Home சூடான செய்திகள் உடலுறவு பற்றி இந்த சந்தேகமெல்லாம் கேட்டா தப்பா?.

உடலுறவு பற்றி இந்த சந்தேகமெல்லாம் கேட்டா தப்பா?.

72

உடலுறவுக் கொள்வது போன்ற விசித்திரமான கனவுகள் வருவது ஏன்? பெண்கள் அவர்களது ஆண்களிடம் சில விஷயங்களைக் கேட்க தயங்குகின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமானால், கொஞ்சம் பயப்படுகின்றனர்.

திருமணத்தைப் பற்றிய பேச்சுகளுக்குக் கூட அவர்கள் தயங்கமாட்டார்கள். ஆனால், ஒரு சில விஷயங்களை ஆண்களிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று மண்டையைப் பிய்த்துக் கொள்கின்றனர் காதலிகள்

அது என்ன விஷயங்கள், அந்த விஷயங்கள் அவ்வளவு பயங்கரமானவையா…?

காதலிக்கும் பெண்கள், “நீ அம்மாவ பிரிஞ்சு இருப்பியா” என்று கேட்பதே, திருமணத்திற்கு பிறகு நாம் தனிக்குடித்தனம் போக சம்மதிப்பாயா என்ற கேளிவிக்கான அடித்தளம் தான். ஆனால், இதைக் கேட்டவுடன் ஆண்கள் எந்த அளவு கோவப்படுவார்கள் என்று தெரியாததால், இதைப் பற்றி ஆண்களிடம் கேட்க பெண்கள் தயங்குகின்றனர்.

புராண காலங்களில் இருந்தே, காதலிக்கும் ஆண்களின் ஆசையையும், கனவுகளையும் குழித்தோண்டி புதைக்கும் வெட்டியான் வேலையை செய்வதைப் பழக்கமாக வைத்திருக்கின்றனர் பெண்கள். இது பல காதல்களுக்கு “டாட்டா..” சொல்ல வைத்திருக்கிறது என்பது நாம் அறிந்த விஷயம் தான்.

காதலிக்கத் தொடங்கியதுடன், தம், குடிப்பழக்கத்தோடு சேர்த்து காதலிகள் நிறுத்தச் சொல்லும் மற்றுமொரு விஷயம், அந்த பொறுக்கிப் பசங்கக் கூட உனக்கெதுக்கு சகவாசம். ஒன்று கிடைத்தவுடன், மற்றொன்றை மறக்கும் அவர்களது குணத்தை ஆண்களுக்கும் பழக்குவதற்காக காதலிகள் எடுக்கும் கொடிய முயற்சி இது.

அனைத்து பெண்களுமே அவரவர் காதலர்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்றும், கெத்தாகத் தெரிய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

ஆனால், இதை மாற்று, அதை மாற்று என்று கூறினால் எங்கு சண்டை வருமோ என்று பெண்கள் இதைப் பற்றி எதுவும் கேட்பதில்லையாம்.

பெண்கள் தாங்கள் செய்தது தவறு தான் என்றாலும், ஆண்களிடம் மன்னிப்பு கேட்க தயங்குவார்கள்.தெரியாமல் யாருடைய காலை மிதித்துவிட்டால் கூட அரைநொடியில் மன்னிப்பு கேட்டுவிடுவார்கள். ஆனால், நீ தான் என் வாழ்க்கை என்று சொல்லும் அந்த வாய், அவனிடம் மன்னிப்பு மட்டும் கேட்காது.

பெண்கள் இரண்டு துருவங்களை போல, ரகசியங்களைப் பாதுகாக்கவும் செய்வார்கள், அதே சமயம் மிக எளிதாக ஓட்டை வாய் மொத்தத்தையும் உளறிக் கொட்டிவிடும். இதே போல ஆண்களும் உளற வேண்டும் என்று எதிர்பார்பார்கள்.