Home சூடான செய்திகள் வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை அடித்து உதைத்த மனைவி சென்னை சென்டிரலில் பரபரப்பு

வேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை அடித்து உதைத்த மனைவி சென்னை சென்டிரலில் பரபரப்பு

95

newsவேறு பெண்ணுடன் ஊர் சுற்றிய கணவரை அவரது மனைவி சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆவேசத்துடன் அடித்து உதைத்தார்.

பரபரப்பு சம்பவம்

நேற்று காலை சென்னை சென்டிரல் புறநகர் ரெயில் நிலையத்தில், ஒரு இளம்பெண் ஒரு தம்பதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார். அந்த பெண்ணை, அந்த வாலிபர் தொடர்ந்து சமாதானம் செய்து கொண்டிருந்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே, அந்த இளம்பெண் ஆவேசமடைந்து அந்த வாலிபரையும், அவருடன் இருந்த ஒரு பெண்ணையும் அடித்து உதைத்தார்.

இந்த காட்சியை கண்ட பிற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பயணிகள் மற்றும் அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் ஓடிச்சென்று அந்த இளம்பெண்ணை சமாதானம் செய்தார்கள். அவர்களிடம் அந்த இளம்பெண் கூறியதாவது:-

ஒன்றாக கைகோர்த்து…

என் பெயர் பிரேமா(வயது 27/ பெயர் மாற்றப்பட்டுள்ளது). எனது கணவர் பெயர் முரளி(31, பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெயிண்டராக உள்ளார். நாங்கள் சென்னை சூளையில் குடியிருந்து வருகிறோம். சமீபகாலமாக எனது கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்து வந்தது. இன்று (நேற்று) வேலை விஷயமாக அம்பத்தூர் வரை செல்வதாக கூறியபடி, புதுச்சட்டை அணிந்து வெளியே புறப்பட்டார்.

எனது கணவருக்கு தெரியாமல், நானும் அவரை பின்தொடர்ந்து வந்தேன். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வந்ததும், யாருக்கோ போன் செய்தார். 5 நிமிடங்களில் இவள் வந்தாள் (அந்த பெண்ணை சுட்டிக் காட்டி). இவள் வந்ததும் 2 பேரும்கை கோர்த்து ரெயில் நிலையத்தில் சுற்றி திரிகின்றனர். ஒன்றாக ‘ஐஸ்’ சாப்பிடுகிறார்கள். இதற்கு மேல் இந்த கொடுமையை பார்க்க முடியாமல் அவர்கள் அருகில் சென்றேன்.

ஆத்திரம்

என்னை பார்த்ததும் என் கணவர் அதிர்ச்சி அடைந்தார். அவரிடம், ‘யார் இவள்? இங்கே என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டேன். என் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அவர் திணறினார். என்னை சமாதானம் செய்யும் நோக்கில், ‘நீ வீட்டுக்கு போ, நான் வந்து சொல்கிறேன்’, என்றார். அருகில் இருந்த அந்த பெண் துளியும் பயமும், பதற்றமும் இன்றி யாருக்கோ பிரச்சினை என்பது போல் நின்றிருந்தாள்.

அதைப்பார்த்ததும் என்னால் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே தான் 2 பேரையும் கோபத்தில் அடித்து துவைத்து விட்டேன். எந்த பெண்ணும் கண்ணெதிரில் தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் ஊர் சுற்றுவதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

திருத்தணிக்கு செல்ல…

பின்னர் அங்கிருந்த போலீசார் சிலர், அந்த பெண் மற்றும் அவளது கணவரிடம் விசாரித்தனர். அப்போது முரளி, மூலக்கடையை சேர்ந்த பத்மா(28) என்ற பெண்ணுடன் பழகி வந்ததும், இருவரும் திருத்தணிக்கு செல்ல இருந்ததும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து முரளி மற்றும் பத்மாவை போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் சென்டிரல் ரெயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.