Home சூடான செய்திகள் திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட தம்பதிகள் கூறும் ஐடியாஸ்!

திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட தம்பதிகள் கூறும் ஐடியாஸ்!

35

NTFqBs0F800x480_IMAGE56194300-(2)திருமணமான புதிதில் அடிக்கடி உடலுறவில் ஈடுபடும் வாடிக்கை இருக்கும். போக, போக இது குறைந்துவிடும். சிலருக்கு உறவில் ஈடுபடுவதில் சலிப்பு உண்டாகும்.
இதனால், பெரிதாக ஈர்ப்பு இல்லாமல் இருப்பார்கள். இதை சரிசெய்ய வேண்டும் என்றால் உடலுறவில் வெறுமென எப்போதாவது தோணும் போது ஈடுபடாமல், அதற்கான சூழ்நிலைகளை உண்டாக்கி, பிறகு ஈடுபட வேண்டும்.

இனி, திருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட சில நடுவயது தம்பதிகள் கூறும் ஐடியாக்கள் பற்றி பார்க்கலாம்…
காலண்டர்-ல் தேதியை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த நாளில் உடலுறவில் ஈடுபட வேண்டும் என்பதை முன்கூட்டியே குறித்து வைத்துக் கொள்வதால்.
நாளுக்கு நாள் மனதில் ஓர் ஆசை மற்றும் வேட்கை அதிகரிக்கும். இதனால், நீங்கள் தாம்பத்தியத்தில் ஈடுபடும் போது ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்த அதே ஈர்ப்பும், இணைப்பும் உண்டாகும்.

ஏதோ செயல்பட வேண்டும் என்று இல்லாமல். அதற்கான சூழல் ஏற்படும் போது உறவில் ஈடுபடுங்கள். இது தான் உணர்ச்சி அளவில் அதிகமாக இன்பத்தை எட்ட உதவும்.
மேலும், பழைய நினைவுகளை அதிகமாக பேசிய பிறகு உறவில் ஈடுபடுவதால் தாம்பத்திய உறவில் உச்சம் அடைய முடியும் என சில தம்பதிகள் கூறுகின்றனர்.

பருவ வயதுக்கு செல்லுங்கள். ஆம், உங்களுக்கு வயதாகிவிட்டது என்ற நினைப்பை மனதில் இருந்து அகற்றிவிட்டு, நீங்கள் இன்றும் இளம் வயது நபர் தான் என்ற நினைப்புடன் உறவில் ஈடுபடுவது உறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது என தம்பதிகள் சிலர் தெரிவித்துள்ளனர்.

மனதளவில் தயாராகுங்கள். உடல் மட்டும் தயாராவது போதாது. கணவன், மனைவி இருவரும் மனதளவில் தயாரான பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடுவது தான் நடுவயதில் உறவில் ஈடுபடும் போது அதிகளவு இன்பத்தை உணர உதவும்.

மறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். ஒருவயதுக்கு மேல் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் குறைய துவங்கும்.
எனவே, கணவன், மனைவி யாராக இருப்பினும், ஒருவர் மறுக்கும் போது அதை ஏற்றுக் கொள்ளுங்கள். இருவரும் இனைந்து செயல்படுவது தான் சிறந்தது.

ஒருவர் மற்றொருவருக்கு பிடித்த விஷயங்களை செய்து, அதன் பிறகு உறவில் ஈடுபட தயாராகலாம். உதாரணமாக அவருக்கு பிடித்த உடை அல்லது உணவு அல்லது இடங்களுக்கு அழைத்து சென்ற வந்த பிறகு உறவில் ஈடுபடுவது உடல் அளவில் மட்டுமல்லாமல், மனதளவிலும் அதிகமாக இன்பத்தை அடைய உதவும். இதனால் தாம்பத்திய உறவு சிறக்கும்.

ஆசைகளை பூர்த்தி செய்யுங்கள். உங்கள் மனைவி உங்களிடம் கேட்கும் விஷயங்களை செய்துக் கொடுத்த பிறகு தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது. இருவர் மத்தியிலும் ஓர் நிறைவு உண்டாகும். இது, உறவு சிறக்க உதவும்.

எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். இளம் வயதில் ஈடுபட்ட திறனுடன் கணவன், மனைவி இருவரும் நடுவயதிலும் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாது.
எனவே, உங்களது எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். எதிர்பார்ப்பு குறையும் போது, மனநிறைவு அதிகரிக்கும்.

வெறுமென உடல் ரீதியான இணைப்பில் மட்டும் ஈடுபடாமல் கொஞ்சம் கொஞ்சி பேசி தாம்பத்திய உறவில் ஈடுபடுவது. தாம்பத்திய உறவில் உங்கள் இருவருக்குள் அன்யோன்யத்தை அதிகரிக்க செய்யும்.