Home இரகசியகேள்வி-பதில் பாலுறுப்பு தொடர்பான பாலியல் கேள்விகள்

பாலுறுப்பு தொடர்பான பாலியல் கேள்விகள்

54

டாக்டர், ரெண்டு வாரத்துக்கு முன்னால், என் பிறப்பு உறுப்பு பகுதியில் தாங்க முடியாத அரிப்பு ஏற்பட்டது. முதலில் நான் கவனம் செலுத்தாமல் விட்டாலும், இன்னைக்கு கவனமாக கீழே பார்த்தேன். பார்த்தால், என் தோலிலும், அங்கே வளர்ந்திருந்த முடியிலும் நிறைய, சின்ன சின்ன பேன்கள் இருந்தன. நிறைய இருப்பதால், எல்லாவற்றையும் பிடுங்க முடியவில்லை. இது என்ன? இந்த பிரச்சனையை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது?

விடை:

“பாலுறுப்புப் பேன்” என்ற ஒரு வகை ஒட்டுண்ணி பூச்சியால் நீங்கள் பாதிப்பு

இந்த பேன்கள் முக்கியமாக உடலுறவு வழியாகத் தான் தொற்றிக் கொள்கின்றன. இவற்றில் மூன்று வகை உண்டு. முதிர்பேன் (Adult ) இளம்பேன் (nymph ) மற்றும் ஈர் (nits ). முதிர்ந்த பெண் பேன், ஈர் அல்லது முட்டைகளை பாலுறுப்பில் உள்ள மயிரிலோ அல்லது தோலிலோ இட்டுவிடும். இந்த முட்டைகள் 7-14 நாட்களுக்குள் இளம்பேனாக அவதரித்து விடும். பேன்கள் மனித ரத்தத்தை உறிஞ்சியே உயிர் வாழும். இது தவிர, மனித உடம்பின் வெப்பம் மற்றும் சொரசொரப்பான தோல் பகுதியில் தான் இவை உயிர் வாழ முடியும். இவை, தலை முடியில் வாழாது.

இது பரவும் முறை:

* இது பெரும்பாலும் பாலுறுப்புப்பேன் உள்ள ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ உடலுறவு கொள்வதால் தான் தொற்றிக் கொள்கிறது.

* இந்தப் பேன்கள் உள்ளவர்களுடன் உங்கள் உடைகள், டவல், போன்றவற்றை பகிர்ந்து கொள்வது.

* இந்தப் பாதிப்பு உள்ளவர்களின் படுக்கையில் தூங்குவது.

* இந்த வகைப் பேன்கள் நாய், பூனை போன்ற மிருகங்களின் உடம்பில் வாழாது, அதனால் மிருகம் மூலமாக இது பரவ வாய்ப்பு இல்லை.

* மற்றவர்களின் வேர்வை, அல்லது நெருங்கி பழகுவதாலும் உங்களுக்கு தொற்றிக் கொள்ளக் கூடும். நீங்கள் மிகவும் அசுத்தமான இடங்களில் வசித்தால் இந்த பிரச்சனை அதிகமாக ஏற்படலாம்.

பாதிப்புகள்:

இந்தப் பேன்கள் ரத்தம் குடிப்பது, மற்றும் முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதைத் தவிர உங்களுக்கு வேறு எந்த நோயையும் தராது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் மூன்றில் ஒரு பங்கு இந்த பேனுள்ள மக்களுக்கு, மற்றொரு பால்வினை நோயாலும் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இதனால் உங்களுக்கு இந்த பேன்கள் இருந்தால் மற்ற பால்வினை நோய்கள் இருக்க அதிகமான வாய்ப்பு உள்ளது. இதே போல ஒரு சிறுவனோ சிறுமிக்கோ இந்த வகைப் பேன்கள் தாக்கி இருந்தால் அவர்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு (பலாத்காரம்) உட்படுத்தப் பட்டிருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். எல்லா நேரங்களிலும் இது போல இல்லாவிட்டாலும், இதற்கான வாய்ப்பு உள்ளதால், அந்த சிறுவன்/சிறுமியை தீர விசாரிப்பது நல்லது.

நிவாரணம்:

* முதலில் உங்களைத் தொற்றி இருப்பது இந்த வகைப் பேன்கள் தானா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.நல்ல வெளிச்சமும், ஒரு கண்ணாடியையும் வைத்து, ஒரு பேனை பிடுங்கி, உற்று கவனியுங்கள். அது கிட்டதட்ட ஒரு சின்ன நண்டு போலவே இருக்கும்.

* அடுத்து, நீங்கள் மருத்துவரை அணுக வேண்டுமா என்று யோசியுங்கள். மருத்துவர் உதவி இல்லாமல் நீங்கள் இந்த பேன் தொல்லையில் இருந்து விடுபட முடியும் என்றாலும், உங்களுக்கு வேறு பால்வினை நோய் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள். மருத்துவரை அணுக முடிவு செய்தால், நீங்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.

* நீங்கள் மருந்துக் கடைக்கு சென்று Permethrin 1% pyrethrins சேர்ந்த லோஷன் வாங்கிக் கொள்ளுங்கள். இது கிடைக்காவிட்டால், சாதாரண லோஷனாவது வாங்கிக் கொள்ளுங்கள்.

* இந்த பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்: கண்ணாடி, ரேசர் அல்லது முடி நீக்கும் கிரீம், நல்ல சீப்பு, நிறைய தண்ணீர், சோப்பு, நீங்கள் வாங்கி வந்த ஷாம்பு மற்றும் டவல்.

முதலில் உங்கள் உறுப்பில் உள்ள முடிகளை ரேசரை வைத்தோ அல்லது கிரீமை வைத்தோ முற்றுமாக நீக்கி விடுங்கள். முக்கியமாக உங்கள் ஆசன வாய்க்கு (குண்டி) அருகே உள்ள முடிகளையும் கவனமாக நீக்குங்கள். உங்கள் அக்குள், வயிறு போன்ற இடங்களில் இந்த பேன்கள் இருப்பதாக சந்தேகித்தால், அவற்றையும் நீக்கி விடுங்கள்.

* இப்போது நீங்கள் வழித்த ரோமத்தை கவனமாக தண்ணீரில் போட்டு ப்ளஷ் செய்து விடுங்கள். இது போல செய்யாவிட்டால், இந்த பேன்கள் மற்றவர்களையோ அல்லது உங்களையோ திரும்ப அணுக வாய்ப்பு உண்டு.

அடுத்து, உங்கள் உறுப்புப் பகுதியை நீங்கள் (சுடு) நீரில் அரை மணி நேரம் முக்கி வையுங்கள். உங்கள் வீட்டில் பாத் டப் இல்லையென்றால் ஒரு பெரிய வாளியை உபயோகப் படுத்துங்கள். இப்படி செய்வதன் மூலம், கிட்ட தட்ட எல்லா ஈர்களையும் நீங்கள் ஒழித்து விடலாம்.

* இப்போது நீங்கள் வெளியே வந்து, நன்றாகத் துவட்டிக் கொண்டு, கண்ணாடி மற்றும் வெளிச்சத்துடன் இன்னும் பேனோ அல்லது ஈரோ தோலோடு ஒட்டிக் கொண்டிருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அவற்றை பிடுங்கி எறியுங்கள்.

* இப்போது லோஷனை தடவிக் கொள்ளுங்கள்.

* அடுத்து உங்கள் படுக்கைத் துணிகள், மற்றும் தலையணை உறை ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு, புதிதாக அவற்றை வாங்கி உபயோகப் படுத்துங்கள். குறைந்தபட்சம், அவற்றை வெந்நீரில் துவைத்து, பின் உபயோகப் படுத்துங்கள்.

* இப்போதைக்கு நீங்கள் இந்தப் பேன்களை ஒழித்து விட்டீர்கள். ஆனால் இரண்டு வாரங்களுக்கு, தினமும் உங்கள் உறுப்பை நீங்கள் உற்றுக் கவனியுங்கள், ஏனெனில் ஒரே ஒரு பேன் உயிரோடு இருந்தால் கூட, அது தினமும் ஆறு முட்டைகளை இட்டு, பன்மடங்காக பெருகி விடும்.

* இரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்கள். இதனால் மற்றவர்களுக்கு இதைப் பரப்புவதை தவிர்க்கலாம்.

முதல் முறை காம அனுபவத்தை பற்றி பல ஆண்களும், பெண்களும் கவலையோடும், பயத்தோடும், பல கேள்விகளை அனுப்பி வருகிறார்கள். அவற்றில் சில இதோ:

முதல் முறை உடலுறவு செய்யும்போது வலிக்குமா?

ஒரு பெண்ணுக்கு உங்கள் கன்னித்திரை உடைக்கப் படுவதால், கொஞ்சம் வலிக்கவே செய்யும். அதே போல, ஆண்களும் முதல் முறை பெண்ணுறுப்பில் தங்கள் ஆண் குறியை நுழைக்கும் போது கொஞ்சம் எரிச்சலாக இருக்கும். இது ரொம்ப சகஜமான விஷயம் தான். நீங்க்கள் பல முறை உடலுறவு செய்ய செய்ய, வலி குறைந்து, சுகம் அதிகமாகும்.

எனக்கு வயது பதினெட்டு, காண்டம் எங்கே வாங்குவது, போய் எப்படி கேப்பது என்று பயமாக உள்ளது. என் குழப்பத்தை தீர்த்து வையுங்கள்.
-தாலிப்

ஆணுறைகள் எல்லா மருந்து கடைகள், மற்றும் பெரிய மளிகை கடைகளில் கிடைக்கும். இதற்காக நீங்கள் தயங்கக் கூடாது, தயங்காமல் போய் கேட்டு வாங்குங்கள். இதற்கே நீங்கள் பயப்பட்டால், ஆணுரையில்லாமல் உடலுறவு செய்து, அந்த பெண் கர்ப்பமாகி விட்டாலோ, அல்லது நீங்கள் விலை மாதுவிடம் சென்று எயிட்ஸ் போன்ற நோய்க்கு உட்பட்டாலோ, உங்கள் வாழ்க்கையே தரை மட்டமாகி விடும். ஒரு சின்ன பயத்தால், உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்ளாதீர்கள்.

நான் ஒரு பெண்ணை போட முயற்சி செய்கிறேன்.ரெண்டு பேருக்குமே பர்ஸ்ட் டைம் தான். ஆனால் உள்ளே போக மாட்டேங்க்கிறது. அவள் சாமான் ரொம்ப டைட்டாக இருக்குது. நாங்கள் செய்றதில என்ன தப்பு?

அந்த பெண் ரொம்ப பயப்படுகிறாள் என்பது தான் இதற்கு காரணம். அவள் ரொம்ப அச்சப்பட்டாலோ, அல்லது குற்ற உணர்வோடு இருந்தாலோ, அவள் பெண்ணுறுப்பு தசைகள் மிகவும் இறுக்கமாக ஆகிவிடும் . இதனால் தான் உங்களால் உள்ளே நுழைக்க முடியவில்லை. நீங்கள் அந்த பெண்ணிடம் பேசி, அவள் பயத்தைப் போக்கி விட்டு, மறுபடி முயற்சி செய்யுங்கள்.மேலும், கொஞ்சம் எண்ணையோ, அல்லது வாசலீனோ உபயோகித்தால் சுலபமாக உள்ளே நுழையும்.

நான் முதல் முறையாக நேத்து என் பக்கத்து வீட்டு அங்கிளிடம் படுத்தேன். ஆனால் எனக்கு உச்ச உணர்வு (Orgasm ) வரவில்லையே?

பல பெண்களுக்கு முதல் முறை புணரும்போது உச்சம் அடைவதில்லை. இது சில முறை ஆண்களுக்கு கூட நடக்கும். இதற்கு காரணம் பயம், அனுபவம் இல்லாமை, குற்ற உணர்வு போன்றவை தான். இதுவும் போக போக சரியாகி விடும்.

முதல் காம அனுபவம் எவ்வளவு நேரம் நீடிக்கும்?

அது ஆணுக்கு முதல் காம அனுபவமாக இருந்தால் சில நிமிடங்கள் தான் நீடிக்கும். ஏனென்றால் முதல் முறை செய்யும்போது, ஆண் மிகவும் பயத்தோடும், அனுபவம் இல்லாமலும் செய்வதால், சில நிமிடத்திலேயே விந்து வெளியேறி விடும். போகப் போக, உடலுறவு செய்யும் நேரம் கூடிக் கொண்டே போகும்.

நானும் என் காதலனும் முதல் முறை செய்யலாம்னு இருக்கோம். அவனுக்கு ஆணுறை போட இஷ்டம் இல்லை. செக்சுக்கு அப்புறம், நான் என் புண்டையை கழுவி விட்டால் போதாதா?

இல்லை, சாதாரணமாக தண்ணீரால் கழுவினாலோ, அல்லது அழுத்தத்தோடு தண்ணீரை பீய்ச்சி அடித்தால் கூட, அது கருப்பிடிப்பதை தடுக்காது. அதே போல இந்த முறையால் பால்வினை நோய்களையும் தடுக்க முடியாது.

நான் ரொம்ப வருடமாக கை முட்டி அடிக்கிறேன். இன்னும் ரெண்டு மாதத்தில் கல்யாணம். என்னால் அந்தப் பொன்னை திருப்தி படுத்த முடியுமா?

சுய இன்பம் செய்வதால், உங்கள் ஆண்மையில் எந்த பிரச்சனையும் வந்து விடாது.