Home அந்தரங்கம் தம்பத்தியினர் குளிர்காலத்தில் கலவி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

தம்பத்தியினர் குளிர்காலத்தில் கலவி கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

589

தம்பதியர் தாங்கள் என்ன மாதிரியான வாழ்க்கை முறையை, மனதின் தன்மையை, எண்ண ஓட்டங்களை மேற்கொள்கிறார்களோ அதன் அடிப்படையில் அவர்கள் கருத்தரிப்பினை எட்டும் பொழுது, அவர்களுள் வளரும் குழந்தை பெறும். குழந்தைகளில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகள், உடல் அளவில் ஏற்பட்டாலும் சரி, மனதளவில் ஏற்பட்டாலும் சரி, அதற்கு காரண கர்த்தாவாக இருப்பது அவர்களை உருவாக்க காரணமாக இருந்த தம்பதியர்கள் தான்.

இந்த பதிப்பில் குளிர் காலத்தில் தம்பதியர் கொள்ளும் கலவி முறை குழந்தைகளுக்கு நன்மை செய்கிறதா? கேடு விளைவிக்கிறதா? என்று பார்க்கலாம்.

குளிர்காலம் – எடை! பதிப்பில் தம்பதியர் – கருத்தரிப்பு – குழந்தை போன்ற விஷயங்களை பற்றி பார்க்கும் முன் உடலை பற்றியும், உடலுக்கும் குளிர் காலத்திற்கும் உள்ள தொடர்பு பற்றியும் முதலில் பார்க்கலாம். நம் உடலில் வெள்ளை கொழுப்புகள் மற்றும் பிரௌன் கொழுப்புகள் என்று இரண்டு வகை உண்டு. வெள்ளை கொழுப்புகள் உடலில் அதிகமானால் அது இதய நோய் போன்ற நோய்க் குறைபாடுகளை ஏற்படுத்த எத்தனிக்கும்.

ஏன் அப்படி? உடலின் வெப்பம் அதிகரித்தால் பிரௌன் கொழுப்பு உடனே கரையும்; இது வெள்ளை கொழுப்பு அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. பொதுவாக குளிர்காலத்தில் எடை குறையும் என்று கூறுவார்கள்; அது ஏனெனில் குளிர்காலத்தில் உடலில் பிரௌன் கொழுப்புக்களின் அளவு அதிகமாகும்; இது வெள்ளை கொழுப்பு அளவை குறைத்து உடலின் எடையை குறைக்கும். ஆனால், உடலின் ஆற்றலுக்கும் செயல்பாடுகளுக்கும் வெள்ளை கொழுப்பும் ஓரளவுக்கு அவசியம், பிரௌன் கொழுப்பும் அவசியம்.

தம்பதியரின் தாம்பத்தியம்! இந்த கொழுப்பு மற்றும் குளிர் விஷயத்தில் எங்கே இருந்து தம்பதியர் வருகின்றனர் என்று நீங்கள் யோசிக்கலாம். தம்பதியர்களில், பெண் கர்ப்பம் அடைந்து இருந்து, அப்பெண்மணியும், கணவனும் குளிர் கால நேரத்தில் ஏற்படும் குளிரின் தாக்கத்தை தாங்க முடியாமல் ஒருவருக்கு ஒருவர் உடலால் இதம் தர முடிவு செய்து, கலவியில் ஈடுபடுவர். இந்த சமயத்தில் வயிற்றில் வளர்ந்து கொண்டு இருக்கும் குழந்தையின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும்.

என்ன மாற்றங்கள்!? அப்படி தம்பதியர் கலவி மேற்கொண்டால், கருவிற்கு நன்மையும் ஏற்படும்; சிறிது தீமையும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. என்ன விஷயம் என்றால், தம்பதியர் ஒருவரோடு ஒருவர் உறவாடி உடலால் உறவு கொள்ளும் பொழுது வெப்பம் உருவாகிறது; இவ்வாறு உருவாகும் வெப்பம், குளிர் காலம் காரணமாக குழந்தையின் தொப்புளில் படியும் பிரௌன் கொழுப்பை கரைத்து விட உதவுகிறது.

கலவுதல் நிகழவில்லை எனில்? ஆணும் பெண்ணும் குளிர்காலத்தில் கலவி கொள்ளவில்லை எனில், உருவான பிரௌன் கொழுப்பு கரையாது; வெள்ளை கொழுப்பும் அப்படியே இருக்கும். ஆகையால் பிறக்கும் குழந்தை கொழு கொழுவென பிறக்கும். இதுவே தம்பதியர் அவ்வப்போது உறவு கொண்டுவிட்டால் பிரௌன் கொழுப்பும் கரையும், வெள்ளை கொழுப்பும் கொஞ்சம் கரையும். இந்த இரண்டு கொழுப்புகளும் குறைவதால், குழந்தை ஒல்லியாக பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு.

ஒல்லி குழந்தை! ஒல்லியான குழந்தை பிறப்பது தவறு அல்ல; ஆனால், அதுவே குழந்தையின் உடலில் ஓரளவு கூட சத்துக்கள் இன்றி மிகவும் எலும்பும் தோலுமாக பிறந்து விட்டால், அது குழந்தையின் வளர்ச்சிக்கு அபாயம் ஆகலாம். ஆகையால் குளிர் காலத்தில் உறவு மேற்கொள்ளும் பொழுது அளவுடன், குழந்தையின் சத்துக்களை பறித்து விடாத வகையில் தம்பதியர் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தேகம் மாறாது! சில சமயங்களில் சில குழந்தைகள் எவ்வளவு உண்டாலும் உடல் எடை கூடாமல் இருக்க மற்றும் அவர்களின் தேகம் மெல்லியதாக, ஒல்லியானதாக இருக்க பெற்றோர்கள் – கர்ப்பம் தரித்து இருந்த குளிர் கால நேரத்தில் அதிகமான அளவு உடலால் உறவு கொண்டு இன்பத்தில் மூழ்கியது தான் காரணம். பெற்றோர்கள் செய்யும் செயல்களின் விளைவாகவே பிள்ளைகள் கருவாகி, உருவாகி, பிறந்து வளர்கின்றனர்.

தேவையான அளவு! ஆகையால், தம்பதியர்களே! குளிர்காலத்தில் கர்ப்பம் தரித்து இருந்தால், கரு பெண்ணின் வயிற்றில் வளர்வதாய் இருந்தால், அவ்வப்போது உடலால் இணையவும்; இணையாமல் தவிர்ப்பதும் தவறு. அது வேறு வகை விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, போதுமான அளவு – தேவையான அளவு மட்டும் உடலால் இணைந்து, உங்களுக்குள் வளரும் உயிரை காத்திடுவீராக!