Home பெண்கள் பெண்குறி பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!

38

Wild-Pink-Sensual-Imported-Net-Bra-Panty-Set-Sexy-Lingerie-Set-Previewபிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என
நினைப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி!
பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராய ம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய்தி.
குழந்தை பிறப்பதற்கு நான்கு மாதங்க ளுக்கு முன்பே அது பெண்ணாக இருக் கிற பட்சத்தில் பிறப்புறுப்பு முழு உருவம் பெறுகிறதாம். கருத்தரித்த பத்தாவது வாரத்தில், குழந்தை ஆணா, பெண்ணா என்பது தீர்மான மாகி, ஆணாக இருக்கிறபட்சத்தில்
ஆணுறுப்பும், பெண் என்றால் பிறப்புறு ப்பும் வளர ஆரம்பிக்குமாம்.
முதல்முறை செக்ஸ் உறவின்போது பிறப்புறுப்பில் உள்ள கன்னித் திரை கிழிய வேண்டுமா, இரத்தப் போக்கு கட் டாயமா என்பது பலரு க்கும் மண்டை யைக் குடைகிற கேள்வி. பெண்ணின் நடத்தையை சந்தேகிக்க வைக்கிற அளவுக்கு இது தீவிரமானதாகவும் இருக்கிற து. செக்ஸ் உறவின் மூலம் மட்டும்தான் இந்தக் கன்னித்திரை கிழிய வே ண்டும் என்பதில்லை. விளையா ட்டு, நடனம், நீச்சல், உடற்பயிற் சி எனப் பல விஷயங்கள் இதற் குக் காரணமாக இருக்கலாம். அபூ ர்வமாக சில பெண்கள் இந்த கன்னித்திரை இல்லாமல் பிறப்ப தும் உண்டு. இன்னும் சிலருக்கு அந்த சவ்வு மிகவும் தடித்திருக்கும். திருமணத்துக்கு முன்பு அறு வை மூலம் அது அகற்றப்பட்டால் தான் அவர்களால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும்.
பிறப்புறுப்புக் கசிவு என்பது சகஜமான விஷயம். செக்ஸ் உறவின் போது இந்தக் கசிவு இருக்கும். சில பெண்களுக்கு இந்த அளவு அதிகமாகவும், சிலருக்குக் குறை வாகவும் இருக்கும். இரண்டுமே சாதாரண மானவைதான்.
பிறப்புறுப்பு என்பது அறுவறுப்பான, அசிங்கமான உறுப்பு என்கிற அபிப்ராயம் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல செய் தி. ஒவ்வொரு பெண்ணின் பிறப்புறுப்பிலும் சுமார் பதினைந்து விதமான பாக்டீரியா கிருமி கள் குடியிருக்குமாம். அத்தனையும் நல்ல பாக் டீரியா. அதனால் கெட்ட கிருமிகள் அத்தனை லேசில் அங்கே நுழைய முடியாதாம்.
உடலின் மற்ற பகுதிகளைப் போலவே பிறப்பு றுப்புக்கும் காற்றோட்டம் அவசியம். அப்போது தான் அந்தப் பகுதி சுவாசிக்க முடியுமாம். அத ற்கு இடம் கொடுக்காமல் எப்போதும் இறுக்க மான உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் அணிகிறவர் களுக்கு அடிக்கடி பிறப்புறுப்புத் தொ ற்று வர வாய்ப்புண்டாம்.
பல பெண்களையும் தர்ம சங்கடத்து க்கு உள்ளாக்கும் விஷயம் அந்தரங் க உறுப்பில் உண்டாகும் அரிப்பு. அந்த இடத்தின் வறட்சி, இறுக்கமா ன உடை போன்றவை இதற்குக் கார ணமாக இருக்கலாம். அரிப்பு ஒரு நாளைக் கடந்து தொடர்ந்தாலோ, பிறப்புறுப் பின் உள்ளே அரிப்பிருந் தாலோ, அது ஈஸ்ட் தொற்றாகவோ, பால்வினை நோயின் அறிகுறியாகவோ இருக்கக் கூடும்.
மாதம் ஒரு முறை மார்பக சுய பரிசோதனை வலியுறுத்தப்படுகிறமாதிரியே, பிறப்புறுப்பு சுய பரிசோதனையும் அவசியம். அந்த இடத்தில் காணப்படுகிற சிறியகொப்புளங்கள், பருக்கள் போன்றவை அலட்சியப்படுத்தப்படலாம். ஆனால் வேறு ஏ தேனும் வித்தியாசங்களை உணர்கிற பட்சத் தில் அது உடனடியாக மருத்துவப் பரிசோத னைக்குட்படுத்தப் பட வேண்டும்.
ஒரு பென்சில் நுழையக் கூடிய அளவே உள் ள பிறப்புறுப்பானது, பிர சவத்தின் போது ஒரு குழந்தையையே வெளியேற்றும் அளவுக்குப் பன்மடங்கு பெரிதாக விரிந்து கொடுக்கும். அதற்காகக் கவலை வேண்டாம். குழந்தை பிறந்த ஆறு மாதங்களில் அது மீண்டும் அதன் பழைய அளவுக்கே சுருங்கி விடும்.
பிறப்புறுப்பிலிருந்து வாடை வீசுவது ரொம்பவே சாதாரணமான வி ஷயம். அந்த உறுப்பு ஆரோக்கியமாக இயங் குகிறது என்பதற்கான அடையாளங்க ளில் அதுவும் ஒன்று. இது தவிர நீங்க ள் உட்கொள்கிற உணவின் தன்மை, அதாவது மசாலா, பூண்டு மாதிரியான உணவுகள், மாத விலக்கு சுழற்சியின் தன்மை, செக்ஸ் உறவுக்குப் பிறகா ன சுத்தம் போன்றவற்றைப் பொறுத்து அந்த வாடை அதிகரிக்கலா ம்.
பிறப்புறுப்பிலிருந்து வீசும் துர்வாடையை மறைக்கப் பல பெண்கள்அங்கே சென்ட் உபயோகிப்ப துண்டு. சென்ட், வாசனை சோப், டிஷ் யூ மாதி ரியானவை அந்தப் பகுதியை பாதிக் கும். வெறும் தண்ணீரும், மிதமான சோப்பும் மட்டுமே பிறப்புறுப்பு சுத்த த்துக்குப் போதும்.
குழந்தை பிறந்தபிறகு பிறப்புறுப்பின் இறுக்கம் தளர்ந்து விட்டதாகவும், அதன் விளைவாக தம்பதியருக்கிடையேயான நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு, கெகல் எனப்படும் பிரத்யேகப் பயிற்சியின் மூலம் அந்த இடத்தை மீண்டும் டைட்டா க்கலாம். சிறுநீர் கழிக்கிற போது அதைப் பாதியிலேயே அடக்கிக் கொள்கிற மாதிரியான பயிற்சி தான் இது. மருத்துவரின் ஆலோச னையின் பேரில் சரியாகச்செய்கி ற பட்சத்தில் கட்டாயம் பலனளிக் குமாம்.
சினைமுட்டை சினைக்கிற காலக் கட்டத்தில் பெண்களுக்கு அந்தர ங்க உறுப்பின் கசிவு சற்றே அதிகமாக இருக்கும். அதாவது ஒன்று முதல் இரண்டு டீஸ்பூன் வரை இருக்கு ம். இறந்த செல்களின் வெளியேற்றம் தான் இந்தக் கசிவு. மற்ற நாட்களில் இந்தக் கசிவு ஒரு நாளைக்கு அரை டீஸ் பூன் அளவாகக் குறைந்து விடும்.
அபூர்வமாக சில பெண்களுக்கு பிறப்பு றுப்பின் வழியே ஏதேனும் பொருட்கள் உள்ளே சென்று விடக் கூடும். அது கர்ப் பப்பையில் சென்றுமிதக்காது. வெறுமனே விரல்களைவிட்டு அதை எடுக்க முடியுமா எனப்பார்க்க வேண்டு ம். அது முடியாத பட்சத்தில் மருத்துவ ரை அணுகுவதே பாதுகாப் பானது.
ஐயாயிரத்தில் ஒரு பெண் குழந்தை வீதம் பிறப்புறுப்பும், கர்ப்பப்பையும் இல் லாமல் பிறப்பதுண்டு. ஆனாலும் செய ற்கையாக பிறப்புறுப்பை வைக்கிற அளவுக்கு இன்றைய நவீன மரு த்துவத்தில் வசதிகள் பெருகிவி ட்டதால் கவலை வேண்டாம். குழந்தை பெற வாய்ப்பில்லாம ல் போனாலும், அவர்களது செக் ஸ் வாழ்க்கை பாதிக்கப்படாமலி ருக்க இப்படிப்பட்ட சிகிச்சைகள் வரப்பிரசாதம்.