Home சூடான செய்திகள் ஆண், பெண் இருவருக்குமான பொதுவெளியைத் தாண்டி, நெருக்கம் அதிகரிக்கிற இடம் படுக்கையறை தான். அங்கு இருவரும்...

ஆண், பெண் இருவருக்குமான பொதுவெளியைத் தாண்டி, நெருக்கம் அதிகரிக்கிற இடம் படுக்கையறை தான். அங்கு இருவரும் சேர்ந்து சிலவற்றைச் செய்ய வேண்டும். சிலவற்றைச் செய்யாமல் தவிர்க்கவும் வேண்டும். அப்படி இருவரும் என்னவெல்லாம் படுக்கையில் செய்யலாம்? கணவன், மனைவிக்கான முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபடுவது மட்டுமல்ல, இருவரும் மனம் விட்டுப் பேசுவது, ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்ளும் இடமாகவும் படுக்கையறை இருக்கிறது. ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். எலக்ட்ரானிக் பொருட்களைப் படுக்கையறையில் தவிர்த்திடுங்கள். அவை தூக்கத்தைக் கெடுப்பதோடு, மனதளவில் ஒருவர் மீது மற்றவருக்குக் கோபத்தை உண்டாக்கும் காரணியாகவும் செயல்படுகிறது. படுக்கைக்குச் சென்றதும் தூங்கிவிடாமல், சிறிது நேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருத்தல் அவசியம். அது உறவுகளை பலப்படுத்தும். இந்த நேரத்தில் சந்தோஷமான விஷயங்களை மட்டும் பேசுங்கள். குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் மற்றும் குழப்பங்களைப் பற்றிப் படுக்கையறையில் பேசுவதைத் தவிர்த்திடுங்கள். ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் கொஞ்சிப் பேசுங்கள். ஒருவருக்கொருவர் தினமும் முத்தம் கொடுத்துக் கொண்டு, குட் நைட் சொல்லிவிட்டு தூங்கச் செல்லுங்கள். இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும். உங்கள் இல்லறம் இனிமையானதாக மாறும்.

31

ஆண், பெண் இருவருக்குமான பொதுவெளியைத் தாண்டி, நெருக்கம் அதிகரிக்கிற இடம் படுக்கையறை தான். அங்கு இருவரும் சேர்ந்து சிலவற்றைச் செய்ய வேண்டும். சிலவற்றைச் செய்யாமல் தவிர்க்கவும் வேண்டும். அப்படி இருவரும் என்னவெல்லாம் படுக்கையில் செய்யலாம்?

கணவன், மனைவிக்கான முக்கிய இடம் படுக்கையறை. உடலுறவில் ஈடுபடுவது மட்டுமல்ல, இருவரும் மனம் விட்டுப் பேசுவது, ஒருவரையொருவர் புரிந்து கொள்வது, ஒருவரையொருவர் அரவணைத்துக் கொள்ளும் இடமாகவும் படுக்கையறை இருக்கிறது.

ஆணும் பெண்ணும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும்.

எலக்ட்ரானிக் பொருட்களைப் படுக்கையறையில் தவிர்த்திடுங்கள். அவை தூக்கத்தைக் கெடுப்பதோடு, மனதளவில் ஒருவர் மீது மற்றவருக்குக் கோபத்தை உண்டாக்கும் காரணியாகவும் செயல்படுகிறது.

படுக்கைக்குச் சென்றதும் தூங்கிவிடாமல், சிறிது நேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருத்தல் அவசியம். அது உறவுகளை பலப்படுத்தும். இந்த நேரத்தில் சந்தோஷமான விஷயங்களை மட்டும் பேசுங்கள். குடும்பத்தில் உள்ள சச்சரவுகள் மற்றும் குழப்பங்களைப் பற்றிப் படுக்கையறையில் பேசுவதைத் தவிர்த்திடுங்கள்.

ஆண் பெண்ணையும் பெண் ஆணையும் கொஞ்சிப் பேசுங்கள்.

ஒருவருக்கொருவர் தினமும் முத்தம் கொடுத்துக் கொண்டு, குட் நைட் சொல்லிவிட்டு தூங்கச் செல்லுங்கள்.

இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டாலே போதும். உங்கள் இல்லறம் இனிமையானதாக மாறும்.