கல்கள் யாவை?

காமவெறியோடு இருப்பவர்கள் பொதுவாக மன அமைதி இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் எந்நேரமும் உடலுறவு பற்றிய சிந்தனையில் இருப்பார்கள், அவதிப்படுவார்கள். இதனால் இயல்பான உடல் வியாதிகள் அவர்களுக்கு உண்டாகின்றன. காம வெறியின் காரணமாக, இவர்கள் விபச்சார பெண்களுடனோ, வியாதியுள்ள பெண்களுடனோ உறவு கொண்டால், பாலியல் வியாதிகள் வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் பொதுவாகவே சமுதாயத்தாலும், வீட்டிலுள்ளவர்களாலும் எதற்கும் உபயோக மற்றவர்கள் என்று ஒதுக்கப்படுபவர்கள். இதனால் இவர்கள் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மனப்பாதிப்பு அடைந்த இவர்கள் குழைந்தைகளைக்கூட உடல் உறவுக்குக் கட்டாயப் படுத்திப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள். இப்படிப் பட்டவர்கள் மனவியாதி பிடித்தவர்கள் என்பதால் அவசியம் மருத்தவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

67. பெண்களின் கால்களில் அல்லது கைகளில் அல்லது முகத்தில் நிறைய முடி வளர்ந்திருந்தால் (ஆண்களுக்கு மார்பு, மீசை, தாடி, ஆகியவற்றிலும் முடி அதிகம் வளர்ந்து இருந்தாலும்) அத்தகைய வர்கள் பாலுணர்வு அதிகம் உள்ளவர்கள் என்பது உண்மையா?

பொதுவாக பெண்களுக்கு, கால்கள், கைகள், முகம் பொன்ற இடங்களில் அதிகமாக முடி வளர வாய்ப்பு இல்லை. ழஐசுருகூஐளுஆ-என்கிற நாளமில்லாச் சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளால் ஆஹடுநு ழடீசுஆடீசூநுளு அதிகமாக சுரப்பதால் அதிக முடி உடலில் வளர்கிறது. ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், முடி வளர்வதற்கும், பாலுணர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவ்வகையில் பெண்கள் மீசை, தாடி, கை, கால்களில் அதிகமாக முடி வளர்வதை தடுக்க தகுந்த மருத்துவரை அணுகி குணப்படுத்திக் கொள்ளலாம்.

68. எத்தனை வயது வரை பாலுறவில் ஈடுபடலாம்?

பாலுறவில் ஈடுபட வயது வரம்பு இல்லை. பாலியல் பருவம் தொடங்கி மனிதன் மரணம் அடையும் வரையுலும் உடலுறவில் ஈடுபடலாம். அதற்கான உடல் நலனும், மனநிலையும் அமைதல் வேண்டும். நல்ல உணவும், தேவையான பாலுறவும் தொடர்ந்து கிடைத்தால் அவர்கள் நீண்ட நாட்கள் வாழ்வார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

69 கருப்பையை நீக்கிய பிறகு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்குமா?

கருப்பை நீக்கிய பிறகும் உடலுறவில் பெண்களுக்கு நாட்டம் இருக்கும். கர்ப்பை என்பது குழந்தை (கரு) தோன்றி வளர்ச்சியடையக் கூடிய உறுப்பு ஆகும். எனவே குழந்தை (கரு) உண்டாவது மட்டுமே இதனால் தடை செய்யப்படுகிறது. இதனால் உடலுறவில் நாட்டம் பாதிக்கப்படாது. ஏனென்றால் பாலுணர்வை தூண்டும் உணர்வு நரம்புகள் பெண்குறியில் இருக்கின்றன. அவை பாலுணர்வை எப்போதும்போல் தூண்டச் செய்கின்றது. கருப்பைக்கும் பாலுணர்விற்கும் தொடர்பு இல்லை.

70. மாத விலக்கு நின்ற பிறகு பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்குமா?

மாத விலக்கு நின்ற பிறகும் பெண்களுக்கு உடலுறவில் நாட்டம் இருக்கும். பெண்களுக்கு பொதுவாக 45 வயதையொட்டி மாத விலக்கு நின்று விடும். பல பெண்கள் இதற்குப் பின் உடலுறவு கொள்வது தவறு, பாவம் என்று நினைக்கிறார்கள். இத்துடன் தங்கள் குழந்தைகள் வயதுக்கு வந்தவுடன், தாம் உடலுறவு கொள்வது தவறு என்றும் நினைத்து உடலுறவை நிறுத்திக் கொள்கிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலோர் தங்களை ஆழ்ந்த கடவுள் பக்தைகளாகக் காட்டி கோயில் குளங்களுக்குச் செல்வது, உணர்ச்சி வசப்படுவது, கோபப்படுவது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள். எனவே மாதவிலக்கு நின்ற பிறகும் பெண்கள் உடலுறவு கொள்வது இயற்கையானது.

71. ஆண்கள் கருத்தடை சாதனங்களுடன் உறவு கொள்வது அவர்களுக்கு முழு இன்பம் அளிக்குமா ?

கருத்தடை சாதனங்கள் இயற்கையாக உடலுறவு கொண்டு இன்பம் அனுபவிக்க சிறு தடையாகவே இருக்கின்றன. அதன் காரணமாக முழு இன்பம் அடைவது இயலாததுதான். ஆனாலும், இன்று பரவி வரும் மக்கள் தொகை மற்றும் நோய் போன்ற காரணங்களை கருத்தில் கொள்ளும் போது கருத்தடை சாதனங்கள் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன.

72 .பாலியல் இன்பத்தில் முழுத் திருப்தி அடைய பலருடன் உடல் உறவு கொள்ளுவது அவசியம் உண்டா?

உடலுறவு கொள்வோர் முதலில் அவர்களைப் பற்றிய வீணான பயம், சந்தேகம் இவற்றை அகற்ற வேண்டும். ஒருவரை யொருவர் முழுவதுமாக (பாலியல் தேவைகள் உள்ளிட்டு) புரிந்து கொள்ளவேண்டும். மேற்சொன்ன புரிதலின்றி (ரனேநசளவயனேiபே) பலருடன் உறவு வைத்துக் கொண்டாலும், யாரும் முழுத் திருப்தியை அடைய முடியாது. எனவே பாலியல் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டே பலருடன் உடலுறவு கொள்ள அலைவது பாலியலில் முழு திருப்தி அடையாததற்க்கான அடையாளம் ஆகும்.

73. உடலுறவின் போது முதலில் இன்பத்தை அடைவது ஆணா? பெண்ணா?

இயற்கையாக, உடலுறவு உச்ச இன்பம் ஆணுக்கு விரைவிலும், பெண்ணுக்குச் சற்றுத் தாமதமாகவும் ஏற்படும். இருவருக்கும் ஒரே சமயத்தில் உச்ச இன்பம் ஏற்படுவதற்க்கு இருவரின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலோடு கூடிய பரிமாற்றம் அவசியம் ஆகும்.

74. உடலுறவிற்கு (ஆண்,பெண் இருவருக்கும்) சரியான வயது எது ?

ஆண்-பெண் இருபாலரும், வயதுக்கு வந்த பிறகு உடற்கூறு ரீதியில் உடலுறவு கொள்ளத் தயாராகிறரர்கள். ஆனால், உடல் உறவில் பாலியல் இன்பம் பெறுவதற்கு ஏற்ற உடலியல் ரீதியான வளர்ச்சி அவசியம். எனவே பொதுவாக ஆணுக்கும், பெண்ணுக்கும் சுமார் 22 வயது இருத்தல் நலம்.

75. பெண் – ஆண் ஒருவரை ஒருவர் வசப்படுத்த முத்தம் எங்கு கொடுக்க வேண்டும் ?

யாரும் யாரையும் வசப்படுத்த முடியாது. வேண்டுமானால் அன்பு கொள்ளச் செய்யலாம். அதற்கு ஒவ்வொருவரின் தனிப் பட்ட, சரியான உணர்வுகளுக்கு மரியாதை கொடுப்பதாலேயே அன்பு கொள்ளச் செய்யமுடியும். குறிப்பாகப் பெண், ஆண் மீது ஈடுபாடு கொள்ள அவளது சுயமரியாதை உணர்வை மதித்தாலே போதும். பழகிவிட்டால், சம்மதம் அளித்தால், விரும்பும் இடங்களில் முத்தம் கொடுத்துக் கொள்ளலாம்.

76. உடல் உறவிற்க்கு குளிர் காலம் – கோடை காலம் ஏற்றது எது ?

உடலுக்கு கோடையில் குளிர்விக்கும் தன்மையும், குளிர் காலத்தில் உடல் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மையும் இயற்கையாக உண்டு. எனவே உடல் உறவிற்கு ஏற்றது கோடை காலமா? குளிர் காலமா? என்பதை முடிவு செய்ய முடியாது. இது சம்பந்தப்பட்ட இருவரின் மனநிலையைப் பொறுத்தது.

77. பகலில் அல்லது இரவில் எந்த நேரத்தில் உடல் உறவு கொள்ளலாம்?

கூச்சம் போன்ற காரணங்களினால் மனம் பாதிக்கப் படாமல் இரு பாலருக்கும் இருக்கும் நிலை இருந்தால், பகல் இரவு இரு நேரங்களிலுமே உடலுறவு கொள்ளலாம். இரவில் அதிக இன்பம் என்றோ, பகலில் குறைந்த இன்பம் என்றோ எதுவும் கிடையாது. உடலுறவிற்கு பொதுவாக இரவு நேரம் ஏற்றது. ஏனென்றால் அது

1. அமைதியான நேரம் 2. தனிமையான சூழ்நிலை (யாரும் வர மாட்டார்கள். அதனால் யாருடைய தொந்தரவும் இருக்காது.), இருவருக்குமே, அது ஓய்வான நேரம். இது போன்ற காரணங் களால் இரவு நேரம் நல்லது. இருவரும் உடல் உறவு கொள்ளும் மனநிலை வந்து விட்டால் காலம், நேரம் எதுவும் கிடையாது.

78. ஒரு வாரத்தில் அல்லது ஒரே நாளில் எத்தனை முறை உடலுறவு வைத்துக் கொள்ளலாம்?

இத்தனை முறை என்று எதுவும் கிடையாது. சம்மந்தப்பட்ட இருவரின் உடல் நிலை, மனநிலை, அவர்களின் விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து உடலுறவு கொள்ளலாம்.

79. உடல் உறவுக்கு குண்டான ஆண் / பெண் ஏற்றவரா? ஒல்லியான ஆண் / பெண் ஏற்றவரா?

குண்டான ஆண் / பெண், ஒல்லியான ஆண் / பெண் என்பதெல்லாம் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

1. உடலின் சேமிப்பாற்றல் அதிகமாகி, செலவாற்றல் குறையும்போது, உடல் குண்டாகலாம்.

2. தேவைக்கதிகமான உடல் பருமனாகும்படியான உணவை உட்கொள்ளுவதால் உடல் குண்டாகலம்.

3. உடலின் தேவையான ஆற்றலுக்கும், குறைவான உணவை எடுத்துக்கொள்ளும் போதும், உடலின் சேமிப்பாற்றல் குறைந்து, செலவாற்றல் அதிகமாகும் போதும் உடல் ஒல்லியாக இருக்கும். (இதற்கும் உடலுறவிற்கும் தொடர்பு இல்லை. உடலுறவு என்பது முழுக்க முழுக்க அவரவர் மனம் சம்மந்தப்பட்டதாகும்.)