Home காமசூத்ரா எப்படியான பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும் தெரியுமா?

எப்படியான பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும் தெரியுமா?

123

பெண்கள் குறித்த ஆண்களின் கற்பனைகளுக்கு அளவே கிடையாது. நம் மனம் கவர்ந்த பெண் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட பட்டியலைப் பாக்கெட்டில் போட்டு வைத்திருப்பார்கள். அதேபோலத்தான் உறவின் போதும். பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதிலும் அவர்களிடம் பெரிய பட்டியலே இருக்கிறதாம். அதில் சிலவற்றை இப்போது பார்ப்போம்..
அந்த சமயத்தில் மேக்கப் போட்டால் ஆண்களுக்குப் பிடிக்கவே பிடிக்காதாம். இயற்கையாக,தத்ரூபமாக இருந்தால்தான் ஆண்களுக்குப் பிடிக்குமாம். பொருத்தமான உள்ளாடைகளை அணியும் பெண்களை ஆண்களுக்கு ரொம்பப் பிடிக்குமாம்.
உம்மென்று இருக்கும் பெண்களை விட நன்றாகப் பேசும் பெண்களை ஆண்களுக்குப் பிடிக்குமாம். அதிலும் ஜோக்காகப் பேசும் பெண்களை ரொம்பப் பிடிக்குமாம். மேலும் பெண்கள் அடிக்கடி புன்னகைத்தாலும் ஆண்கள் ரசிப்பார்களாம்.
ஒல்லிக்குச்சியாக இருக்கும் பெண்களை விட பூசினாற் போல இருக்கும் பெண்கள்தான் ஆண்களைக் கவருவதில் முதலிடத்தில் உள்ளனராம். சைஸ் ஜீரோ என்ற பெயரைக் கேட்டாலே ஆண்கள் டென்ஷனாகி விடுவார்களாம். அழகான, வளைவு நெளிவுகளோடு இருக்கும் பெண்களைத்தான் அவர்கள் அதிகம் விரும்புகிறார்களாம். சற்றே குண்டான,பெரிய மார்பகங்களுடன் கூடிய பெண்கள் என்றால் ஆண்களுக்கு ரொம்ப இஷ்டமாம்.
சோகமாக இருக்கும்போது ஆறுதலாகப் பேசும் பெண்களையும், எல்லா செயல்களிலும் உறுதுணையாக இருக்கும் பெண்களை, உறவின்போது வெளிப்படையாக,தான் நினைப்பதை செயல்படுத்தும் பெண்களையும் ஆண்கள் விரும்புவார்களாம்.

செக்ஸ் உறவின்போது ஆண்கள் வெறுக்கும் ஒரு விஷயம், தான் செய்ய நினைப்பது குறித்து மனைவி கிண்டலடிப்பதைத்தான். அதேபோல எல்லாம் எனக்கும் தெரியும் என்பதாக மனைவி காட்டிக் கொண்டாலும் அதை ஆண்கள் ரசிப்பதில்லையாம்.
அப்புறம், படுக்கை அறைக்குள் நுழைந்ததுமே தலைமுடியை கலைத்து ப்ரீயாக விட்டு விடுங்கள். அப்படி இருந்தால்தான் மனைவிமார்களை கணவர்களுக்குப் பிடிக்கிறதாம். அந்த தலைமுடிக்குள் கை விட்டு கோதுவதையும்,விளையாடுவதையும் அவர்கள் அதிகம் விரும்புகிறார்களாம். எனவே உள்ளே நுழையும்போது ஒத்தை சடை, ரெட்டை சடையோடு போவதை தவிர்த்து விடுங்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம். எப்படிப்பட்ட மனசையும் கலைத்துப் போட உதவுவது மல்லிகைப் பூ. அதை தலை நிறைய வைத்துக் கொண்டு உள்ளே மட்டும் போங்களேன்,பிறகு தெரியும் அதன் மகிமை. பெரும்பாலான ஆண்களுக்கு மனைவி தலை நிறைய மல்லிகைப்பூ வைத்திருப்பது பிடிக்கிறதாம். இருப்பினும் சிலருக்கு இதில் இஷ்டம் இருக்காது, எனவே அதை தெரிந்து கொண்டு பூவைத் தலையில் ஏற்றுவது நல்லது.

இப்படி சின்னச் சின்னதாக நிறைய விஷயங்களை ஆண்கள் மனதுக்குள் வைத்திருக்கிறார்கள். அதைப் புரிந்து கொண்டு மனைவியர் நடந்தால் ஆண்கள் எப்போதும் உங்களுக்குள்தான்… அதேபோல பெண்களுக்கும் இதுபோல எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் இருக்கலாம். அதையும் ஆண்கள் உணர்ந்து நடந்தால் அவர்களும் உங்களுக்குள்தான். இப்படி இருவரும் பரஸ்பரம் புரிந்து கொண்டு செயல்பட்டால் வாழ்க்கை முழுவதும் சுவாரஸ்யம்தான், சுகம்தான்…