Home சூடான செய்திகள் மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரின் ஆணுறுப்பை அறுத்து, சமைத்து சாப்பிட்ட கணவன்

மனைவியை பலாத்காரம் செய்த டிரைவரின் ஆணுறுப்பை அறுத்து, சமைத்து சாப்பிட்ட கணவன்

20

downloadமனைவியை பலாத்காரம் செய்த டிரைவரை கொலை செய்து, அவரது ஆண் உறுப்பை அறுத்து எடுத்து வந்து மனைவியோடு சேர்த்து சமைத்து சாப்பிட்ட நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்தோனேஷிய நாட்டில் நடந்துள்ளது. இந்தோனேஷியாவின் லம்பங்க் மாகாணத்தில் ஒரு வேன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அதற்குள் ஒரு நபர் இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், ருடி எபன்டி (30) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: எனக்கும், எனது மனைவிக்கும் 2 மாதங்கள் முன்பு திருமணம் நடைபெற்றது. முதல் இரவு அன்று, எனது மனைவி, கன்னித்தன்மை இல்லாமல் இருப்பதை கண்டுபிடித்தேன். இதுகுறித்து மனைவியிடம் கேட்டபோது, “திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தெரிந்த டிரைவர் ஒருவர், என்னை பலாத்காரம் செய்துவிட்டார்.

எனவேதான், நான் கன்னித்தன்மையை இழந்துவிட்டேன்” என்று தெரிவித்தார். இதனால் எனக்கு முதல் இரவு மூட் இல்லாமல் போய்விட்டது. எனக்கு உரிய பொருளை அபகரித்த அந்த நபரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் என்னை தூங்கவிடவில்லை. எனவே சம்பவத்தன்று, எனது மனைவியை தொலைபேசியில் அந்த டிரைவரை தொடர்புகொள்ள செய்து, உல்லாசமாக இருக்க வருமாறு அழைப்புவிடுக்க செய்தேன். இதை நம்பிய டிரைவர், எனது மனைவி கூறிய இடத்துக்கு வந்தார். அப்போது, நான் மட்டும்தான் அங்கு இருப்பதை பார்த்து அதிர்ச்சியைடந்தார். அவர் சுதாரிப்பதற்குள், அந்த டிரைவரை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு, வேனுக்குள் போட்டு தீவைத்தேன். இவ்வாறு அந்த நபர் வாக்குமூலம் அளித்துள்ளார். கொலை செய்த பிறகு, டிவைரின் ஆண் உறுப்பை அறுத்து எடுத்து வந்த அந்த நபர், மனைவியிடம் அதை கொடுத்து சமைத்து தர சொல்லியுள்ளார். பிறகு, கணவனும், மனைவியும், பழிக்கு பழியாக அந்த டிரைவரின் ஆணுறுப்பை சாப்பிட்டுள்ளனர்.