Home சூடான செய்திகள் கேமராமேனை 300 முறை கட்டியணைத்த நடிகை; வெறுத்துப்போன இயக்குனர்

கேமராமேனை 300 முறை கட்டியணைத்த நடிகை; வெறுத்துப்போன இயக்குனர்

29

மோனல் கஜ்ஜர் என்ற புதுமுக நடிகை விக்ரம்பிரபுவின் சிகரம் தொடு மற்றும் கிருஷ்ணாவின் வானவராயன் வல்லவராயன் படங்களின் மூலம் தமிழ் சினிமாவின் நாயகியாக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கனவே நான்காம் பிறை என்ற டப்பிங் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்பொழுது நேரடி தமிழ் படத்தின் மூலமே நடிகையாக அறிமுகமாக உள்ளார்.

சிகரம் தொடு படத்தில் மோனல் நடிக்க காரணமாக இருந்தது படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாத் தானாம். இதனால் என்னவோ இவர்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்பட்ட மோனல், டைரக்டர் கெளரவை சந்திக்க வந்துள்ளார். ஆனால் டைரக்டர் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாமல், எதிரே இருந்த கேமராமேன் விஜய் உலகநாத்தை கட்டிதழுவியுள்ளார். கைகுலுக்க வந்த டைரக்டருக்கு இது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அங்கு ஆரம்பித்த கட்டிப்புடி வைத்தியம் படப்பிடிப்புகளிலும் தொடர்ந்துள்ளது. மோனல் கஜ்ஜர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும்போது மட்டும் சீனில் லைட்டிங், மேக்கப் என எல்லாவற்றையும் கேமராமேன் விழுந்து விழுந்து கவனித்துள்ளார். மோனல் நடித்த காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார். இதை பார்த்த நடிகைக்கு குஷி தங்காமல் படப்பிடிப்பு குழுவினர் முன்னிலையில் கட்டிபுடி வைத்தியம் செய்துள்ளார்.

இந்த விஷயத்தை இயக்குனர் கெளரவ் ‘சிகரம்தொடு’ படத்தின் ஆடியோ விழாவில் எல்லோருக்கும் தெரியப்படுத்திவிட்டார். இந்த விஷயம் இயக்குநரை மட்டுமல்லாமல் விக்ரம்பிரபுவையும் பாதித்துள்ளதாம். ஆனால் அவர் இதை வெளியில் காட்டிக்கொள்ளவில்லை என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் இருவரும் கடுப்பாகும் அளவிற்கு எத்தனை முறைதான் காட்டியணைப்பார் என கேட்ட போது, ஒரு நாளைக்கு 10 முறையாவது இருக்கும் சார் என ஏக்கத்துடன் கூறுகின்றனர் படக்குழுவினர். கொடுத்து வைத்தவர் உலகநாத்….