Home சூடான செய்திகள் பெண்களுக்கு பிடித்த மாதிரி ஆண்கள், எப்படி நடந்து கொள்வது?

பெண்களுக்கு பிடித்த மாதிரி ஆண்கள், எப்படி நடந்து கொள்வது?

38

images (2)ஆணின் அருகாமையில் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பு உணர்வு இருக்கவேண்டும் என்பதைத் தான் பெரும் பாலான பெண்கள் விரும்புகின் றனர். காதலனோ… கணவனோ…. தன் னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும்… கண்ணுக்குள் வைத்து காப்பாற்ற வேண்டும் என்று நினைப்ப வர்கள்தான் அதிக அளவில் உள்ளனர்.
தனக்கு கணவனாக, காதலனாக இருப்பவன், தன்னை புரிந்து கொள்பவ னாக, தன்னை மதிப்பவனாக, தன்மீது அளவில்லாத பிரியம் கொண்ட வனாக இருக்கவேண்டும் என்றுதான் அனைத்துப் பெண்களும் விரும்பு கின்றனர்.
இக் காலத்தில் தைரியமான பெண்ணாக இருந்தாலும் கூட தன்னுடைய கணவரின் கையினை பாதுகாப்போடு பிடித்துக்கொள் ளவேண்டும் என்று நினைப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். அதுபெண்களுக்கே உள்ள இயல்பான ஒன்று. அவர்களுக்கு பாதுகாப்பா னராக இல்லாமல், ஏதாவது பிரச்சினை என் றால் பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை அவர்களு க்கு அறவே பிடிப்பதில்லை.
பெண்களுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்து கொ ள்வது என்று தெரிய லையே… ஏன் திடீர்னு நம் மை விட்டு விலகுறா? என்ன காரணம்னு தெரிய லையே என்று குழம்ப வேண்டாம். கீழ்கண்ட தகுதி உங்களுக்கு இருக்கிறதா என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

முப்பொழுதும் உன் கற்பனைகள் என்று கூறுவா ர்களே… அதே போல சதா சர்வகாலமும் காதலி அல்லது மனைவியின் நினைப்பிலேயே இருக் கும் ஆண்களை அதிகம் பிடிக்குமாம்.

அழகான ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என்ற கருத்து நிலவுகிறது. அது தவறான கருத்து அழகைவிட ஆண்மை நிறைந்த, எதையும் தைரியமாக சொல்லத் துணிந்த, செய்யத்துணிந்த ஆண்களைத் தான் பெண்கள் விரும்புகின்றனராம். அவர் களின் கைகளில் பாதுகாப்பாக இருப்பதை த்தான் விரும்புகின்றனராம்.

நேர்மையான ஆண்களைத்தான் அதிக அளவில் பெண்கள் விரும்பு கின்றனர். எதையு ம் நேருக்கு நேராக சந்திக்கும் ஆண்கள்தான் பெண்களின் விருப்பமாக உள்ளது.

பெண்களின் செயல்பாடுகளை பாராட் டுவதோடு, அவர்களை மதிக்கும் ஆண் களின்மீது தனி மரியாதை ஏற்படுகிற து. அதோடு அதிகமாக உற்சாகப்படுத் தும் ஆண்களை அதிக அளவிலான பெண்கள் விரும்புகின்றனராம்.

காதலியாக இருக்கும்போது அதிக கவனம் செலுத்திவிட்டு மனைவியா ன பின்னர் அம்போ என்று விட்டுவிடும் ஆண்களை பிடிப்ப தில்லையாம். திருமணத்திற்குப் பின்னரும் தனி கவனம் செலுத்தி தன்னைக் கொண்டாடும் ஆண்களைத் தான் அதிக பெண்கள் விரும்புகின்றன ராம்.

மனைவியை அன்போடு தொடுவதும், அவ்வப் போ து கொஞ்சுவதும், சின்னச் சின்னதாய் பாராட்டுடன் கொடுக்கும் முத்தமும் மிகப்பெரிய பரிசாக போற்ற ப்படுகிறதாம். கோடி ரூபாய் கொடுத்து வாங்கித்தரு ம் வைர நெக்லஸைவிட அன்போடு வாங்கிக் கொ ண்டு போகும் மல்லி கைக்கு ஈடாகாது என்கின்றனர் அனுபவசாலிகள்.