Home சூடான செய்திகள் சென்னையில் 35 பெண்களுடன் மெகா விபசாரம்

சென்னையில் 35 பெண்களுடன் மெகா விபசாரம்

32

சென்னையில் 35 பெண்களை ஆடம்பர பங்களா வீடுகளில் அடைத்து வைத்து மெகா விபசார தொழில் செய்து வந்த பிரபல விபசார தாதா சிவராம்குமார் உள்ளிட்ட 9 தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.

மெகா விபசாரம்

ஆந்திராவைச் சேர்ந்த பிரபல விபசார தாதா சிவராம்குமார் என்ற ராஜி (வயது 38) என்பவர், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் விபசார தொழிலில் கொடிகட்டி பறப்பவர். 2 முறை குண்டர் சட்டத்தில் சிறை சென்றுள்ளார். பலமுறை சிறைக்கு சென்று வந்துள்ளார். இவர் சென்னையில் பல இடங்களில், பங்களா வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசார தொழிலை பெரிய அளவில் அரங்கேற்றி வந்தார். பல மாநிலங்களைச் சேர்ந்த அழகிய இளம்பெண்களை சினிமா ஆசை காட்டி சென்னைக்கு கடத்தி வந்து, விபசார தொழிலில் ஈடுபட வைத்தார்.

இவரிடம் 50–க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் விபசார வேலை செய்வதாகவும் தகவல்கள் வந்தன. வாடிக்கையாளர்களை அழைத்துவர மட்டும் இவரிடம் 6 சொகுசு கார்கள் இருந்தன. ஆன்–லைன் மூலம் இவரது உல்லாச தொழில் கொடிகட்டி பறந்தது.

இவரை கைது செய்து, இவரது விபசார தொழிலை அடியோடு நசுக்கும்படி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில், கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ், உதவி கமிஷனர் கணபதி மற்றும் விபசார தடுப்பு இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் இதற்காக களத்தில் இறக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாக சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், தாழம்பூர், தையூர் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை வேட்டை நடத்தப்பட்டது.

சிவராம்குமார் கைது

போலீசாரின் இந்த சோதனை வேட்டையில் விபசார தாதா சிவராம்குமார், அவரது கூட்டாளிகள் எத்திராஜூலு, தாராசிங், நாகராஜ், இளையராஜா, வெங்கட்நாராயணன், சுப்பாராவ், முத்தையா, ரவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களால் விபசார தொழிலுக்காக பங்களா வீடுகளில் அடைத்து வைத்திருந்த 35 அழகிகள் மீட்கப்பட்டனர். 6 சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விபசார கும்பலை கூண்டோடு கைது செய்த, தனிப்படை போலீசாரை, கமிஷனர் ஜார்ஜ் பாராட்டினார்.