Home சூடான செய்திகள் ராதிகா கடனைத் தீர்க்க எந்த சொத்தையும் விற்கவில்லை-விஷால்

ராதிகா கடனைத் தீர்க்க எந்த சொத்தையும் விற்கவில்லை-விஷால்

27

நடிகை ராதிகாவின் கடனை அடைக்க தனது வீட்டை விற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால், சமீரா ரெட்டி நடத்த வெடி படத்தை அவரது அண்ணன் விஷால் கிருஷ்ணா தயாரித்தார். இதனை விநியோகம் செய்யும் பொறுப்பை நடிகை ராதிகாவின் ராடான் டி.வி. நிறுவனம் ஏற்றது. இதற்காக அந்நிறுவனத்துக்கு ரூ.12 கோடி தருவதாக விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் போட்டு கொடுத்ததாகவும் அதில் ரூ. 9 கோடியை தர மறுப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் விஷால் மீது நடிகை ராதிகா புகார் செய்தார். அந்த புகார் மனுவில், “விஷாலின் வெடி படத்தை விநியோகம் செய்யும் பணிகளை ராடான் நிறுவனம் செய்து கொடுத்தது. இதற்காக விஷால் ரூ.12 கோடி தருவதாக ஒப்புக் கொண்டார். அந்த ஒப்புதலை கடிதமாகவும் எழுதிக் கொடுத்தார். படத்துக்கான சாட்டிலைட் உரிமை மூலம் ரூ.3 கோடி கிடைக்கிறது. அந்த தொகை போக மீதி ரூ. 9 கோடிக்கு விஷால் கையெழுத்திட்டு செக் கொடுத்தார்.

அந்த செக்கை வங்கியில் செலுத்திய போது பணமின்றி திரும்பி வந்துவிட்டது. இதன் பிறகு பல முறை விஷாலை தொடர்பு கொண்டு பணத்தை திருப்பி கேட்டும் அவர் தரவில்லை. எனவே விஷாலிடம் இருந்து ரூ.9 கோடி பணத்தை வாங்கித் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைடுத்து விஷால் அண்ணா நகரில் தனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

எனது பெயரில் உள்ள வீட்டை விற்று கடனை அடைத்ததாக வந்த செய்தி வெறும் வதந்தியே. சென்னையிலும், ஹைதராபாத்திலும் எனது பெயரில் சொத்துக்களே இல்லாதபோது அதை எப்படி விற்க முடியும். சொத்துக்கள் வாங்குவதும், விற்பதும் சகஜம். ஆனால் அதை கடன் பிரச்சனையோடு தொடர்புபடுத்தி பேசுவது வருத்தமாக உள்ளது.

ராதிகாவுக்கு பணம் கொடுக்க வேண்டியது எனது அண்ணனுக்கும், அவருக்கும் உள்ள பிரச்சனை. அதில் தேவையில்லாமல் என்னை இழுத்துவிட்டனர். மேலும் அந்தப் பிரச்சனை முடிந்து விட்டது என்றார்.