Home பெண்கள் தாய்மை நலம் தாய்பால் அதிகரிக்க தாய்மார் செய்யவேண்டியவை குறிப்பு

தாய்பால் அதிகரிக்க தாய்மார் செய்யவேண்டியவை குறிப்பு

68

தாய் சேய் நலம்:குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தாய்பால் அவசியமான ஒன்று. குழந்தையை பெற்ற தாய்களுக்கு சிறிது நாட்களிலேயே தாய்ப்பால் நின்றுவிடுவதால், குழந்தையின் உடல் வளர்ச்சியில் காலதாமதம் ஏற்படும்.

தாய் பால் அதிகம் சுரக்க அருமையான, எளிமையான பாட்டி வைத்தியம் உள்ளது. இதற்கு தேவையான பொருட்கள் முருங்கைப்பூ, பனங்கற்கண்டு, பால், இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

தேவையான அளவு முருங்கைப் பூவை எடுத்து ஒரு டம்ளர் பாலில் போட்டு கொதிக்க வைத்து, சிறிது நேரம் கழித்து பனங்கற்கண்டை அதில் போட்டு சிறிது நேரம் கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அவற்றை நன்றாக கலக்கி இளம் சூடில் அருந்த வேண்டும்.

இதை அருந்திய அன்றே இதற்கான பலன் தெரிந்து விடும். இதை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை இல்லாமல் இருக்கும்.

தினமும் அருந்த முடியவில்லை என்றால் வாரத்திற்கு ஒரு முறையாவது குழந்தை பெற்ற தாய்மார்கள் இதை அருந்த வேண்டும்.