Home இரகசியகேள்வி-பதில் திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி?

திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி?

151

திருப்தியான செக்ஸ் சுகம் கிடைப்பது எப்படி?
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஏற்பட்ட செக்ஸுவல் எக்ஸ்பீரியன்ஸ் அவர்களுடைய வாழ்க்கை பாதையையே திசை திருப்பியதற்கு எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.இயந்திரத்தனமாக வாழ்க்கை நடத்தும் பல தம்பதிகள் செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்பிலும் அதே வேகத்தை காட்டிவிட்டு வாட் நெக்ஸ்ட்? என்பதில் மூழ்கி விடுகிறார்கள்.

ஆண்கள் எங்களுடைய உணர்ச்சிகளை, ஏக்கங்களை புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கமான கேள்வியை எழுபபியிருக்கிறார்கள் பெண்கள். இது 75% பெண்கள் கேட்க கூடிய எதிர்பார்ப்பு கேள்விக்கு ஆண்களிடம் இருந்து விடை கிடைக்குமா என்றால் இல்லை. திருமணத்துக்கு முன்பு டீன் ஏஜில் இருந்த செக்ஸ் ஆர்வம், திருமணம் என்ற கூண்டு சிறைக்குள் அடைப்பட்ட பின்பு சிலருக்கு குறைந்துவிடுவது உண்மை. அதற்கு காரணம் குடும்ப கவலை, கூட்டு குடும்பத்தில் எழும் பிரச்சனைகள், மன விரிசல், இன்னும் எத்தனையோ சொல்லலாம்.

பிரச்சனைகளுக்கு மத்தியில் போராடும் ஆண்களுக்கு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபாடு குறைவது சகஜமே. இதனால் பிரச்சனைகளை தாண்டிய செக்ஸ் உறவு அதாவது வேறு சானலில் அவனது மனம் தாவுகிறது. தன் மனைவியோடு உறவு வைத்துக் கொள்வதையே தவிர்க்கிறான், அல்லது விலகுகிறான். ஆணோ பெண்ணோ தாம்பத்ய உறவில் ஈடுபட முற்படும் போது எல்லா தலைவலிகளையும் ஒதுக்கி வைத்துவிட வேண்டும். குடும்ப பெண்களின் மனக்கவலையே, எங்களது டயர்டை ஹஸ்பண்ட் புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்பதுதான்.

அனிமல் ஆக்ட் மாதிரி ஃபோர்ஸ் பண்ணிட்டு போ ிடறாங்க என்று கோபத்தோடு கேட்கும் பெண்களும் உண்டு. இந்த ப்ராப்ளம் நிறைய பேமிலியில இருக்கு. ஆண்களை பொறுத்த வரையில் செக்ஸ் மூட் வந்துவிட்டால் நேரம், காலம் பார்ப்பது கிடையாது என்பது நிறைய பெண்கள் சொல்கிற ஸ்டேட்மென்ட். மனைவியின் உணர்ச்சி களையும் புரிந்து கொண்டு சந்தோஷபடுத்தி உறவு கொள்ளும் ஆண்கள் மிகக்குறைவு. செக்ஸ் ஆக்ஷன்ல ஆண்கள் சர்வாதிகாரியா இருக்கனும்னு நினைக்கிறாங்க. அது அன்பு கலந்த அரவணைப்பு, உணர்ச்சியை புரிந்து கொண்டு ஈடுபடுவதிலும் இருக்கு. அதற்காக ஒன் சைட் திருப்தி மறுபக்கம் சித்ரவதையாக இருக்க கூடாது.

சிறு சிறு விஷயங்களுக்கு டாக்டரிடம் கவுன்சிலிங் போகவும் முடியாது. ஹஸ்பண்டிடம் மனம்விட்டு தங்களது ஹெல்த், உணர்ச்சிகள், மூட் பற்றி பக்குவமாக சொல்லணும். அதையே அட்வைஸ் மாதிரி சொன்னால் ஆண்களுக்கே உள்ள ஈகோவாகி கத்த அரம்பித்துவிடுவார்கள். இது தினமும் நடக்கக்கூடிய, பார்க்கக்கூடிய பிரச்சனை. அதனால், அவர் பிரண்ட்லியாக நல்ல மூட்ல இருக்கும்போது வாழைப்பழத்தில் ஊசியை சொருகிற மாதிரின்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அதுமாதிரி உணர்ச்சிகளை புரிய வைத்தால் தெளிவு பிறந்துவிடும்.இதே போல் ஒவ்வொரு குடும்பத்திலும் புரிந்து கொள்ளும் தன்மை இருந்தால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனையே இல்லை….சந்தோஷம் மட்டும் தான்….

பெண்ணும் பெண்ணும் உறவு கொள்வதற்கான காரணங்கள் என்ன?
இயல்பாக ஒரு ஆண் மீது பெண்ணுக்கோ, பெண் மீது ஆணுக்கோ ஈர்ப்பு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் காதல் வயப்பட்டு, காம ஆட்டம் ஆடுவது என்பது இயல்பானது. ஆனால் மாறாக இரு பெண்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு ஏற்பட்டு காதல் வயப்பட்டு செக்ஸ் உறவில் ஈடுபடும் லெஸ்பியன் கலாச்சாரம் இன்றைக்கு பெருகிவிட்டது.

இன்றைய காலகட்டங்களில் 2 ஆண்கள் ஒருவருக்கொருவர் இணைவதும், பெண்ணும் பெண்ணும் இணையும் கலாச்சாரம் இன்றைக்கு அதிகரித்து வருகிறது. பெண்கள் பிற பெண்களிடம் இருந்து 10 லிருந்து 15 சதவிகிதம் வரை உணர்ச்சி பெற்றிருக்கின்றனராம்.

வெளிநாட்டில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பிற பெண்களின் மீது ஈடுபாடு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 45 சதவிகித பெண்கள் பிற பெண்களை முத்தமிட்டுள்ளனராம்.

50 சதவிகித பெண்கள் பிற பெண்களுடன் உறவில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். போய்சே பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை பேராசியர் எலிசபெத் மோர்கன் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

பெண்கள் ‘லெஸ்பியன்’ உறவை நாடிச் செல்வதற்கான காரணம்

*பெண்ணிடம் பெண் உறவில் ஈடுபடும் போது அவள் அனுபவிக்கும் இன்பம் கூடுதல் சுகத்தை தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் இயற்கையாக ஒர பெண் ஆணுடன் இணையும் போது ஆண் தனது பெண் துணையை சரியான அளவில் உறவில் திளைக்க தயார் படுத்துவதில்லையாம். மாறாக தான் இன்பம் பெறவே மனைவியை ஆண்கள்
பயன்படுத்திக்கொள்கின்றனராம். ஆனால் லெஸ்பியன் உறவிலோ பெண்களுக்கு இடையேயான உறவில் இரு பெண்களுமே சரி சமமாக சுகத்தை பெற்று இன்பக் கடலில் மூழ்கி திளைக்கின்றனராம்.

* உறவின் போது ஆண் ஒரு பெண்ணை கையாளும் போது முரட்டுத்தனமாக இருக்கும். ஆனால் லெஸ்பியனிலோ ஒரு பெண் மற்றொரு பெண்ணை மிகவும் மென்மையாக கையாளுகின்றனர். இதுவும் கூட பெண்ணை பெண்
விரும்ப காரணமாகிவிடுகிறது.

* ஆண்களின் ஓரினச்சேர்க்கையான ஹோமோ செக்ஸில் எய்ட்ஸ் நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் லெஸ்பியனில் எய்ட்ஸ் வரும் வாய்ப்பு குறைவு என்கின்றனர்.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு வெளிநாடுகளில் உரிய அங்கீகாரம் உள்ளது. மாறாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் லெஸ்பியன் உறவு பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவருவதில்லை. இருப்பினும் இயற்கைக்கு
மாறான இத்தகைய உறவுமுறைகளில் சிக்கிக்கொள்ளலாம் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.