Home சூடான செய்திகள் ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

ஆண்களின் பார்வையில் பெண்கள் கவர்ச்சிப் பதுமைகளா இல்லை அழகுப் பொம்மைகளா?

29

உலகில் தன்னுடைய புற அழகிற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுகின்ற பெருமை பெண்களுக்கே உண்டு. பெண்கள் தம்மை அழகுபடுத்துவதற்காக அதிகளவான நேரங்களைச் செலவிடுவதோடு, பிறர் தம் அழகினைப் பற்றிக் கூறும் போது ஆனந்தப்படுகிறார்கள். பெண்களின் மனம் அவர்களின் உடல் அழகினைப் பற்றி ஆண்கள் கமெண்ட் அடிப்பதால் சந்தோசத்தில் மிதக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இலங்கை, இந்திய நாடுகளிலும் சரி, உலகின் ஏனைய நாடுகளிலும் சரி பெண்களின் நடை- உடை- பாவனைகளை அடிப்படையாக வைத்து அவர்களை தம் கண்களின் மூலம் எடை போடுகின்றது ஆண்களின் உள்ளம்.

ஒரு பெண் அழகாக இருந்தால் போதும், அவளைப் பின் தொடர்ந்து ஜொள்ளு வடிப்பதற்கும், அவள் அழகைப் பற்றிக் கமெண்ட் அடிப்பதற்கும் பல ஆடவர்கள் காத்திருப்பார்கள். சில பெண்கள் ஆண்களைத் தம் ஓர விழியால்- கடைக் கண் மூலம் பார்த்து ஆண்கள் தம்மைப் பின் தொடர்ந்து ஜொள்ளு விட வேண்டும் என்பதற்காக ஒரு புன்னகையினை உதிர்த்து விட்டுச் செல்லுவார்கள். ஒரு முறை மட்டும் பெண் ஆணினைப் பார்த்து விட்டு, மறு முறை பார்க்காமல்- அவ் ஆடவனைத் தெரியாதவளாகப் போகும் போது, அவள் முதன் முறை உதிர்த்த புன்னகையினை மனதில் வைத்து மாதக் கணக்கில் அப் பெண்ணினைப் பாதுகாப்பாகப் பின் தொடர்ந்து பாடிகார்ட் போல அழைத்துச் செல்வது முதல், வீட்டு வாசல் வரை கொண்டு வந்து சேர்ப்பதிலும் ஆண்கள் அளப்பரிய சேவை செய்திருக்கிறார்கள்.

பெண் ஆண்களுக்காகவா தன்னை அழகுபடுத்துகிறாள்? இயற்கை தனக்கு வழங்கிய இன்பமான வளைவு நெளிவுகளை தன் அழகிய ஆடைகள் கொண்டு மேலும் அழகாக்கி மகிழ்வடைகிறாள். உலகினில் ஆண்களை விட, பெண்களுக்குத் தான் உடுத்திக் கொள்ள அதிகளவான ஆடைகளே இருக்கின்றன. ஆனால் ஆண்களின் உடைகளோ குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவையாகத் தான் இருக்கின்றன. தமிழ்ப் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் தம் புற அழகில் காட்டும் அக்கறையினைத் திருமணத்திற்குப் பின்னர் காட்டுவதில்லை. இதனால்த் தான் ஏனைய மொழிப் பெண்கள் திருமணமாகி இரண்டு பிள்ளை பெத்த பின்னரும் இளமைத் தோற்றப் பொலிவுடன் இருக்க, எம் தமிழ் மாதுகள் பலர் திருமணமாகிக் குழந்தை பெற்ற பின்னர் தொள தொளக்கும் உடம்போடு, சள்ளை பெருத்தவர்களாக மாற்றம் பெறுகின்றார்கள்.

ஆண்கள் அழகிய பெண்களைத் தான் விரும்புவார்களா என்று கேட்டால், அதற்கான விடை ஆம் என்று தான் பெரும்பாலான ஆண்களிடமிருந்து கிடைக்கும். காரணம் “திருமணத்திற்கு முன்னரும் சரி, திருமணத்திற்குப் பின்னரும் சரி ஆண்கள் பெண்களின் அழகினை ரசிக்கிறார்கள். தம் மனைவியின் அழகிய உடல் வனப்புக்கள் குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில், மனைவியுடன் வெளியே போகும் போது கூட மாற்றானின் மனைவிகள் மேல் கண் பார்வையினை மேயவிடுகின்றார்கள்”. அதிகளவான ஆண்களின் பார்வையில் பெண் அழகுப் பொம்மையாகத் தெரிவதை விடக் கவர்ச்சிப் பொருளாகத் தான் தெரிகிறாள்.

எங்கள் நாடுகளில் சேலைகளில் பெண் வந்தால் அவள் அழகாக இருப்பாள், குடும்ப லட்சணமாக இருப்பாள் என்று கூறுவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் நிச்சயமாக ஆண்களாகத் தான் இருப்பார்கள். எப்படிப்பட்ட ஆண்களாக இருப்பார்கள். பெண்ணின் புற அழகினைச் சேலையினூடாக ரசிக்கும் மனங் கொண்டவர்களாக இருப்பார்கள். “சேலையினை அடிக்கடி இடுப்பில் செருகும் போது மேற்சட்டையூடே தெரியும் பிரா கட்டிங்கை ரசிக்கும் ஆண்களாகத் தான் அந்த மன நிலை கொண்டவர்கள் இருப்பார்கள்”. அழகும் கவர்ச்சியும் ஒரு பெண்ணிடம் இருக்கும் போது ஆண்கள் கவர்ச்சிக்குத் தான் முதன்மை கொடுத்து, பெண்ணை ரசிக்கின்றார்கள்.

பெண்ணின் உடற் கவர்ச்சி என்பது, ஆண்களின் காம வெறிக்கும், இன்பங்களுக்கும் தீனி போடும் ஒன்றாகத் தான் இருக்கின்றது. அழகிய ஆடைகளை அணிகின்ற பெண்ணை விட, தம் உடலை எடுப்பாகக் காட்டுகின்ற பெண்கள் மீது தான் ஆண்களின் பார்வைகள் அதிகமாகப் படுகின்றது. ஒரு வீதியால் சேலையில் போகின்ற பெண்ணை உற்றுப் பார்க்கும் அதிகளவான ஆடவர்களின் கண்கள் சுடிதாரில் போகும் பெண் மீது அதேயளவான கூர்ந்து பார்க்கும் பார்வைகளோடு உற்று நோக்குவதில்லை. இதற்கான காரணம் உடையமைப்பில் பெண்களின் கவர்ச்சி வேறுபட்டுக் கொள்வதால், பெண்கள் ஆண்களின் பார்வையில் கவர்ச்சிப் பொருளாகத் தோன்றுவதாகும்.

பெரும்பான்மையான ஆண்கள் அழகிய பெண்களை விரும்புகின்றார்கள்.
ஆனால் திருமணம் என்ற ஒன்று வருகின்ற போது, கவர்ச்சிப் பெண்கள் மீதான விருப்பத்தைப் பொத்தி வைத்து அடக்க ஒடுக்கமான- குடும்பப் பாங்கான பெண்கள் மீது தம் பார்வையினைச் செலுத்துகிறார்கள். திருமணத்தின் பின் அடக்க ஒடுக்கமாக தம் மனைவியினை மாற்ற முயற்சிக்கிறார்கள். மனைவிக்குத் தெரியாமல் கவர்ச்சிப் பெண்களைச் சைட் அடித்து ஜொள்ளு வடிக்கிறார்கள்.

அழகு என்பது மன உணர்வினை மாத்திரம் தூண்டக் கூடிய ஒன்றாகும். அதாவது “அட இந்தப் பொண்ணு இவ்வளவு அழகாக இருக்கிறாளே” என்று எண்ணி அவள் மீது மனதளவில் ஆசையினைத் தூண்டுவது அழகு.
கவர்ச்சி என்பது ஒரு பெண்ணின் உடற் கட்டமைப்பின் மூலம் உணர்ச்சியினைத் தூண்டச் செய்து, ஆணின் உடல் உணர்வுகளில் மாற்றங்களை உருவாக்கச் செய்வதாகும்.