Home சூடான செய்திகள் பருவமெய்திய பெண்கள் வெட்கமின்றி கூறும் சில விஷயங்கள் – அம்மாடியோவ்!!!

பருவமெய்திய பெண்கள் வெட்கமின்றி கூறும் சில விஷயங்கள் – அம்மாடியோவ்!!!

23

03-1435913266-1twelvethingsgrownwomendonotfearsayingபெண்கள் என்றாலே வெட்கம், மடம், நாணம், பயிர்ப்பு, கூச்சம் போன்ற சுபாவங்கள் உடையவர்கள் என்று (இன்றும்) நீங்கள் எண்ணினால், சாரி பாஸ், அது இறந்த காலம். இன்றைய தேதியில் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் தைரியமாக இருக்கிறார்கள்.
“நம் நாட்டில் மட்டும் கற்பழிப்பு மற்றும் பெண் பாலிய வன்கொடுமைகளுக்கு சரியான சட்டமும், கடுமையான தண்டனைகளும் பிறப்பிக்கப்பட்டால், நிச்சயமாக நம் நாட்டு பெண்கள் பல துறைகளில் சாதிக்க ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன…”

ஆண்கள் கூட சில விஷயங்களை வெளியில் பேச பயப்படுவார்கள். ஆனால், பருவமெய்திய ஒரு பெண் பயமில்லாமல் சில விஷயங்களை இந்நாட்களில் பேசுகிறாள். அது என்னென்ன என்று இனி பார்க்கலாம்.

ஃபிலேமாஃபோபியா “Philemaphobia” ஃபிலேமாஃபோபியா “Philemaphobia” என்பது முத்தம் கொடுக்க பயப்படும் ஃபோபியா ஆகும். பாக்டீரியா, வாய் துர்நாற்றம் சார்ந்த காரணங்களால் அல்லது பொதுவாகவே பெண்களை கண்டால் முத்தம் கொடுக்க பயப்படுவதை ஃபிலேமாஃபோபியா “Philemaphobia” என்று கூறுகிறார்கள்

உடலுறவில் எனக்கு விருப்பம் இருக்கிறது அனைத்து உயிரினங்களின் அடிப்படை விதி உடலுறவு. ஆனால், அசிங்க அசிங்கமாக கெட்ட வார்த்தைகள் கூட பேசிக்கொள்ளும் நமது ஊர்களில், உடலுறவு குறித்து பேசுவதற்கு தயங்குகிறோம். ஆனால், இன்றைய முதிர்ச்சியான பெண்கள் உடலுறவு பற்றி பேசுவதற்கு எல்லாம் தயங்குவதே இல்லை.

என் உடல்வாகை நான் ரசிக்கிறேன் பொதுவாகவே யாரெல்லாம் தங்களை தாங்களே விரும்புகிறார்களோ, அவர்கள் வெற்றியாளர்களாக திகழ்கிறார்கள் என்ற ஓர் கூற்று இருக்கிறது. இன்றைய பெண்கள் அவர்களை அழகாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி. அவர்களை அவர்களே மிகவும் விரும்புகின்றனர். அதை வெளிப்படையாக கூறவும் செய்கின்றனர். (உங்க ஃபேஸ் புக் வாலில் நிறைய பார்த்திருப்பீர்களே!!)

வயதை மறைப்பது இல்லை காலம் காலமாக இரகசியமாக வைத்திருந்த ஒன்றான பெண்களின் வயதை இன்று யாரும் பெரிதாய் மறைப்பதில்லை. ஏனெனில், அன்றெல்லாம் வயது அதிகமானால் யாரும் பெண்களை விரும்பமாட்டார்கள் என்ற எண்ணம் இருந்தது. (இப்ப எல்லாம், பசங்க மூத்த பொண்ணுகள தான் சாமி விரும்புது… இதுக் கூட ஒரு காரணமோ இருக்குமோ!!!)

ஓரின சேர்க்கையாளர்கள் ஆண்கள் கூட வெளியில் கூற தயங்கும் ஓர் விஷயம் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது. ஆனால், பெண்கள் தங்களை ஓரின சேர்க்கையாளர்கள் என்று கூறிக்கொள்ள தயங்குவதே இல்லை. கொல்கத்தாவில், பெண்கள் நடத்திய ஓரின சேர்க்கையாளர்கள் போராட்டத்தை அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.

மது, புகை இன்றைய பெண்கள் தாங்கள் மது அருந்துவதையோ, புகை பிடிப்பதையோ பெரிய குற்றமாக கருதுவது இல்லை. ஆண்களே, பல காலமாக அதை பற்றி பெரிதாய் அக்கறை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது பெண்களுக்கு சாதகமாக இருக்கிறது.

திருமணம் குழந்தைகள் முன்பெல்லாம் பெண்கள் எனக்கு திருமணம், வேண்டாம் எனக்கு பிடிக்கவில்லை என்றால், “வெளக்கமாறு பிஞ்சிரும்” என்று அம்மாவின் குரல் கேட்கும். ஆனால் இன்று அப்படி இல்லை, பெரும்பாலான் பெற்றோர்களும் அவர்களது குழந்தைகளுக்கு விருப்பமான போது திருமணம் செய்துக் கொள்ளட்டும் என விட்டு விடுகின்றனர். ஆனால், 25-30 வயதிற்கு மேல் பெண்களுக்கு குழந்தைக் பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படுவதை அவர்கள் அறிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.