Home இரகசியகேள்வி-பதில் பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து

பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து

151

1067 copyTamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,நான் ஒரு பெண். பிற‌ப்புறுப்பில் சில‌ நாட்க‌ளாக அரிப்பு இருந்து வ‌ந்த‌து.
டாக்ட‌ரிட‌ம் சென்று ஆலோச‌னை பெற்ற‌தில் விரைவில் ச‌ரியாகிவிடும் என்று சொல்லி ஒரு க்ரீமை த‌ட‌வ‌ச் சொன்னார். ஆனால் த‌ற்போது அரிப்பும் வெள்ளையாக திர‌வ‌ம் போன்ற ஒன்று வ‌டிகிற‌து வாடையுடன் கடந்த 3 நாட்களாக‌. இதுவ‌ரை உட‌லுற‌வு கொண்ட‌தில்லை. அந்த இட‌த்தில் சிறு புள்ளியாய் கிள்ளியெடுத்த‌து போன்று இரு இட‌ங்க‌ளில் இருக்கிற‌து. என்னவெண்று தெரிய‌வில்லை. வ‌லி ஏதும் இல்லை ஆனால் அரிப்பு உள்ள‌து. இத‌ற்கு தீர்வு என்ன‌? ஆலோச‌‌னைக‌ள் சொல்வீர்க‌ளா? ம‌ருந்துக‌ள் ஏதேனும்??

இத‌னால் மிகுந்த ம‌ன‌ வ‌ருத்த‌த்தில் உள்ளேன். வேலையிலும் ஈடுபாடின்றி இருக்கிறேன். கூடிய விரைவில் த‌ங்க‌ளிட‌மிருந்து இத‌ற்கான ப‌திலை ப‌திவின் மூல‌ம் எதிர்நோக்கியுள்ளேன். நன்றிகள் பல‌”
அன்பு சகோதரி!

நீங்கள் கூறியுள்ள குறைந்த பட்சத் தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, இது ஒன்றும் பயப்படத்தக்க விஷயம் இல்லை எனவே கருதுகிறேன்.
உடலுறவு ஏதும் இல்லை எனச் சொல்வதால், இது ஒரு பால்வினை நோயாக இருக்க வாய்ப்பில்லை.
அரிப்பு, வாடை கலந்த வெள்ளை நிறத் திரவம் என்கையில் இது ஒரு நோய்தான் எனத் தெரிகிறது!
சாதாரணமாக, பெண்களுக்கு பிறப்புறுப்பில் ஒரு வெள்ளை நிறத் திரவம் வரும்
ஆனால், அதில் வாடை இருக்காது.
பாக்டீரியல் வஜைனோஸிஸ் [Bacterial vaginosis], அல்லது க்ளாமைடியா[Chlamydia] கிருமிகளின் தொந்தரவால் பால்வினை[sexullay transmitted diseases] அல்லாத இது போன்ற விளைவுகள் வரலாம்.
அப்போது வாடையுடன் கலந்த வெள்ளை [அ] பழுப்பு நிறத் திரவம் வரலாம்.
அரிப்பும் இருக்கக் கூடும்.
இதற்கு ஃப்லாஜைல்[Flagyl] என்கிற மெட்ரோநிடஸால்[Metronidazole] மாத்திரை மிகுந்த பயனளிக்கும்.
இது க்ரீம் [flagyl cream] வடிவிலும் கிடைக்கும் என்றாலும், ரத்தத்தில் கலந்த கிருமிகளை[bacteria] அழிக்க, மாத்திரை உட்கொள்வதே சிறந்தது.
500 [அ] 750 மில்லிகிராம் மாத்திரைகளை தினம் ஒன்றாக 7 நாட்களுக்கு எடுக்கவும்.
பலனளிக்கும் என நம்புகிறேன்…. நீங்கள் சொன்ன தகவல் அனைத்தும் உண்மையெனில்!
உபயோகித்தபின் தெரிவியுங்கள்!

கேள்வி: ‘வாஸெக்டமி’ என்றால் என்ன? இது எப்படி செய்யப்படுகிறது?

பதில்: பொதுவாக ‘குடும்பக் கட்டுப்பாடு ஆப்பரேஷன்’ என வழங்கப்படும் இதன் நேரடி மொழிபெயர்ப்பு ‘குழாய் அறுப்பு’ என்பதே!
விதைப்பைக்குள்[scrotum] இருக்கும் விதைகளில்[testicle] இருந்து சுரக்கும் விந்தணு[sperm] ஒரு குழாய்[vas deferans] மூலமாக…. ஒவ்வொரு விதை[விரை][testicle]யிலிருந்தும் ஒரு குழாய்… இதை எடுத்துச் செல்ல உதவும் விந்துவுடன் கலந்து உடலுறவின் இறுதியில் பெண்ணின் உறுப்புக்குள் பாய்கிறது.
இந்தக் குழாய்கள் துண்டிக்கப்படும் அறுவைச் சிகிச்சையே இந்த ‘வாஸெக்டமி’.
இதன் மூலம் ஒரு ஆண் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை மட்டும் இழக்கிறான்…… தன் ஆண்மையை அல்ல!
இது ஒரு எளிய அதிகம் செலவில்லாத சிகிச்சை.
இனிமேல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்கச் செய்யமுடியாது என்ற ஒன்றைத் தவிர, ஒரு ஆணின் செயல்பாட்டில் வேறு எந்தக் குறைபாடும் வருவதில்லை என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உடலுறவில் எந்தவொரு சிரமமும் இல்லாமல் செயல்பட முடியும்… விந்துவும் வெளியேறும்… பெண் கர்ப்பமாவதில்லை… அவ்வளவுதான்!

இது பற்றிய சரியான, முறையான அறிவு இல்லாமல், பெண்களைக் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி அவர்களைக் கஷ்டப்படுத்தும் கொடுமை அதிகமாவதை நாமெல்லாம் தவிர்க்கலாமே.
இது ஒரு 30- 45 நிமிஷ வேலை!
விரைப்பையின் ஒரு பக்கத்தில் முதலில் மரத்துப்போகும் ஊசி போடப்பட்டு, ஒரு சிறிய துளை மூலம், இந்தக் குழாய் துண்டிக்கப்படுகிறது. துண்டிக்கப்பட்ட இருமுனைகளும் தைக்கப்பட்டு, விரைப்பையின் துளையும் தைக்கப்படுகிறது.
இதேபோல், இப்போது, அடுத்த பக்கத்திலும் இது செய்யப்படுகிறது.
இதை கத்தியில்லாமல் செய்யும் முறைகளும் இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.
இதைச் செய்யும்போது ஒரு வலியும் இருக்காது. அடுத்து சில நாட்களுக்கு அந்த இடத்தில் சற்று லேஸான வலி இருக்கலாம்.

கேள்வி: இதனால், எந்தத் தொந்தரவுமே இருக்காதா?

பதில்: இல்லை எனச் சொல்ல முடியாது! எந்த ஒரு அறுவை சிகிச்சையிலும் வரக்கூடிய கோளாறுகள்[infection] இதிலும் வரலாம்….. கவனமில்லாமல் இருந்தால். சீழ் பிடித்தல், ஜுரம், ரத்தப்போக்கு போன்றவை ஒருசிலருக்கு வரலாம். ஆனால், இதன் சாத்தியக்கூறு இப்போதெல்லாம் அநேகமாக இல்லை என்றே சொல்லலாம்.
கேள்வி: இதைச் செய்த எத்தனை நாள் கழித்து ஒருவர் உடலுறவில் ஈடுபடலாம்?
பதில்: 4 வாரங்களுக்குப் பிறகு உடலுறவில் ஈடுபடமுடியும் என்றாலும், 8 முதல் 10 வாரம் அல்லது 15 முதல் 20 முறை விந்து வெளிப்படும் வரை, விந்தணு விந்துவில் இருக்கக்கூடிய சாத்தியக் கூறு இருப்பதால், மருத்துவ சோதனைகள் மூலம் இது இல்லை என உறுதிப்படுத்திய பின்னரே இதன் பயனை உணரமுடியும். அதுவரையில் “தன் செயலாகவோ” [masturbation]அல்லது ஆணுறை[condom] உபயோகித்தோ இதில் ஈடுபடுவது நல்லது.
கேள்வி: எனது செயல்பாட்டில் ஏதேனும் மாற்றம் இருக்குமா?
பதில்: குறி விறைப்பு, [erection]செயல்பாடு, [performance]விந்து வெளியேற்றம்[ejaculation] இந்த எதிலும் ஒரு மாற்றமும் இருக்க வாய்ப்பே இல்லை. அப்படி ஏதாவது வந்தால், நண்பர் சுல்தான் சொன்னது போல, செய்துகொண்டவரின் [அறியாமையால் வரும்] மனநிலை மாறுபாடு மட்டுமே இதற்குக் காரணம்.
பொதுவாக, இனி கரு உண்டாகாது என்னும் உணர்வு, ஒரு புதுவித உற்சாகத்தைக் கொடுத்து, பயமில்லாமல், உடலுறவில் ஈடுபட வழி வகுக்கிறது என்றே ஆய்வுகள் சொல்லுகின்றன.
விந்தணு இல்லாமல் செய்கிறது இந்த சிகிச்சை! ஆண்மை இழக்கச் செய்வதில்லை!
ஆண்மைத்தன்மையைக் காட்டுகின்ற தாடி மீசை போன்றவற்றுக்குக் காரணமான சுரப்பிகளும் இந்த விதை[ரை]யில்தான் சுரக்கின்றன. அவற்றுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுவதில்லை. விந்துவின் அளவிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படுவதில்லை… விந்தணுக்களின் சதவிகிதம் 2 முதல் 5 வரையே, மொத்த விந்துவில்!
கேள்வி: இப்படிச் செய்துகொண்டபின் இதை திரும்பவும் பழையபடி மாற்றமுடியுமா?
பதில் : முடியும்! இப்போது இது அதிக அளவிலேயே செய்யமுடிகிறது! ஆனால், இதைச் செய்துகொள்வதால் விந்தணு மீண்டும் வரத் துவங்கும் என்ற உத்திரவாதம் இல்லை! மேலும், இதைச் செய்ய அதிகப் பணம் செலவாகும். கவனம்! கவனம்!

அதில் ஆர்வமில்லையா?

கணவன் மேல் உயிரையே வைத்திருப்பாள். ஆனாலும் செக்ஸ் என்றாலே வாந்தி வரும் அளவுக்கு அதை வெறுப்பாள். இந்த உணர்வுடன் நாளுக்கு நாள் ஊதும் உடல், முறையற்ற மாதவிடாய், தூக்கமின்மை, சோம்பேறித் தனம், எதிலும் விட்டேத்தியான மனோபாவம் ஆகியவையும் உங்களிடம் இருக்கா? உங்களை பாதித்திருப்பது சாட்சாத் தைராய்ட் பிரச்சினையே தான்.
தீர்வு :- உடனடியாக மருத்துவரை சந்தித்து தைராய்டு சோதனை மேற்கொள்ளுங்கள். மன உளைச்சல் இருந்தால், அதற்கும் சிகிச்சை அவசியம். சரியாக சாப்பிடுவது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மிதமான உடற்பயிற்சி போன்றவையெல்லாம் உங்கள் மூடை மாற்றும். பிறகென்ன…. நேத்து ராத்திரியம்மா…. தான் தினம் தினம்.
கனவாய் தொடரும் உச்சக் கட்டம்…..
பத்திரிகைகளில் படித்தது, மற்றவர்கள் சொல்லக் கேட்டதோடு சரி, மற்றபடி உச்சக் கட்டம் என்பது இன்னும் உங்களுக்கு எட்டாமலேயே இருக்கிறதா?
தீர்வு:- சர்க்கரை நோய் இருக்கலாம் உங்களுக்கு. உடனே சோதித்துப்பாருங்கள். சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு இடுப்பெலும்பு மற்றும் ஜனன உறுப்புகளுக்குச் செல்கிற இரத்த ஓட்டம் குறைவாக இருக்குமாம். அதனாலேயே அவர்களுக்கு உறவு விரக்தியில் முடிகிறதாம். சர்க்கரையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது ஒன்றுதான். முழுதானிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வது இன்சுலின் சுரப்பை முறைப்படுத்தி, உறவின் போதான உச்சக் கட்டத்துக்கு உதவியும் செய்யுமாம்.
உறுப்பின் வறட்சி….
இந்தப் பிரச்சினை எந்த வயதினருக்கும் வரலாம் என்றாலும் மெனோபாஸ் ஸ்டேஜில் இருக்கிற பெண்களுக்கு மிக சகஜம். காரணம் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவது. இதுவரை மெனோ பாஸுக்கான அறிகுறியே பிறப்புறுப்பு வறட்சி என்று சொல்லப் பட்டது. இப்போது, உயர் இரத்த அழுத்தத்தாலும் ஏற்படலாம் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது.
தீர்வு:- வாசனையான சோப், பிறப்புறுப்பை சுத்தம் செய்கிற வாசனைத் திரவியங்கள், டைட்டான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்ட் போன்றவை தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கிரிம், வழுவழுப்புத் திரவம் போன்றவற்றையும் உபயோகிக்கலாம். மெனோபாஸ் வயதில் இருந்தால் ஹார்மோன் ரிப்ளேஸ்மென்ட் தெரபி எடுத்துக் கொள்வதைப் பற்றி மருத்துவரிடம் பேசலாம்.

உறவுக்குப் பின் உதிரப் போக்கு….
உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை இது. சில சமயங்களில் இது புற்றுநோய்க்கான ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள். இளம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் கர்ப்பத் தடை மாத்திரைகள் உட்கொள்கிறவர்களிடம் இது அதிகம் காணப்படுகிறதாம். வேறு அறிகுறிகள் இல்லாததாலும், அனேகமாகப் பெண்களால் புறக்கணிக்கப் படுவதாலும், இந்தப் பிரச்சினை, பிற்காலத்தில் மலட்டுத் தன்மைக்கும் வழி வகுக்கலாம். ரொம்பவும் இளம் வயதுப் பெண்களிடம் காணப்படுகிற பட்சத்தில் அது ப்ரி மெனோபாஸுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தீர்வு:- புற்றுநோய்க்கான சோதனை செய்து பார்ப்பது பாதுகாப்பானது. தொற்றுக் கிருமிகளின் தாக்குதலாக இருக்கும் என்கிற பட்சத்தில் ஆண்டிபயாடிக் உதவியால் சரி செய்யலாம்.
வலி தரும் உறவு…..
சந்தோஷத்தைத் தர வேண்டிய செக்ஸ் வலியையும், வேதனையையும் தருகிறதா?
பெரும்பாலும் இது மனம் சம்பந்தப்பட்ட பிரச்சினையே. அப்படியில்லை என உறுதியானால் மட்டுமே பிற சோதனைகள் அவசியம். பிறப் புறுப்பின் லைனிங் பகுதி மிக மிக மென்மையானது. அது மிகச் சுலபமாக பாக்டீரியா மற்றும் பால்வினை நோய்த் தொற்றுக்களால் பாதிக்கப் படக்கூடும். அதன் விளைவாக உறவின்போது எரிச்சல், வலி, கசிவு போன்றவை இருக்கலாம். என்டோமெட்ரியாசிஸ் என்கிற நோயின் விளைவாகவும் உறவின் போதான வலி இருக்கலாம். மிக அபூர்வமாக சிலருக்கு சினைப்பை கட்டியின் காரணமாகவும் இந்த வலி இருக்கலாம். வயிற்று வலி, கொஞ்சம் சாப்பிட்டதுமே வயிறு நிறைந்து விட்ட உணர்வு, மலச்சிக்கல் மாதிரியான நினைத்துப் பார்க்க முடியாத காரணங்களாலும் இந்த வலி இருக்கலாம் என்கிறார்கள்.
தீர்வு:- பெரும்பாலும் ஆண்டிபயாடிக் மருந்துகளே இதற்கு குணம் தரும். வேறு கோளாறுகள் இருக்குமென சந்தேகப் பட்டால் லேப்ராஸ் கோப்பி மூலம் சோதனை செய்வார்கள். பிறப்புறுப்புத் தொற்று என்றால் அதற்கான கிரிம் மூலமே சரிசெய்து விடலாம்.