Home சூடான செய்திகள் தாம்பத்ய உறவு நீடிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள்

தாம்பத்ய உறவு நீடிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள்

58

கணவன், மனைவிகளுக்கு இடையே ஏற்படும் சிறு பிரச்சினைகள் பெரிய சண்டையாகி இருவருக்கும் பிரிவை ஏற்படுத்தும்.

இந்த நேரங்களில் ஆண்கள் மனைவிகளுக்கு சில முக்கிய விடயங்களை பின்பற்றினால் போது இருவருக்கு உள்ள பாசம், அன்பு அதிகரிக்கும்.

ஏதாவது ஒரு விடயத்துக்காக ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வது வாழ்க்கைக்கு நல்லது. பாராட்டுவதால் உங்கள் மீது நெருக்கத்தை அதிகரிக்கும்.
பாசமாக பேசுவது, அணைப்பது, முத்தமிடுவது இருவரின் அன்பை வெளிப்படுத்தும். இதை இருவரும் பின்பற்றினால் பாசம் அதிகரிக்கும்.
ஒருவரது குறையை எந்தச் சூழலிலும் மற்றவர் குறிப்பிட்டுப் பேசக் கூடாது. முடிவுகள் எடுக்கும் போது மனைவிகளிடம் பகிர்ந்து சரியா? தவறா? என்று ஆலோசிப்பது நல்லது.

ஒருவர் ஏதாவது ஒரு விடயத்தை சொல்லத் தொடங்கும்போது, மற்றவர் காதுகொடுத்து கேட்க வேண்டும். தன் பேச்சுக்கு மதிப்புள்ள இடத்தில் நம்பிக்கை பலப்படும்.
தாம்பத்தியத்தில் ஒருவருக்கு விருப்பம் இல்லாதபோது, மற்றவர் தொந்தரவு செய்ய வேண்டாம். இருவருக்கும் தேவையான ஒன்று என்பதால், மற்ற பிரச்னைகளை மறந்து இதற்கும் நேரம் ஒதுக்குங்கள்.
பிடித்த இடங்களுக்குச் கூட்டிச் செல்லுங்கள். உங்கள் வாழ்வின் ஸ்டைலையும் அவ்வப்போது மாற்றிக்கொள்ளுங்கள்.

குடும்பத்தைப் பொறுத்தவரை தனி ஒருவரின் விருப்பத்தின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கலாம். இருக்கும் உறவுகளுக்குள் நட்பின் தன்மை மாறாமல் பார்த்துக்கொள்ளும்போது புதிய துணையோ, இணையோ தேவையிருக்காது.
ஒவ்வொருவரும் வீட்டில் இருப்பதைவிட வேலையிடத்தில் அதிக நேரம் இருக்கிறோம். அந்தச் சூழலில் நட்புடன் பழகுபவர்களுக்கு இடையில் ஆழமான புரிதல் இருக்க வாய்ப்புள்ளது. அதுபோன்ற உறவுகளை நட்பின் எல்லைக்குள் நிறுத்தவும். எல்லை தாண்டியே பழகினாலும் அது உரிமையற்ற உறவுகள் தான்.
எப்போதும் மனதுக்குள் ஒரு பயத்தையும், குற்ற உணர்வையும் ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் தீய உறவுகள் கணவன் மனைவிக்குள் விரிசலை ஏற்படுத்தும். எல்லைக் கோட்டை தாண்டாமல் இருப்பதே பாதுகாப்பானது.

காதலெல்லாம் திருமணத்துக்கு பிறகு கிடையாது என்று நினைக்க வேண்டாம். நம் மனசு எப்போதும் குழந்தைதான். கணவன், மனைவிக்குள் காதல் பகிர்ந்தல்கள் இருக்கும் வரை அந்த அன்புக் கோட்டைக்குள் அந்நியர் நுழைய முடியாது. வாழ்வின் கடைசி மூச்சு வரை காதலியுங்கள்.
கணவன், மனைவி இருவரும் அவரவர் வேலையில் இலக்குகளை நிர்ணயித்து தீவிரம் காட்டுங்கள். ஒருவர் இலக்கை எட்ட மற்றவர் தோள் கொடுங்கள்.
பிறந்த நாள், திருமண நாள் என முக்கிய நாட்களை மறந்துவிடாமல் அன்பளிப்பு கொடுங்கள். ‘நீ என் வாழ்வில் அவ்வளவு முக்கியம்’ என்பதைப் புரியவையுங்கள்.