Home சூடான செய்திகள் பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கும் விநோத சாமியார் – வீடியோ

பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கும் விநோத சாமியார் – வீடியோ

56

பெண்களைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து ஆசி வழங்கும் விநோத சாமியார் – வீடியோ

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கமலாபுரம் என்ற ஊரில் இளைஞர் ஒருவர் காவி உடை அணிந்து தன் னை சாமியார் என்று கூறிக் கொண்டு உலா வந்தார். அங்குள்ள அய்யப்பன் கோவிலின் பின்புறம் உள்ள அறையில் தங்கி இருந்தார். கோவிலுக்கு
வரும் பக்தர்கள் அவரையும் தரிசிக்க தொடங்கினர் .
தங்கள் குடும்ப பிரச்சினை, மனக்குறைகள் போன்றவ ற்றை சாமியாரிடம் கூறி நிவாரணம் கேட்டனர். அவர் களிடம் உங்களுக் கு பேய் பிடித்து இருக்கிறது. அதை கட்டிப்பிடி வைத் தியம் மூலம் நிவ ர்த்தி செய்கிறேன் என்று கூறி பெண் களை கட்டி அணை த்து முத்தம் கொடுத்தார்.
இதனால் சாமியார் அந்தப் பகுதியில் சாமியார் முத்த பாபா என பிரபலமானார். நாளுக்கு நாள் பெண்களின் வருகை அதிகரித்தது. சாமியாரின் சக்தி பற்றி அ வரது உதவியாளர் சுப்பா ரெட்டி நோட்டீஸ் அச்சடித் து விநியோகித்தார். அதில் பில்லி, சூனியம், ஏவல், பேய், உடல் நலக்கு றைவு போன்றவற்றை தீர்க்கும் அதிசய சாமியாரை சந்திக்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்து இருந் தார்.
இதற்கிடையே போலி சாமியார்பற்றி போலீசுக்கு ஏரா ளமான புகார்கள் வந்தன. சாமியார் பெண்களைக் கட் டிப்பிடித்து முத்தம் கொடுத்து மோசடி செய்வதாகவும் தெரிவி த்து இருந்தனர்.
இதையடுத்து போலீசார் க‌டந்த வாரம் சாமியாரின் அறைக் குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். பின்னர் அவரை கைதுசெய்து கோர் ட்டில் ஆஜர்படுத்தினார்கள். சாமியாரை 2 வாரம் காவலில்வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலு ம் அவரது நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவ ர் போல் இருப்பதால் சாமி யாரை மனநல மையத்தில் சேர்க்க கோர்ட்டு உத்தரவிட் டது. அதன்படி அவர் மன நல மையத்தில் சேர்க்கப்பட்டார்.
போலீசார் சாமியாரின் பெண் பகதர்களுக்கு முத்தம் கொடுப்பதும் அவரது தவறான நடவடிக் கைகளையும் உள்ளூர் சேனலில் பார்த்த னர். ஆண்கள் வந்தால் அவர்களுக்கு அவ ர் ஒரு எலுமிச்சை பழம் மட்டும் கொடுப் பார் பெண்கள்வந்தால் மட்டும் அவர்க ளை கட்டிபிடித்து முத்தம் கொடுத்து ஆசிர் வதிப்பார்.