Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகங்கள் அழகா அவஸ்தையா..!!

மார்பகங்கள் அழகா அவஸ்தையா..!!

58

பெண்பால் என்பதும் பெண்மை என்பதும் வெவ்வேறானது. சமுதாயத்தில் பெண்மை என்பது ஒரு சில கடமைகளை குறிக்கிறது.பெண் என்றால் சில கட்டாயங்களும் அழகின் அளவுகளும் வரையறுக்கப்பட்டன. பெண்களின் மார்பகங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டவே என்றாலும் இனப்பெருக்கத்தின் ஒரு உப அங்கமாக இருப்பதால் பெரும்பாலும் விமரிசினத்திற்கும், விவரிப்புக்களுக்கும் ஆளாகிவிட்டது.
கருத்தன எந்தைதன் கண்ணன வண்ண கனக வெற்பிற்
பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்
திருத்தனபாரமும் என்று துதிக்கும் பாடலாகட்டும், பாலிருக்கும் கிண்ணம் மேலிருக்கும் வண்ணம் என்று சொல்லும் திரைபட பாடலாகட்டும், வாடுவது மின்னார் மருங்குல் (முலைகளின் பாரம் தாங்காமல்) என்று சொல்லும் இலக்கியமாகட்டும் மார்பங்கள் வர்ணிக்க படுவது அதிகம்.
அறிவியல் ரீதியாக பல தவறானகருத்துக்கள் படித்தவரிடையேகூட பரவுகிறது.சமீபத்தில் மதனின் கேள்வி பதில் பகுதியில் கருவிலேயே குழந்தையின் இன்ப்பெருக்க உறுப்புகள் வளரத்தொடங்கிய உடனேயே மார்பக வளர்ச்சி ஆண்களுக்கு முடிந்துவிடுவதாக படித்தேன். இது சரியல்ல.

ஆண்களின் மார்பகங்கள் ஈச்ட்ரொஜன், ப்ரொஜெச்டிரொன் போன்ற பெண் தன்மை ஹார்மோன்கள் இல்லாமையால் அவளர்வது இல்லை. சில சமயம் பதின்ம வயதில் டெஸ்டோஸ்டீரோன் சுரக்கும் காலம், சிறுவர்களுக்கு மார்பகங்கள் சற்றே வளர்ந்து பின் தனிந்து விடுவதை காணலாம்.இப்போது முன்னைவிட அதிகமான ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதும்கூட மருத்துவ உலகில் காணலாம்.

பெண்களுக்கு இது இனப்பெருக்கம், பால் ஊட்டும் பயன் ஆகியவற்றைவிட ஒரு அழகின் அம்சமாக பலராலும் பார்க்க படுகிறது.சமூகத்தில் பெரிய மார்பகங்கள் ஒரு கட்டாயமாக பார்க்கப்பட்டு அதன் மூலம் பென்கள் பலவித இன்னல்களுக்கும் ஆளாகிறார்கள்.
எப்போது வாய்ப்பு கிடைக்கும் தொட்டு துன்புறுத்தலாம் என்று காத்திருக்கும் சில நடுத்தரவயது ஆண்கள்,கேலி செய்து பேசி அந்த சில நிமிடங்களே ஆனாலும் மோதி சுகம் காணும் சில கீழ்த்தரமான ஆண்கள், பிளவைகாட்டும் விதம் உடை உடுத்த வைத்து படம் எடுத்து தள்ளும் நிருபர்கள் என மார்பங்களால் கிறுகிறுத்து போனவர்கள் ஏராளம். மாதாமதம் அதே மார்பகங்கள் வலிக்கும்போதும் இந்த கலை உலக , மாடலுலக பெண்களுக்கு விடுப்பு கிடப்பதில்லை. கிடைத்தால் வாய்ப்பு போய்விடுமோ என்று அல்லலுறும் கட்டாயம். பலருக்கு என் சிறிய மார்பகங்கள் இருப்பின் பால் அதிகமாக சுரக்காது போன்ற தவறான கருத்துக்கள் ஒரு புறம். பிறந்தநாளுக்கு கார் வேண்டுமா என்றால் இல்லை மார்பக அறுவை சிகிச்சை செய்து கொள்கிறேன் என்று அல்லலுக்கு உள்ளாகும் பெண்கள், மார்பகங்களை பெரிதாக்க வழி சொல்கிறேன் என்று காசு பார்க்கும் சில அழகுத்துறை அறுவை சிகிச்சையாளர்கள், மற்றும் செயற்கை மார்பகங்களை செய்கிறேன் என்று இலாபம் சம்பாதிக்கும் நிறுவனங்கள், இந்த பசையை தடவிக்கொள், இந்த மருந்தை சாப்பிடு என்று பொருளீட்டும் மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இவை யாவும் வெள்ளை மாளிகையில் தங்கி தங்களுக்கு பாதகமாக எந்த கொள்கையும் வரவிடாமல் தடுக்கும் பண முதலைகளும், ஊ டகங்கள் மூலம் அதிக பணம் செலவழித்து பெண்ணின் அழகை நிர்ணயிக்கும் இந்த கூட்டம் மறுபுறம்.
சாதரணப் பெண்களுக்கு இந்த நிலை என்றால், மார்பக புற்றுநோய் வந்து ஒரு மார்பகத்தை இழந்த பெண்ணை சமூகம் பார்க்கும் பார்வை கொடியது. கை, கால் இல்லாதவர்களிடம் காட்டும் அக்கறை இல்லை என்றால் கூட பரவாயில்லை. இந்த பெண்களை செயற்கை முறை மார்பகங்களை பொறுத்திக்கொள்ள சொல்லி ஒவ்வொருமுறையும் கருத்து தரும் மருத்துவர், நண்பர்கள் என இவர்களின் மன உளைச்சலுக்கு அளவில்லை. அட்ரே லார்ட்ஸ் என்ற பெண் உளவியல் நிபுணர், கறுப்பின பெண்களுக்கு ஆதரவாய் போரிடுபவர் தன்னுடைய மார்பகத்தில் புற்று நோய் வந்து அதை நீக்கி கொண்டபோது, அவர் செயற்கை மார்பகத்தை வைத்து கொள்ள வில்லை என்று பல இடங்களில் அனுமதி மறுக்க பட்டதை எழுதியிருந்தார். மார்பக நிழற்படம் எடுக்கும் இடத்தில் சட்டையின்றி பல நேரம் காத்திருந்த பெண், ஒரு கட்டத்தில் சினத்துடன் அப்படியே பார்வையாளர் இருக்கும் இட்த்திற்கு வந்து சப்தம் போட்டிருக்கிறர். பலரும் (மருத்துவமனை ஊழியர்கள்) என்னை காக்க வைத்து உற்று நோக்கும் மார்பங்களை நீங்களும் பாருங்கள் என்று சொன்ன அந்த பெண் காவலர் கொண்டு நீக்க பட்டதும், மருத்துவமனிக்கு டீசண்டான நோயளிகள் வருவது இது போன்றவர்களால் பாதிக்க படலாம் என்றும் சொல்லி அந்த பெண் மீது குற்றம் சாட்டபட்டது.

 

 

டாலி பர்டன் தன்னுடைய செயற்கை மார்பங்களை வைத்து கொண்டு சிலிகான் பரவி புற்று நோயால் அவதிப்பட்ட போது அவருடைய ஆதரவாளர்கள் அவருடைய செயற்கை மார்பகங்கள் நீக்கினால் அவருடைய கலை வாழ்வு தோல்வி அடந்துவிடும் என்று சொன்னதாகவும் வருந்தியதை படித்திருக்கிறேன்.

இவை யாவும் இப்போது ஏன் எழுதுகிறேன் என்றால் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி. ஒரு பெண், 60 வயதிருக்கும். ஒரு உடல் நல கூட்டத்தின் போது கோவிலுக்கு வந்தவருக்கு சோதனை செய்ய கட்டி இருப்பது போல இருந்ததால், நிழற்படம் எடுத்துக்கொள்ள அனுப்பி இருந்தோம். கட்டி உறுதி படவே அவருடைய கணவரைஅணுகி கட்டியை நீக்க வேண்டிய அவசியத்தை சொன்னோம். மார்பகங்களை நீக்குவதன் மூலம் தன் மனைவி பெண்மையை இழந்து விடுவதாக பலர் நம்புவதாலும், பெண்கள் தங்கள் கணவன் தன்னை விட்டு விடுவான் என்ற பயத்தினாலும் கட்டி என்று சொன்னாலும் நம்ப தயராயில்லை. புற்று நோய்க்கும் பின் மார்பகங்களை நீக்க நேர்ந்தால் இவர்கள் படும் மன உளைச்சல் அதிகம். குழந்தை பிறந்த பிறகு பால் சுரக்கும் போதும், அது சீராக வெளிவருவதன் முன் பெண்கள் படும் வேதனையும் வலியும் அளவிட முடியாது.இப்போதாவது செயற்கை சாதங்களும் மருத்துவ மனை செவிலிகளின் ஒத்துழைப்பும் உதவியும், அனுசரணையாக இருக்கும் கண வ மார்களும் உண்டு. மூன்று பிள்ளைகளை பெற்று பாலூட்டி வளர்த்தவளுக்கு கட்டி என்றும் அதை நீக்க வேண்டும் இல்லை எனில் புற்று நோயாய் மாறிவிடும் என்றும் சொல்லியும் மறுத்து விட்ட கணவன், அன்னையின் வலியை வேதனையை பொருட்படுத்தாத பிள்ளைகள் என்று அவர் மிகவும் உதாசீனப்பட்டு போனார். தனக்கு அதிகம் உடலுக்கு வந்து விட்டால் யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று எண்ணி தன் அமெரிக்க அடுத்த வீட்டுகார பெண்ணிடம் சொல்லி அழுதிருக்கிறார்.நோய்வாய்ப்பட்ட பெண்னின் கணவர் 9 மணிக்கு அலுவலகம் சென்றுவிடுவார் என்பதால், அவர் சென்றபின், அந்த பெண்ணை அழைத்துவர எங்கள் மருத்துவரிடம் நேரம் ஒதுக்கி வாங்கி அமெரிக்க பெண் அவரை அழைத்து வந்தார். 2 மணி நேரம் ஒய்வுக்கு பின் மீண்டும் எதுவும் நடக்காதது போல பெண் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார். அன்றே வழக்கம் போல இரவு உணவும் படைத்திருக்கலாம்.
இதுவே ஓரின சேர்க்கையில் விருப்பம் உள்ள பெண்களாய் இருப்பின் சில மருத்துவர்கள் சாதரண கட்டிக்கே கூட உங்களுக்கு மார்பகங்கள் எதற்கு என்று சொல்லி அவற்றை நீக்கிவிடுவதாகவும் பல புகார்கள் உண்டு. இவர்களுக்கு ஆதரவாக இப்போது ஹிலரி கிளிண்ட்டன் முதல் பலர் போரிட ஆரம்பித்திருக்கிறார்கள்.