Home இரகசியகேள்வி-பதில் பிரச்சினை என்னவென்றாள் அவள் என்னை விட 15 வயது குறைந்தவள்?

பிரச்சினை என்னவென்றாள் அவள் என்னை விட 15 வயது குறைந்தவள்?

130

கேள்வி: எனக்கு ஒரு அத்தை மகள் இருக்கிறாள். அவள் என் மீது அதிக பாசமும் அக்கறையும் கொண்டவள். சில நாட்களின் முன்பு என்னை விரும்புவதாகவும் என்னை முடிவு கூறுமாறும் கேட்டாள். எனக்கும் அவள் மீது அன்பும் பாசமும் இருக்கத்தான் செய்கிறது.

பிரச்சினை என்னவென்றாள் அவள் என்னை விட 15 வயது குறைந்தவள். இந்நிலையில் நான் அவளுக்கு என்ன பதில் கூறுவது? இத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்யலாமா?

பதில்: உங்கள் இருவரது வயதையும் நீங்கள் குறிப் பிடவில்லை. இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கு உங்கள் இருவரது வயதும் அவசியம்.

உங்களுக்கு சுமார் 40 வயதாகவும், உங்கள் முறைப்பெண்ணுக்கு இருபத்தைந்து வயதாகவும் இருந்தால், இந்தத் திருமணத்தைச் செய்து கொள்வதில் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறைவாக இருக்கும்.

ஏனென்றால், இந்தக் காலத்தில், 25 வயதில ஒரு பெண் எடுக்கக்கூடிய முடிவுகள் தீர்க்கமானதாகவும் அந்த முடிவின் சாதக பாதகங் களைத் தீர அலசியும் எடுப்பதாகவே இருக்கும்.

காரணம், தமது இளமைக் காலத்தை நிறைவு செய்யும் நிலையில், இருபத்தைந்து வயதைத் தாண்டும் பெண்களிடம், எதிர்கால வாழ்க்கை குறித்த புரிதல்கள் ஓரளவுக்குத் தெளிவாகவே இருக்கும்.

உங்களது முறைப்பெண்ணுக்கு பதினாறு அல்லது பதினேழு வயதாக இருந்தால், இந்தத் திருமணத்தைத் தவிர்த்துவிடுவது நல்லது.

ஏனென்றால், அவர் தற்போது தான் தனது இளமைப் பருவத்துக்குள் காலடி எடுத்து வைக் கிறார்.

ஒருவேளை அவரது வயதையொத்த ஆண்கள், பெண்களுடன் பழக வாய்ப்பில்லாத நிலையில், சுமார் முப்பது அல்லது முப்பத்திரண்டு வயதுடைய உங்களிடம் அவர் சகஜமாகப் பழக முடிவதால், உங்கள் மீதான நட்பு அவருக்குக் காதலாகத் தெரியலாம்.

நீங்கள் இந்தக் காதலை ஏற்றுத் தொடர்ந்தால் கூட, உங்கள் திருமணத்துக்காக இன்னும் சுமார் ஆறேழு வருடங்கள் காத்திருக்க வேண்டி வரும்.

இந்தக் காலகட்டத்திற்குள், அவருக்குள்ளும் ஒரு முதிர்ச்சி ஏற்படும்.

அப்போது, உங்களைத் திருமணம செய்து கொள்வதான தனது முடிவில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில், உங்கள் இருவருக்குமே அது பாதகமாகவே அமையும்.

இந்த நவநாகரீக உலகில், ஒத்த சிந்தனையுடைய, சமூகம் குறித்த, வாழ்க்கை குறித்த ஒத்த பார்வையுடைய இருவர் திருமணம் முடிப்பதே சிறந்தது.

இருவருடைய எண்ணமும் ஒன்றாக இருப்பதால், அந்த வாழ்க்கையில் பரஸ்பரப் புரிந்துணர்வு நிறைந்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே, கணவன்- மனைவிக்கிடையே பதினைந்து வயது வித்தியாசம் தவிர்க்கப்படுவது நல்லது.

————–

கேள்வி: எனக்குத் திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன் னமும் சுய இன்பப் பழக்கத்தைக் கைவிட முடியவில்லை.

இன்னும் சொல்வதானால், அதில் கிடைக்கும் சந்தோஷம் மனைவியிடம் கூட எனக்குக் கிடைப்பதில்லை. இது தவறா?

பதில்: இல்லை. திருமணமான புதிதில், மனைவியுடனான உறவு திருப்தியும் சந்தோஷமும் தரலாம்.

ஆனால், வருடங்கள் செல்லச் செல்ல, மிகச் சிலருக்கு சலிப்புத் தட்டும். அவர்கள், கற்பனை உலகில் அடிக்கடி சஞ்சரிப்பவர்களாக இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு, புதிதாக ஒருவர் தேவைப்படலாம்.

அதில் பல சிக்கல்கள் இருப்பதனால், சுய இன்பத்தில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.

இவ்வாறான நிலையில், கற்பனையில் தனக்குப் பிடித்த ஒருவருடன் உறவு கொள்வதாக எண்ணங்களை வடிவமைத்துக் கொள்வதால், ஒப்பீட்டு ரீதியில் உங்களுக்கு அதிக சந்தோஷத்தை உணர்கிறீர்கள்.

நீங்களும் இத்தகையவராக இருந்தால், தாராளமாக இரண்டையுமே மேற் கொள்ளலாம். அதில் தவறேதும் இல்லை.

ஆனால், சுய இன்பப் பழக்கத்தைக் குறைத்துக்கொண்டீர்களானால், மனைவியு டனான உறவு உங்களுக்கு நிச்சயமாக அதே பழைய சந்தோஷத்தை மீட்டுத் தரும்.

—————————————————-
கேள்வி: நான் ஒரு பெண். ஒருவரை நீண்டகாலமாகக் காதலிக்கின்றேன். இதைப் பலரும் அறிவார்கள். கிட்டதட்ட ஒரே வீட்டில் வாழாத கணவன் மனைவியாகவே வாழ்கின்றோம். கல்வி நிமித்தமாக 6 மாதங்கள் வெளியூர் செல்ல நேர்ந்தது. வந்து பார்த்தால் அவர் நண்பர்கள், சிகரட், சாராயம் என்று ஆளே மாறிவிட்டார்.

தனிமையில் சந்திக்கும்போது மட்டுமே அன்பாக இருக்கிறார். மற்றபடி தொலைபேசியில் பேசவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ அவருக்கு விருப்பமில்லை. கேட்டால் காசை மிச்சப்படுத்தலாம் என்கிறார். நான் எங்காவது தனியே சென்றால், எனது பாதுகாப்பு குறித்து ஒரு தடவையேனும் தொலைபேசியில் விசாரிக்கமாட்டார். எனக்கு நண்பர்கள் இல்லை. வேலை தேடிக்கொண்டிருக்கிறேன். எனது வாழ்க்கையைச் செம்மையாக்க ஒரு வழி தாருங்கள்.

பதில்: நீண்ட காலமாக நீங்கள் காதலிக்கும் நிலையில் உங்கள் காதல் பற்றிப் பலரும் அறிந்திருக்கும் நிலையில், இன்னும் ஏன் திருமணம் என்ற பந்தத்திற்குள் நுழையாமல் இருக்கிறீர்கள்?

இருவரது வீட்டிலும் சொல்லித் திருமணம் செய்துகொண்டால், ஆரம்பத்தில் அவர் விரும்பாவிட்டாலும்,குடும்பம், மனைவி, குழந்தை என்ற ஒரு கட்டமைப்புக்குள் வருவதற்கு வாய்ப்பு உண்டு அல்லவா?

ஆணோ, பெண்ணோ தனியே இருக்கும்வரை அவர்களது நற்பண்புகள் பற்றி உறுதி கூற முடியாது. அதே வேளை, திருமணம் முடித்து கணவன் மனைவியாக வாழ ஆரம்பித்துவிட்டால் அவர்களை அறியாமலேயே அந்த உறவு அவர்களை ஈர்த்துக் கொள்ளும்.

மேலும் நீண்ட காலம் காதலர்களாகவே இருப்பது ஒரு சலிப்பைத் தர வாய்ப்பிருக்கிறது.

எனவே தாமதிக்காமல் அவரைத் திருமணம் செய்துகொள்ள முயற்சியுங்கள்.

—————————————-
கேள்வி:
நான் ஒரு பெண். எனக்கு 29 வயது. இன்னும் திருமணமாகவில்லை. அண்மைக்காலமாக எனக்கு அதீத உணர்ச்சிகள் ஏற்படுகின்றன. இதனால், எனது உணர்ச்சிகளுக்கு நானே உணவிட்டுக்கொள்கிறேன். இது சரியா? இதனால், திருமணத்தின் பின் குழந்தைப் பேற்றில் ஏதேனும் சிக்கல்கள் வருமா?

கேள்வி: நான் ஒரு ஆண். எனக்கு வயது 20. என்னால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனால், சுய இன்பத்தை நாடுகின்றேன். இதற்கு நீங்கள்தான் ஒரு முடிவு தரவேண்டும்.

பதில்: ஆண்- -பெண் ஆகிய வேறுபாட்டைத் தவிர, உங்கள் இருவரது பிரச்சினையும் ஒன்றே. எனவே உங்களுக்கான பதிலும் ஒன்றே.
இதில் பிரச்சினை ஒன்றும் இல்லையே… இந்த வய தில் உணர்ச்சிகளுக்கு வடிகால் சுய இன்பம்தான். இது இயல்பானதுதான். மேலும், ஒரு பெண் 29 வயது வரை திருமண பந்தத்தில் இணையாத பட்சத்தில், அவருக்கு சுய இன்பம் ஒன்றே சரியான வடிகால். சுய இன்பம் சரியானதுதான் என்றாலும், சுய இன்பத்துக்காக நீங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள் உங்கள் மனதில் ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகின்றனவே அன்றி, இது தவறென்று நினைப்பதுதான் தவறு.
ஒரு பெண் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் குழந்தைப் பேற்றுக்குத் தடை ஏற்படும் என்ற எண்ணமும் தவறானதே.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உடல் வாகு இருக்கும். மேலும், ஒவ்வொருவரது உணவுப் பழக்கங்களும் வித்தியாசப்படும். இதன் அடிப் படையிலேயே உணர்ச்சிகளின் வெளிப்பாடும் இருக்கும். அதற்காக, சுய இன்பத்திலேயே மூழ்கிப்போய்விட வேண் டும் என்பதில்லை.
அதீத வேலைப்பளுவால் சிலரது உணர்ச்சிகள் கட்டுப்
படுத்தப்படுகின்றன. அதிக நேரம் உபரியாக, சும்மா இருந் தால் உணர்ச்சிகள் தலைதூக்க ஆரம்பிக்கும். உங்களது நிலை என்னவென்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை, உங்களுக்கு அதிக நேரம் உபரியாகக் கிடைக்குமானால், அந்த நேரத்தை வேறு எதிலேனும் செலவிட முயற்சியுங்கள். நண்பர்கள் சந்திப்பு, வீட்டு வேலைகளில் பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வது, ஏதேனும் ஒரு குறுகிய காலக் கல்வித்திட்டத்தில் இணைந்து படிப்பது, கலைகளில் ஆர்வம் இருக்கும் பட்சத் தில் அதில் கவனத்தைச் செலுத்துவது என்று உங்களை எப்போதும் பரபரப்பான சூழலில் வைத்துக்கொண்டால், உணர்ச்சிகள் தலைதூக்குவது குறை யும்.
இவற்றை விடுத்து, மிகக் கடுமை யாக உணர்ச்சிகளுக்குத் தடைபோட முயற்சித்தால், நித்திரையில் விந்து வெளி யேறிவிடும். அல்லது, பெண்களைப் பொறுத் தவரையில் வெள்ளைப்படுதல் மற்றும் மனச் சிக்கல்களை உருவாக்கி விடும்.