Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையை குறைக்க தினமும் உணவு எடுத்துகொள்ளும் முறை

உடல் எடையை குறைக்க தினமும் உணவு எடுத்துகொள்ளும் முறை

87

உடல் கட்டுப்பாடு:நாம் உணவு உட்கொள்ளும் நேரமும் எமது உடல் நிறையின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இதய நோய்கள், அதிகமான கொலஸ்ரோல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன நாம் உணவு உட்கொள்ளும் நேரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்படுகின்றன என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றிலிருந்து தெரிய வந்துள்ளது.

உடல் நிறையை அதிகரிப்பது மற்றும் உடல் நிறையை குறைப்பது என்பன நாம் உட்கொள்ளும் உணவுகள் மற்றும் உணவு உட்கொள்ளும் நேரத்தில் தங்கியுள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் உணவு உட்கொள்ளுதல் ஆரோக்கியமான நிறையைப் பேண உதவுவதுடன் தேவையற்ற கொழுப்புக்கள் உடலில் சேர்வதையும் தடுக்கின்றது.

வெவ்வேறான ரேநங்களில் உணவு உட்கொள்ளும் போது எமது உடலின் நேரச் சக்கரம் அடிக்கடி மாற்றமடைவதோடு உடற்பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகமாகின்றது.

உடல் நிறையைக் குறைக்க வேண்டுமெனில் எப்போது பகல் உணவை உட்கொள்ள வேண்டும்?

பொதுவாக நாம் பகல் வேளைகளில் அதிகளவு உணவு உட்கொள்வது வழக்கம். ஆகவே மூன்று மணிக்கு முன்னதாக பகல் உணவு உட்கொள்பவர்களுக்கு நிறை அதிகரிப்பது குறைவாக உள்ளது எனவும் காலை 8 மணி தொடக்கம் பகல் 2 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் உணவு உட்கொள்வதை தவிர்ப்பதன் மூலமும் உடல் எடை அதிகரிப்பதை தடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுநேரம் சென்ற பின்னர் இரவு உணவை உட்கொள்பவர்களுக்கு நள்ளிரவில் மீண்டும் பசி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் நெடுநேரமாக உணவு உட்கொள்ளாத காரணத்தால் உடலுக்கு அதிகசக்தி தேவை என்பதால் மீண்டும் நள்ளிரவில் பசி ஏற்படும்.

பொதுவாக காலையில் அதிக உணவை உட்கொண்டு பின்னர் பகல் வேளைகளில் சாதாரணமாக உணவு உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான உடல் நிறையை பேண முடியும். காலையிலேயே வயிறு நிறைய உணவு உட்கொள்வதன் மூலம் அன்றைய நாளில் பகல் வேளை வரை பசி ஏற்படாதிருக்கும் வண்ணம் எமது உடலானது சக்தியை சேமித்து வைத்துக் கொள்கின்றது.

உடல் நிறையை குறைக்க வேண்டுமெனின் காலை, மாலை மற்றும் இரவில் எவ்வாறு உணவு உட்கொள்ள வேண்டும்?

காலை ஆகாரம் – காலையில் முட்டையை உட்கொள்வது உடலுக்குச் சிறந்தது. எனவே காலை வேளையில் இரண்டு முட்டைகள், அரைக் கோப்பை பசளைக் கீரை, கோதுமை டோஸ்ட் மற்றும் யோகட் என்பவற்றை உட்கொள்ள வேண்டும்.

இதற்கும் உங்களுக்கு நேரம் போதாது என்றால் இரண்டு மேசைக் கரண்டி பீனட் பட்டர், ஒரு மப்பின் மற்றும் ஒரு வாழைப்பழம் என்பவற்றை உட்கொள்வது சிறந்தது.

பகல் ஆகாரம் – பகல் வேளையிலும் நல்லதொரு உணவை உட்கொள்வதன் மூலம் இரவு வேளை வரை பசி ஏற்படாதிருக்கும். இதற்கு சிக்கன் பிரெஸ்ட், கீரை வகைகள், துண்டுகளாக நறுக்கப்பட்ட தக்காளி, இரண்டு கோப்பை மரக்கறி சுப் மற்றும் ஆப்பிள் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். மாமிசம் உட்கொள்ளாதவர்களாக இருந்தால் விதைகளால் உருவாக்கப்பட்ட சலாட், கரட் புரொக்கோலி மற்றும் கோலிபிளவர் போன்றவற்றை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட ஒரு கோப்பை மரக்கறிக் கலவை ஆகியவற்றை உட்கொள்வது சிறந்தது.

இரவு ஆகாரம் – ரெட் பெப்பர் மற்றும் கோவாவுடன் வறுத்து உருவாக்கப்பட்ட கோழி இறைச்சியுடன் பழுப்பு அரிசி போன்றவற்றை உட்கொள்ள வேண்டும். வேண்டுமானால் பேக் செய்யப்பட்ட கிழங்கு மற்றும் பாதாம் பலந்து உருவாக்கப்பட்ட பச்சை மரக்கறி சாலட் ஆகியவற்றையும் உட்கொள்வது சிறந்தது