Home இரகசியகேள்வி-பதில் விலைமாதுவை திருமணம் செய்யலாமா?

விலைமாதுவை திருமணம் செய்யலாமா?

87

நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு மாவட்டங்களில் பணி யாற்றும் காவல்துறை அதிகாரிகள். எங்களுக்கு திரு மணம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த ஐந்து வருடங்க ளில், ஒரு நாள் கூட நாங்கள் நிம்மதியாக வாழவில் லை. எங்களுக்குள் என்றுமே நிம்மதியில்லாமல் வாழக்காரணம், என் மனைவி கூறும், “சூப்பர்’ பொய் கள். இன்னும் இவள் திருந்தவில்லை. நானும், இவ ளும் சேர்ந்து உண்மையான அன்போடு படுக்கைய றையை பகிர்ந்து கொண்டது சரியாக ஏழு நாட்களே.தனது தம்பிகளிடம் அதிக பாசம் வைத்திருப்பதாகக் கூறி, என் வாழ் க்கையையும் கெடுத்து, வேலை செய்யுமிடங்களிலும், வங்கிகளி லும் தேவைக்கதிகமான கடனை வாங்கி கெட்டபெயர் எடுத்து விட் டாள். இவளை ஒரு விஷயத்தில் முழுமையாக நம்பலாம். கற்பு என்ற விஷயத்தில் மட்டும். எனது நிலைமையோ இதைவிட மோ சம். கல்யாண வயதில் நிற்கும் என் தங்கை மற்றும் வயதான தாய், தந்தை – இவர்களை கவனிப்பதா! குழந்தைகளுக்காக என் மனை வியின் பல்வேறு தொல்லைகளை தாங்கிக் கொள்வதா! மைத்து னர்கள் தரும் துன்பங்களை தாங்குவதா!என் மனைவிக்கு பல தடவை மாறுதல் வாங்கித்தந்தும், என்னுட ன் வாழ அவளுக்கு விருப்பமில்லை. தற்போது நான்கே மாதம் இறு தியான கெடு கேட்டிருக்கிறாள். இன்னும் ஒரு மாதம்தான் பாக்கி.தற்பொழுது 35 வயதாகும் எனது இளமை இவ்வாறே கழிந்து விடு மா அல்லது விவாகரத்து செய்து விடலாமா என, பல்வேறு கோண ங்களில் மூளை மழுங்கி இரவு, பகல் தூக்கமில்லாமல் தவிக்கிறேன். என து மனைவி திருந்துவாள் என்ற நம்பி க்கை இல்லை. மைத்துனர்களும் புத்தி சொல்லி அனுப்பும் வகை இல் லை.தற்போது நான் இருக்கும் தனிமை பல கெட்ட வழிகளில் ஈடுபடுத்தி விடுமோ என, மனம் பயப்படுகிறது. பேசாமல் வக்கீலின் உதவி யால் ஒப்பந்த அடிப்படையில், ஒரு விபசாரிக்குகூட வாழ்வு கொடுக்கலாமா? என்ற எனது எண்ணங்களின் ஓட்டத்தை தெளிவுபடுத்து வீர்களா?
தங்களின் பதில் ஒன்றே ஆறுதல்!

பதில்
அன்பு சகோதரருக்கு—
உங்கள் கடிதம் கண்டேன். பல விஷயங்கள் புரியவில்லை.
உங்களுக்குத் தெரியாமல் அல்லது உங்களது அனுமதியில்லாமல் உங்கள் மனைவி வேலை செய்யும் இடங்களிலும், வங்கிகளிலும் தேவைக்கு மேல் கடன் வாங்குவதாகவும், நிறைய பொய் சொல்வ தாகவும் எழுதி இருக்கிறீர் கள்.
தன் பிறந்த வீட்டுக்கு உதவு வதற்காக அவள் கடன் வா ங்குகிறாளா? அப்படி சாப்பா ட்டுக்கும், மற்ற செலவுகளு க்கும் பெண் பணம் கொடுத் து தான் உயிர்வாழ வேண்டு ம் என்கிற நிலையில் அல்ல து படிக்கும் தம்பிகள், வைத்தியச்செலவு, வயதான தாய், தந்தை, கல்யாணக் கடன் இப்படி ஏதேனும் இருந்தால், அந்தக் குடும்பம், பெற்ற மகளின் கையை எதிர்பார்ப்பதில் தவறில்லையே…
அவள் பொய் சொல்வதைத் தடுக்க நீங்களே அவளை அழைத்து, “உன் சம்பளத் தொகையை உன் தம்பிகள் முன்னுக்கு வரும் வரை யில், பிறந்த வீட்டுக்கே கொடுத்து விடு. நான் ஒன்றும் சொல்ல மாட்டேன் என்று சொல்லி விடலாமே…’
கணவன்—மனைவி மட்டுமில்லை, பெற்றவர்— குழந்தைகள், ஆசி ரியர் — மாணவர் இப்படி இரு பக்கமும் பொய் அரங்கேறுவதற்கான காரணமே ஒருவரிடத்தில் மற்றவருக்கு இருக்கும் பயம்தான்.
உண்மையில் பயமில்லாத சினேகத்தில் பொய் முளைக்காது.
கூப்பிட்டு இதமாய் விசாரித்தீர்களா?
தெரிந்தோ, தெரியாமலோ போலியான வறட்டு கவுரவம் உங்கள் மனைவியின் கண்களை மறைத்திருந்தாலும் புரியும்படியாக எடு த்துச் சொல்லலாமே…
கிடைக்கிறது என்பதற்காக கடனை வாங்கி, காலமெல் லாம் நிம்மதி இன்றி தவிப் பதைக் காட்டிலும் —அன்றா டம் மானமாய் கூழோ, கஞ்சியோ குடித்து வாழலா ம் என்று எடுத்துச் சொன் னீர்களா?
இரண்டு பெண் குழந்தை களை படிக்க வைத்து, பட்டம் வாங்க வை த்து, ஆளாக்கி, கல்யா ணம் செய்து கொடுத்து… வாங்குகிற சம்பள ம் கைக்கும், பைக்கும் போதாத அந்த மாதிரியான சமயங்களில் கண்டிப்பாய் கடன் வாங் கியே தீர வேண்டியிருக்கும்.
இப்போது அநாவசியமாய் கடன் வாங்கி, பெயரைக் கெடுத்துக் கொண்டால், ஆபத்து சமயத்தில் ஒரு ஈ, காக்கை நமக்கு உதவாது என்பதைப் புரியும்படி எடுத்துச் சொல்லுங்கள்.
இது எதற்குமே அவள் மசியவில்லை என்றால், தினசரியில் ஒரு அறிவிப்பு — அதாவது, “எனது மனைவியும், இன்னா ரது மகளுமா ன, என் அனுமதியின்றி பல இடங்களிலும் கடன் வாங்கியுள்ளதாக த் தகவல் கிடைத்தது. மேற்படியார் வாங்கும் கடனுக்கும், எனக் கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், அவள் கையெழுத்திட்ட பத்திரங்கள் எதுவும் என்னையோ, என் சம்பளத்தையோ, என் சொ த்தையோ எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் இதன்மூலம் தெரி வித்துக் கொள்கிறேன். இப்படிக்கு…’
—இப்படி ஒரு அறிவிப்பு கொடுத்து விடுவதாகச் சொல்லுங்கள். விஷயம் மிகவும் கை மீறிப்போனால், அறிவிப்பும் கொடுக்கலாம்… பாதகமில்லை.
அதை விடுத்து, அவளை விவாகரத்து செய்யும் வரை ஏன் போக வேண்டும்? பெரியவர்களை வைத்து பிரச்னையைப்பேசித் தீருங்கள். 35வயசு “இளமை ‘ வீணாகப் போகிறதே என்று சிவப்பு விளக்குப் பகுதியைச் சேர்ந்த பெண்ணை மணக்கத் துணிந்திருக்கிறீர்களே. இரு க்கிற பெண்டாட்டியை ஒழுங் காய் வைத்துக் கொள்ள முடியாதா உங்களால்?
இதே நிலை ரிவர்ஸில் திரும்பி, நீங்கள் கடனாளியாகவும், சொன் ன சொல் கேட்காதவராகவும் இருந்தால், அதற்காக உங்கள் மனை வி வேறொருவனை மணக்க கிளம்பினால் நீங்கள் என்ன சொல்வீ ர்கள்…
“இரண்டு பெண் குழந்தைங்க இருக்கறபோது, அப்படியென்ன உட ம்பு கேட்குதோ…’
கேட்பீர்களா, மாட்டீர்களா? பொறுமை வேண்டும் சகோதரா! ஏழு நாட்கள் மட்டும்தான் அவளுடன் உறவு என்றால் இரண்டு குழந் தைகளை அந்த ஏழு நாள் உறவுக்காக பத்தும், பத்தும் இருபது மாத ங்கள் சுமந்திருக்கிறாளே… அவளிடம் இன்னும் கொஞ்சம் நெருக் கமாக, அன்பாக விசாரியுங்களேன். சில சமயங்களில் இது ஒரு விதமான மனம் சம்பந்தப்பட்ட நோயாக இருக்குமோ என்று கூடத் தோன்றுகிறது.
அவளுக்குள் ஏதோ, ஒருவித ஏக்கம், எதிர் பார்ப்பு இருக்கலாம். கடன் வாங்கிச் செலவு செய்யும் போது, அவளுள் ஒரு வித திருப்தி தோன்றலாம்… பின்னால் வருத்தப்பட்டா லும், இதை அவளால் மாற்றிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். எதற்கும் நல்ல மனநல மருத்துவரிடம் காட்டுங்கள்.
கடைசியாக ஒன்று, தனிமையில் பல கெட்ட வழிகளில் ஈடுபட்டு விடுவோமோ என்று பயப்படுவதாக எழுதியிருக்கிறீர்கள்.
சகோதரரே… கெட்ட வழிகளில் ஈடுபடுபவர்கள் எல்லாத் துறைக ளிலும் இருக்கின்றனர். ஏற்கனவே ஒருசில செய்திகளும், சினிமா க்களும் காவல்துறையை மட்டமாகச் சித்தரிப்பதால், மக்களின் மனதில், “காவல் துறை என்றாலே நமக்கு எதிரி’ என்ற நினைப்பை உண்டு பண்ணி விட்டது.
இப்போது உங்களைப் போன்றோ ர், அத்துறையில் இருந்துகொண் டே, மல்லாந்து படுத்து எச்சில் துப்பினால் மார் மீதுதான் விழும் என்கிற பழமொழியை மெய்ப்பிப் பது போலக் கூறினால்… எப்பேர் பட்ட குற்றம்?
செய்யும் தொழில் தெய்வம் சகோதரா… உங்களை நம்பி இந் நாட்டில் பல அபலைகள், அநா தைகள் இருக்கின்றனர்… இதுபோன்ற சேவையில் இருக்கும் நீங்க ள், நீங்கள் சார்ந்துள்ள துறைக்குப் பெருமை சேர்க்க வேண்டும்.
மனைவியே ஆனாலும் அவளிடம் உங்கள், “ஈகோ’ வைக் காட்டா மல் ஒரு குழந்தையாக நடத்திப் பாருங்கள். உண்மை வெளிவரும். உங்களது முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

 

என் வயது, 44; மத்திய ஆயுத கா வல்படையில், தலைமை காவ லர் பதவியிலிருந்து, தற்போது
விருப்ப ஓய்வு பெற்றுள்ளேன். வாழ்க் கையில் சந்தோஷமும், மன நிம்மதியும் இன்றி வாழும் எனக்கு வழிகாட்டுங்கள். 1991ல் பணிக்கு சேர்ந்தேன். 1995ல், திரு மணம் நடந்தது. 1997ல், ஒரு பெண் குழ ந்தையும், 2000ம் ஆண்டில், ஆண் குழந் தையும் பிறந்தது. 2005 முதல், மனைவி மற்றும் குழந்தைகள், கிறிஸ் துவ மதத்துக்குமாறிவிட்டதா ல், 2008ல் விவாகரத்து வாங் கிவிட்டேன். குழந்தைகள் இர ண்டும், அவள்வசம் உள்ளனர்.
அடுத்து, 2009இல், இரண்டாவ து திருமணம் செய்தேன். என் மனைவிக்கும், இரண்டாவதுதிரு மணம்தான். அவளுக்கு, 12 வய தில், ஒருபெண்இருக்கிறாள். அப் படி இருந்தும் வரதட்சணை, சீர் என எதுவும் வாங்காமல், மிக எளிமையாக கோவிலில் திரும ணம் நடந்தது.
என் மனைவிக்கு, 15 வயதிலேயே சொந்த மாமாவுடன் திருமணம் நடந்து, மனக்கசப்பின் காரணமாக, ஒரு பெ ண் குழந்தையுடன் பிரிந்து விட்டா ள். பின், 2009ல் என்னுடனான திரு மணத்திற்கு பின், நான்தான் அந்த குழந்தையை பத்தாம்வகுப்புவரை , அசாமிலும், தமிழகத்திலும் படிக் க வைத்தேன். நான் வீட்டிற்கு ஒரே மகன். எனக்கு, இரண்டு வீடுகள் மற்றும் காலிமனைக ள் உள்ளன. என்தந்தையார், கட ந்த ஆண்டு மறைந்துவிட்டதால், தாயார் மட்டுமே உள்ளார். நான் வெளியூரில் வேலையில் இருப் பதால், என் மனைவி கீழ் போர் ஷனிலும், என் தாயார் மாடியிலு ம் இருந்தனர்.
எனக்கு மாமியார் இல்லை; மா மனார் கோவில் அர்ச்சகர். மாதத் திற்கு பத்து நாட்கள் இங்கு வந் து தங்கி, என் மனைவியிடம் ஏதாவது சொல்லிக் கொ டுத்துவிட்டுபோய் விடுவார். நான் விடுமுறையில் வரும்போ து எல்லாம் சண்டைபோடுவாள். மாடியில் இருக்கிற என் தாய், தகப்பனாரை பார்க்கச் சென்றா ல், அதற்கும் பயங்கர சண்டை போடுவாள். எப்போது விடுமு றை முடியும் கிளம்பலாம் என்ற எண்ணத்திலேயே இருப்பேன். மாமனார் அடிக்கடி வந்து தங்குவதால், ஒரு முறை சத்தம் போட்டேன்.
தற்போது, 23ஆண்டுகள் செய்த வே லையை விட்டு நிம்மதியாக குடு ம்பத்தோடு இருக்கலாம் என, விரு ப்ப ஓய்வு பெற்று வீட்டிற்கு வந்தா ல், தற்போது மனைவி அவள் சொ ந்த ஊரில் அவள் அப்பாவுடன் இருக்கிறாள். நான் கூப்பிட்டாலும் வர மறுக்கிறாள். கணவனை விட, அப்பாதான் முக்கியம் என்று அப்பாவுடனேயே இருக் கிறாள். நான்குழந்தையையும், இவளையும் காணச் செ ல்லும்போது, பேசக்கூடாத வார்த்தைகளை எல்லாம் பேசி, ஒருநாள்கூட என்னை அங்கு தங்கவிடமாட்டாள். தற் போது, மகளைவிடுதியில் சேர்த் துவிட்டாள்.
அவளும் அதே பள்ளியில்தான் ஆசிரியையாக பணி புரிகிறாள். நான் மாதச் செலவுக்கு வேண்டிய பணத்தை அனுப்பி விடுகிறேன். 23 ஆண்டுகளாக, குடு ம்பத்தை விட்டுப் பிரிந்து இருந்த எனக்கு, இப்போது சேர்ந்து வாழ ஒரு வாய்ப்புக் கிடைத்தும், மனை வி இதுபோன்று இருப்பதால் நிம்ம தி, சந்தோஷமில்லாமல் இருக்கிறே ன். அவள், என்னுடன் சேர்ந்துவாழ, என்ன வழிஉள்ளது. வயதான என் தாயாரை தனியே விட்டு, மனைவிக்கு அடிமையாக வாழ, எனக்கு மனம் வரவில்லை. என க்கு, இவளை விவாகரத்துசெய்ய மனமில்லை. கடந்த, 2011ல் எங் களுக்கு ஒரு ஆண் மகன் பிறந் தான். அவனையும், என்னிடம் ஒட்டவிட மாட்டேன் என்கிறாள். மேலும், காவல் நிலையத்தி லும், நீதி மன்றத்திலும் என்னைப் பற்றி, அவதூறாக புகார் கொடுத்துள்ளா ள். எப்படி இவளுடன் வாழ்வது என்ற மனச் சிதைவுடன் வாழ்ந்து வருகிறேன். நல்லமுறையில், நா ங்கள் வாழ்வதற்கு ஒரு வழி கூறுங்கள்.
அவளுக்கு,’வாரமலர்’ படிக்கும் பழக்கம் உள்ளதால்தான் இக்கடிதத்தை எழுதி உள் ளேன்.
— இப்படிக்கு,
உங்கள் மகன்.
அன்புள்ள சகோதரருக்கு,
திருமணம் செய்து மனைவி, குழ ந்தைகளுடன் சேர்ந்து வாழாமல், 23 ஆண்டுகள் வெளிமாநிலத்தில் வேலை பார்த்துள்ளீர்கள். தூரத் தேசத்து விருந்தாளிபோல, ஆண் டிற்கு ஒருமுறை வந்து போகும் கணவனின்மீது, மனைவிக்குபாச பிணைப்பு எப்படி வரும்? அதனா லேயே, உங்களது இரு திருமணங்களும், நீங்கள் எதி ர்பார்த்த சந்தோஷத்தை உங்களுக்கு தரவில்லை. ஒவ் வொரு பணியும், ஒவ்வொரு விதமான தொழில் துயர த்தை பரிசளிக்கும்.
எனக்குத் தெரிந்து, போலீஸ் வேலைப் பார்க்கும் எந்த ஆணும் நிம்மதியாகவாழவில் லை; அவர்களது குடும்பமும் நிம்மதியாகஇல்லை. மந்திரித் து வைத்த முட்டை போன்றது, போலீஸ் பணி. தினமும், பனி ரெண்டுமணி நேரவேலை விடு முறை அடிக்கடி கிடைக்காது, குற்றவாளிகளை, கை யாண்டு கையாண்டு மனமும், உதடுகளும் இரும்பு போல் இறுகிப்போகும். பணி யில் இருக்கும் போது காட்டும் முரட்டு முகமே வீட்டிலும் தொடரும்.
உங்களது முதல் மனைவி, கணவன் இல்லாததனிமையி ல் பாதிக்கப்பட்டிருக்கிறார்; மனஆறுதல் தேடியிருக்கி றார்.அனேகமாக, அவளது தோ ழிமூலம், அவருக்கு கிறிஸ்தவ மதம் அறிமுகமாயிருக்கலாம். முதல்மனை விக்கும், உங்களுக் கும்நடந்த விவாகரத்திற்கு, மு ழு க் காரணம், உங்களது பணி தான்.
உங்களது இரண்டாவது மனைவி, விஷயத்துக்கு வரு வோம். உங்களுக்கு இருக்கு ம் சொத்துகள்மீது, அவருக்கு பெரியதாய் விருப்பம் இல்லை. நீங்கள் மாதாமாதம், குடும்பச் செலவிற்கு அனுப்பும் பணத்தி ன்மீதும் ஈடுபாடில்லை. தனி மை, அவரைவாட்டி வதைத்தி ருக்கிறது.
பசிக்கு கிடைக்காத உணவு, அகால வேளையில் கிடை த்து என்ன பயன்? அந்த வெ றுமையில் தான், உங்களது மனைவி உங்களை வெறுத் து ஒதுக்கி, பெற்றோர் வீட்டி ல் தஞ்சம் புகுந்திருக்கிறார்.
சகோதரரே… எந்த தாய், தந் தையும் தங்கள் குழந்தையின் வாழ்க்கையை கெடுக்க நினைக்க மாட்டார்கள். வயதான உங்கள் மாமனார், தன் மகளிடம் இருக்கலா ம் என வந்து தங்கினால் என் ன? அவருக்குத்தான் வேறு யார் உள்ளார்? உங் களுக்கு உங்கள் தாயார் மேல் எத்தனை கரிசனம் உள்ளதோ அதே அளவு, உங்கள் மனைவிக்கும் அவர் தந்தைமேல் கரிசனம் இருக்காதா? பெற்ற பாசம் என்பது ஆண் பிள்ளைகளு க்குத் தான் இருக்க வேண்டு மா? பெண்ணாய்பிறந்து ஒரு வனை மணந்து விட்டால், அவள் பெற்றோர்மேல்உள்ள பாசத்தையுமா துடைத்து எறிய வேண்டும்?
திருமண பந்தத்தில், ஆண், பெண் இருவருமே பரஸ்பரம் இரு பக்கத்து உறவினர்க ளிடமும் வேறுபாடு காட்டாத அன்பைச் செலுத்த வே ண்டும். அப்போதுதான், அ வர்கள் இல்லறமும், ஆத் மார்த்தமான மகிழ்ச்சியுட ன் இருக்கும். உங்கள் மா மனார் மேல் உங்களுக்கு ஏற்படும் கசப்புணர்வே, உங்கள் மேல் எதிரொலிக் கிறது. அதைத் தவிருங்கள்.
உங்களது வெளியூர் பணி, உங்கள் மனைவியை ஒரு விதமாய் பாதித்திருக்கிறது என்றால், உங்களது நெரு ப்பு தோய்ந்த அதிகாரத் தோரணை வார்த்தைகள் வே றுவிதமாய் பாதித்திருக்கின்றன. ஒரு மானுக்கும், ஒரு சிங்கத்திற்கும் திருமணம் நடந்திருக்கிறது. சிங்கத்தி ன் சுபாவமும், கர்ஜனையும் மானை மிரளவே வைக்கு ம். மானை அனிச்சையாக குலை நடுங்க வைக்கிறோ மே என்று சிங்கத்திற்கு புரியாது. உங்களது கர்ஜனைகளால் தான், காவல் நிலையத்திலும், நீதிமன்றத்தி லும் புகார் செய்திருக்கிறார் உங்கள் மனைவி.
வாரமலர் இதழ் படிக்கும் பழக்கமுள்ள உங்கள் மனை விக்கு சில வார்த்தைகள்:
என் அன்புக்குரிய குட்டிய ம்மா… கொதித்து எழுந்தது போதும், அமைதி பெறு. உன் கணவர் தான் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டு, உன்னுடனேயே இருக்க ஓடி வந்து விட்டாரே… இன் னும், ஏன் அவரை தண்டி க்கிறா ய்? திருமணமான பெண்ணுக்கு, கணவன் வீடுதான் சாசுவதம். தந்தை வீட்டில் தவமிருந்தது போ தும். அவரை, உனக்குஇணக்கமாக்கு. உன்மாமியாரை கூடுதல் சுமையாக பாவிக் காதே; அவரது இருப்பை அங்கீகரி. நீஒரு ஆசிரியை; பொறுப்பில்லாத ஒரு முர ட்டு மாணவனை திருத்து வதுபோல, கணவனை உன் கட்சிக்கு மாற்று. நாளை உன் மகள் படித்து, வேலை க்கு போய் திருமணத்திற்கு தயாராவாள். அப்போது, உன் கணவனின் பங்களிப்பு மிக அவசியம்.
ஒருவரை கடுமையாக தண்டி க்க ஒரே வழி, அவரை மன்னி ப்பதுதான். உன் போலீஸ் கண வனை மன்னித்து ஏற்றுக் கொள். மீதி வாழ்நாளாவது அர்த்தபூர்வமாய் கழியட்டும். வாழ்த்துகள்!