Home இரகசியகேள்வி-பதில் ‘வீட்டிற்கு வா… முத்தம் தா, நீ தரும் முத்தத்தின் .

‘வீட்டிற்கு வா… முத்தம் தா, நீ தரும் முத்தத்தின் .

63

என் வயது, 21; கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறே ன். என் அப்பா மிகவும் கோபக் காரர். சின்ன பிரச்ச‌னை என்றால் கூட,
தகாத வார்த் தைகளால் திட்டி, அடிப்பார். என் அம்மா, மிக அமைதியானவர்; திருமணம் செய்தநாள் முதல், இன்று வரை கஷ்டங்களை மட்டுமே அனுபவித்து வருகிறார். எங் களுக்காகத்தான், எல்லா கஷ் டங்களையும் பொறுத்துவருகி றார். எனக்கு, ஒரு அக்கா உள் ளார். அவளும் அப்பாவை போலவே, அடிக்கடி கோப ப்படுவாள்; இன்னும் திருமணம் ஆகவில்லை. என் அப்பாவை பொறுத்தவரை, அ வர் பேசுவது மட்டுமே சரி; மற்றவர்க ள் என்ன பேசினாலும் அதை காது கொடுத்து கேட்க மாட்டார்.
அம்மா, நாங்கள் பாத்திரக்கடை நடத்தி வருகிறோம். என் அப்பா எப்போதாவது குடிப்பார் என்றாலு ம், பத்து, இருபது நாட்கள் கூட தொடர்ந்து குடிப்பார். இவர் வசதிக்காக, நான் விருப்பப்படாத படிப்பை, வீட் டிற்கு அருகில்உள்ள கல்லூ ரியில் படிக்கச்சொல்லி வி ட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சொத்திருந்தும், எங்களுக்கு செலவு செய்ய மாட்டார். நல்ல உடை கூட எங்களிடம் இல்லை.
நினைத்த படிப்பு கிடைக்கவில்லை என்றாலும், எடுத் த படிப்பை நல்லவிதமாக படித்து வ ருகிறேன். அப்பா மிக சந்தேக குண ம் உடையவர். அதனால், நான் படி ப்பது பெண் கள் கல்லூரியில்தான். கட்டுக் கோப்பாக வளர்க்கிறேன் என்ற பெயரில், அடிமைபோல் நடத் தினார்; அதனால், அன்பிற்காக ஏங் கினேன்.
இந்நிலையில், ஒருவரை நேசித்தேன். நான், நேசிக்கு ம் விஷயத்தை அவரிடம் சொன்ன போது, ‘வீட்டிற்கு வா… முத்தம் தா, நீ தரும் முத்தத்தின் வலிமையை வைத்து, உன்காதலை உணர்வேன் …’ என்றார். அவ்வாறே செய்தேன். பின், கொஞ்ச நாளில் என்ன காரண த்தாலோ என்னிடம் அவர் பேசவில் லை. என்னைவிட்டு வில குவதுபோல் தோன்றியது. அதனால், அவரை விட்டு விலகினேன். அப்போது, என் தோழியின் அண்ணன், தானும் காதல் தோல்வியில் இருப்ப தாய் கூறி, என்னிடம் அன்பாய் பேசினார். பின், என்னை மயக் கி முழுமையாய் அடைந்தார்.
அவரையே, திருமணம் செய்ய லாம் என நினைத்தேன். அப்போதுதான், அவன் மோச மானவன் என்பதை, அவன் நண்ப ன் மூலம் அறிந்தேன். பின், அந்த நண்பனும் என்னைக் காதலிப்பதா க கூற, என்னை தந்தேன். ஆனால், அவன், என்னை திருமணம் செய்து கொள்வதாகவும், கூப்பிடும்போ தெல்லாம் படுக்கைக்கு வரவேண்டும் என்றான். அத னால், அவனை விட்டுவிலகினேன். இப்படியாக பல ஆ ண்களிடம் என்னைஇழந்தேன் . இது, தவறு என்று ஒரு நாள் உணர்ந்தேன்.
இந்த ஒரு விஷயத்தை தவிர, மற்ற அனைத்திலும் அனைவ ரிடமும் நல்லவள் என்ற நன்மதிப்பை பெற்றுள்ளேன். இதன்பின், ஒருநாள், மொபைல் போன் மூலம் ஒருவர் பழக்கமானார். ஓராண்டிற்குமுன் தான், இவரிடம் பழக்கம் ஏற்பட்ட து. மொபைல்மூலம் பழக்கம் ஆன தால், இவரை பார்த்ததில்லை. பார்க்காமலேயே, அவரின் குண த்தை நேசிக்க ஆரம்பித்தேன். மிக நல்ல மனிதராய் தோன்றினார். உங்களை, எப்படி நம்புவது எனக் கேட்டபோது, ‘உன் அம்மா, அப்பா உனக்கு ஒரு மாப்பி ள்ளை பார்த்தால், எந்த நம்பி க்கையில் அவரை மணந்து கொள்வாய்? அந்த நம்பிக்கை யை என் மீது வை…’ என்பார். நான் சந்தேகப்பட்டால், ‘நீ நம்ப நான் என்ன செய்ய வே ண்டும் சொல்…’ என்பார். இந்த ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டுமே என்னை சந்திக்க வந்தார்.

இந்த ஒரு ஆண்டில், எனக்கா க எதுவுமே வாங்கித் தந்தது இல்லை; நான் கேட்ட உதவி களையும் செய்தது இல்லை. ஆனால், வீட்டில் வாங்கி வை த்திருப்பதாகவும் கொண்டுவர நேரமில்லை என்பார். ஒவ் வொரு முறையும் உதவி கேட்டு வரச்சொன்னபோது எல்லாம், வராமல் இருக்க எத்தனையோ காரணங்கள் கூறினார். அதனால், என்தோ ழிகள், ‘நீ கேட்டு எதையுமே செய்யவில்லை; அவன், உன் னை ஏமாற்றி விடுவான். காத லிக்காக, இன்றுவரைஒரு பொருளாவது வாங்கித் தந்தி ருக்கிறானா? கேட்டால் கார ணம் சொல்கிறான், நம்பாதே…’ என்கின்றனர்.
அம்மா, இதுவரை அவர் என் மீதான காதலை வெளிப்ப டுத்துவது போல் எனக்காக, எந்த சிறு உதவியோ, பொருளோ வா ங்கித் தந்தது இல்லை. இது, என் மனதிற்கு உறுத்தலாக உள்ளது. இதுபற்றி கூறினால், ‘இப்போது வேண்டுமானாலும் வா. திருமண ம் செய்துகொள்ளலாம்’ என்கிறா ர். அவரின் தம்பி, தங்கை, அக்கா அனைவரும், அவர் என்னைமிகவும் நேசிப்பதாய் கூறு வர்.
அம்மா, இப்போது அவர் அமெ ரிக்கா சென்றுள்ளார். திரும்பி வர, ஒரு ஆண்டு ஆகும். திரு ம்பி வந்ததும், வீட்டில் பேசி உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறியுள் ளார். இந்தஒரு ஆண்டில், இதுவரை எனக்கு ஒரு முத்தமோ, இல்லை ஆபாச பேச்சுக்களோ பேசியதில்லை. ‘திருமணத்திற்குமுன், உன்னை தொடமாட்டேன். திரு மணம் ஆனதும், உரிமையுடன் உன்னை என் அன்பு மனைவியா ய் ஆராதிப்பேன்..’ என்பார். நான் முதல் முறை என் தோழியின் அண்ணனிடம் என்னை இழந்த து பற்றி கூறியபோது, ‘பரவாயி ல்லை, அதை மறந்துவிடு…’ என் றார். இன்று வரை, அந்த விஷய த்தை பற்றி என்னிடம் பேசியது இல்லை.
இந்நிலையில், என் முதல் காதலன் என்னிடம் வந்து, ‘இப்போதும் உன்னைத் தான் நேசிக்கிறேன். எனக்கு நீ வே ண்டும், நாம் திருமணம் செய்து கொள்வோம். பழை யபடி பேசு, பழகு…’ என்கிறா ன். இவனுடைய பேச்சுக்கள் எப்போதும் ஆபாசமாகவே இருக்கும். இதுபற்றி கேட்டால், ‘ஆம்பிளைக்கு ஆசை அதிகம்; நான் நேசித்த முதல் பெண் நீ, உன்னை ஏமா ற்ற மாட்டேன்; திருமணம் செய் வேன். அதனால்தான், எல்லை மீறி நடக்கிறேன்…’ என்கிறான்.
அம்மா… இப்போது நான் என்ன செய்வது? என் முதல் காதலன் நான் இல்லையெனில் செத்து வி டுவேன் என்கிறான். தற்போதை ய காதலனோ நான் வரும் வரை காத்திரு என்றுகூறி சென்றுள்ளான். நான் யாரை நம் புவது, யாருடன் என் வாழ்க்கை நன்றாக அமையும்? என் மனக் குழ ப்பத்திற்கு தீர்வு காண முடியவில் லை; தயவுசெய்து பதில்கூறுங்க ள்.
இப்படிக்கு
உங்கள் மகள்,
குறிப்பு:
நான் மிக நன்றாக படிப்பேன். எந்த காரணத்திற்காகவும் என் படிப்பை கோட்டை விட வில்லை. பள்ளி, கல்லூரி இர ண்டிலும் முதல் மூன்று இட ங்களில், ஒன்றை இன்றுவ ரை பெற்று வருகிறேன். உங் கள் பதிலை எதிர்பார்த்து காத்துள்ளேன்.
அன்பு மகளுக்கு,
பல ஆண்களுடன், உனக்கு தொடர்பு ஏற்பட்டதற்கு, உன் தந்தையின் துர்நட த்தைதான் காரணம் என, நீ கூறுவது ஒரு வடிகட்டின பொய். உன் தந்தை அன்பான, பெருந்தன்மை யானவராக இருந்திருந்தால் கூட, இதே தவறைதான் நீ செய்திரு ப்பாய். நீ இளமையின் மயக்கத் தில் தத்தளிக்கிறாய்.
உன்னுடையகாதல்கள் எதுவுமே உண்மையானவையோ, ஆத்மா ர்த்தமானவையோ அல்ல. எல் லாமேஉன் உடல் மற்றும் ஆடம் பர தேவைக்காக உண்டானவை.
காதலிக்கும் ஆண், காதலிப்பவளை ஓட்டலுக்கும், சினிமாவுக்கும் கூட்டிப் போக வேண்டும்; மொபைல் போனை வாங்கித் தந்து அதற்கு, ‘டாப் அப்’ செய்துதர வேண்டும் என் கிறஎண்ணம் உள்ளவள் நீ.உன் ராங்கால் நண்பர், ஒரு கஞ்ச னாகவோ அல்லது காதலிக்கு ம் பெண்ணுக்கு செலவு செய்துதான், காதலை நிரூபி க்க வேண்டும் என்கிற எண்ண மோ இல்லாதவனாக இருக்கக் கூடும்.
உன்னுடைய மற்ற ஆண் நண்ப ர்களை விட, இந்த போன் நண்ப ர் நேர்மையானவர்; அதிகம் படி த்தவர்; திருமணத்திற்கு முன், உன்னுடன் உறவு வைத்துக் கொள்ள விரும்பாதவர். காதலியிடம் ஆபாசமாக பே சும் கெட்ட பழக்கமும் இல்லை.
நீ இல்லை என்றால், செத்து விடு வேன் என, உன் பழைய காதலன் உன்னை எமோஷனல், ‘பிளாக்மெ யில்’ செய்கிறான். அவன் கண்டிப் பாக சாக மாட்டான். அப்படியே செ த்தால் சாகட்டும் விடு; தொல்லை ஒழிந்தது என தலைமுழுகிவிடு.
அமெரிக்கா சென்றிருக்கும்நண்பர், ஊர் திரும்பும் வ ரை காத்திரு. இப்போது, உனக்கு வயது, 21தான் ஆகிறது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகூட, அவருக்காக நீ காத்திருக்கலாம். காத்திருக்கும் இரண்டு மூன்று ஆண்டுகளில், புது காதல் திருவி ளையாடல்களில் ஈடுபட்டு விடா தே. பழையகாதலன் எவனுடனும்பேசுவதோ, தொலை தொடர்போ வைத்துக்கொள்ளாதே. மூன்று ஆண்டு இ டைவெளியில், இளம் முனை வர் பட்டம் பெற்று வேலைக் கு போ.
காதல் பற்றியும், திருமணம் பற்றியும், உனக்கிருக்கும் கு றுகிய எண்ணங்களை தூக்கி சாக்கடையில் வீசு. எத்தனை கெட்ட குணங்கள் கொ ண்டிருந்தாலும், அப்பா அப்பாதான். அவரை தூரத்தில் நின்று, குற்றம் சாட்டுவதை தவி ர்த்து, அன்பான வார்த்தைகளா ல் நல்வழிப்படுத்து. அப்பாவின் கைகளையோ, காதலர்கள் கை களையோ நம்பியிராமல் சொந் த சம்பாத்தியத்தில், புத்தாடை வாங்கி உடுத்து. அம்மாவுக்கு வாங்கிக் கொடுத்து, உடுத்த சொல். அப்பாவுக்கு வாங்கி க்கொடுத்து, இனிமையாக பழிவாங்கு.

இரண்டு, மூன்று ஆண்டு காத்திருப்புக்கு பின்னும், போன் நண்பர் உன்னை மணம் முடிக்கவரவில்லை என்றால், தோல்வியில் துவண்டு போகாதே.
உன்னுடைய மனக்குழப்பத்துக்கும், தற்கொலை எண் ணத்திற்கும் அடிப்படை காரணம் மனப்பக்குவ மின்மையே! போன் நண்பர் மண முடிக்க வரவில்லை என்றால், புதிய காதலில் ஈடுபடா மல், பெற்றோர் பார்த்து வைக்கும் மாப்பிள் ளையை மணம் முடித்து, வாழ்க்கையில் செட்டில் ஆக பார்.