Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் புருவ முடி அடர்த்தியாக இருக்க செய்யவேண்டிய டிப்ஸ்

பெண்களின் புருவ முடி அடர்த்தியாக இருக்க செய்யவேண்டிய டிப்ஸ்

56

பெண்கள் அழகு:இளம் பெண்கள் முதல் நடுத்தர வயது வரை, எந்த ஒரு வயது வித்தியாசமும் இல்லாமல் பெண்கள் அனைவரும் தங்களது புருவத்தை அடர்த்தியாக வளர்க்க ஆசைக்கொள்வது இயல்பாகிவிட்டது. பொதுவாகவே நாம் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்கின்றோமோ அந்த அளவிற்கு தான் நமது கூந்தலின் ஆரோக்கியம் அமைந்திருக்கும்.

ஆக நம்முடைய அன்றாட உணவில் சுத்தமான பச்சை காய்கறிகள், பழங்கள், பால், தயிர் மற்றும் மோர் ஆகியவைகளை சேர்த்துக்கொண்டாலே முக்கால்வாசி பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபடலாம். இப்பொழுது இயற்கை நமக்கு அளித்திருக்கும் கற்றாழை, வெங்காயம் மற்றும் வெந்தையம் ஆகியவைகளைக் கொண்டு எப்படி புருவத்தை அடர்த்தியாக வளர்ப்பது என்று பார்க்கலாம்.

முதலில் சுத்தமான கற்றாழை எடுத்து அதன் மேல் தோலை அகற்றிவிட வேண்டும். உள்ளே இருக்கும் திரவத்தை (அரைத்திண்மக் கரைசலை) எடுத்து தினமும் இரவு நீங்கள் உறங்குவதற்கு முன் உங்கள் புருவத்திலும் முகத்திலும் பூசிக்கொள்ள வேண்டும். இதே போல் தினமும் செய்துவந்தால், உங்களது புருவம் அடர்த்தியாவதுடன் முகத்தில் இருக்கும் காயங்களும் குணமாகிவிடும். இந்த கற்றாழை திரவத்தை (Gel) பிரித்தெடுக்க நேரம் இல்லாதவர்கள் கவலைப்படவேண்டாம், கற்றாழை கூழ் (Aloe vera Gel) கடைகளிலேயே கிடைக்கின்றன. அதை நீங்கள் வாங்கி உபயோகிக்கலாம், ஆனால் அது எந்த அளவிற்கு தரமானது என்பதனையும் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும்.அடுத்தபடியாக வெங்காயம், இதில் இருக்கும் “கந்தகம்” (Sulphur) கூந்தலின் வளர்ச்சியை அதிகரிப்பதுடன், வேகமாகவும் வளரச்செய்கிறது. வெங்காய சாரில் பருத்தி மொட்டுகளை (Cotton Buds) நனைத்து உங்களது புருவத்தில் தடவிக்கொள்ள வேண்டும். இதில் முக்கியமானது என்னவென்றால் இரவு முழுவதும் வெங்காய சாரினை சுத்தம் செய்துவிடக்கூடாது என்பதுதான். அப்படி செய்துவந்தால் நல்ல பலனை எதிர்ப்பார்க்கலாம்.

வெந்தையத்தை தண்ணீரில் ஊறவைத்து பிறகு நன்கு அரைத்து இரவு தூங்குவதற்கு முன் உங்களது புருவத்தில் பூசிக்கொள்ள வேண்டும், அடுத்தநாள் காலையில் சுத்தம் செய்யவது நல்லது. வேண்டும் என்றால் இதனுடன் பாதாம் எண்ணையை சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உங்களுக்கு நல்ல பலன் விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.