Home இரகசியகேள்வி-பதில் நான் திருநங்கையாகவே தெரிகிறேன். பெண் ஆக வேண்டும் என்ற ஆசை, எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது

நான் திருநங்கையாகவே தெரிகிறேன். பெண் ஆக வேண்டும் என்ற ஆசை, எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது

205

Aunty-boothu-kathaluamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka,cenimasex,உலகில் உயிர் வாழ விரும்பாத ஜீவன் எழுதிக் கொண்டது, நான் என் குடும்பத்தி னருக்கு மூன்றாவது மகன். திருமண வயதில் அக்கா இருக்கிறாள். உலகில், ஆண், பெண் என இரு ஜாதியை படைத்து விட்டு, இடை உயிரியாக திருநங்கையர்களையும் படைத்து விட்டார் கடவுள். சரி விடுங்கள்… நான் என் கதைக்கு வருகிறேன். நான் தற்போது மேல்நிலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதிருந்தே எனக்குள் இருந்த பெண்மையை உணர்ந்து வருகிறேன். வகுப்பில் மாணவர்களின் கேலியும், கிண்டலும் என்னை தற்கொலைக்கு தூண்டுகிறது. நான் நடந்து செல்லும் போது, “அது போகுதுடா…’ என, தெருவில் கிண்டல் செய்கின்றனர். எனக்கு தற்கொலை செய்து விடலாமா எனத் தோன்றுகிறது. சிலர், என்னை பற்றி நாகூசாமல் மிக தவறாக பேசுகின்றனர். திருநங்கையர்கள் என்றால் விபசாரம் செய்பவர்களாம். பிளஸ் 2 முடியும் நிலை. அடுத்து கல்லூரி செல்ல போகிறேன்.
என்னால், என்னை பெற்றவர்களுக்கு மிகவும் அவமானமாக உள்ளது. இதை, சரி செய்து விடலாம் என, என் நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால், தாயிடம் எப்படி சொல்வது என்று தயக்கமாக உள்ளது. நான் சொல்வதை கேட்டால், என் தாய் உயிரை விட்டு விடுவாள். எங்கள் குடும்பம் கிராமத்தில் மதிக்கத்தக்க பெரிய குடும்பம். நான் திருநங்கையாக மாறி விடுவேனோ என பயமாக உள்ளது. அவ்வப்போது நாளிதழ் செய்திகள், தொலைகாட்சி செய்திகள் என்னை

ரோஸ் (பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்)
அச்சுறுத்துகின்றன. என் தாய், என் மீது மிகவும் பாசமாக இருப்பாள். சிலர், என்னை அவர்களின் வெறிக்கு அடிமையாக்க முயற்சிக் கின்றனர். எனக்கு சில நல்ல நண்பர்களும் உள்ளனர். ஆனாலும், எனக்கு உயிர் வாழ ஆசையே இல்லை அம்மா. வீட்டில் சும்மா இருக்கும் நேரம், ஏதேதோ தவறாக சிந்திக்கவும், அழவும் தோன்றுகிறது. மற்றவர்களின் பார்வைக்கு நான் திருநங்கையாகவே தெரிகிறேன். பெண் ஆக வேண்டும் என்ற ஆசை, எனக்குள் இருந்து கொண்டே இருக்கிறது. இதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளுமா இல்லை பெற்றவர்கள் தான் ஏற்று கொள்வரா? அம்மா… நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்ட வேண்டும்.
அன்புள்ள மகளுக்கு —
உன் கடிதம் கிடைத்தது. உன்னை மகள் என்று அழைத்திருக்கிறேன். எப்படி தெரியுமா? பெண் தன்மை அதிகமுள்ள திருநங்கையரை, “அவள்’ என்றும், ஆண்மைதன்மை அதிகமுள்ள திருநங்கையரை, “அவன்’ என்றும் விளிக்கலாம் என நினைக்கிறேன். திருநங்கையரின் அவல நிலைக்கு பிரதான காரணங்கள் இதோ —

அர்த்தநாரீஸ்வரர்
1. திருநங்கையரின் பிரச்னைகளை அரசு, சீரியசாக எடுத்துக் கொண்ட தில்லை. அவர்களின் பிரச்னைகளை ஆக்கரீதியாக கையாளலாம் என்ற வழிகாட்டல்களும் அவர்களுக்கு இல்லை. திருநங்கையருக்கு அடிப்படை உரிமைகள் கொடுக்கப்பட்டு, அவர்களும் தனி ஓட்டுவங்கியாக மாறினால் நிலைமை சீரடையும்.
2. மதங்களும், திருநங்கையர் பிரச்னைகளை நேர்மையாய் பார்ப்பதில்லை. திருநங்கையராக பிறத்தல், போன ஜென்மத்தில், காம பித்து பிடித்து அலைந்த ஆண், பெண்களுக்கு இறைவன் கொடுத்த தண்டனை என, மதவாதிகள் கருதுகின்றனர்.
3.பெற்றோர், தங்கள் திருநங்கை குழந்தைகளை இழிவாய், பாரமாய், தீரா அவமான சின்னங்களாய் கருதுகின்றனர்.

அர்த்தநாரீஸ்வரர்
4. ஆண்களும், பெண்களும், திருநங்கையரை ஏதாவது ஒரு அணியில் முழு மனதாய் சேர்த்துக் கொள்வதில்லை.
5. திருநங்கை யருக்கு கல்வியில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், அவர்கள் பொருளாதார சுதந்திரம் பெறுவர்.
பத்து ஆண்டுகளுக்கு முன், திருநங்கையருக்கு இருந்த அவலச் சூழ்நிலை தற்சமயம் இல்லை; மாறி இருக்கிறது. “அரவாணி, ஒன்பது, அலி’ போன்ற வசவு வார்த்தைகள் ஒழிந்து விட்டன. “ட்ரான்ஸ் ஜென்டர், அதர் ஜென்டர்’ போன்ற ஆங்கில வார்த்தைகள் புழங்குகின்றன.
தாழ்த்தப்பட்ட மக்களை சமூகத்தில் மேம்படுத்த கடந்த 63 ஆண்டுகளில் என்னென்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டனவோ, அத்தனை முயற்சிகளும் திருநங்கையர் முன்னேற்றத்துக்கும் செய்யப்பட வேண்டும்.
திருநங்கையர் கண்டுபிடிப்பை, அரசு மருத்துவ ஆய்வுகள் மூலம் செய்து, திருநங்கையருக்கு முழு ஆணாக மாற, முழு பெண்ணாய் மாற கவுன்சிலிங்குடன் கூடிய, அறுவை சிகிச்சைகள் நிகழ்த்த வேண்டும். “திருநங்கையரை விபச்சாரத்துக்கு அழைத்தல், பெரும் தண்டனைக்குரியது. பிச்சையெடுக்கும், திருடும், தவறான சமூக விரோத செயல்களில் ஈடுபடும் திருநங்கையர் தண்டிக்கப்படுவர்…’ என, அரசு அறிவிப்பு செய்திட வேண்டும்.
இனி, உன் விஷயத்துக்கு வருவோம் மகளே…
தற்கொலை எண்ணத்தை விட்டொழி. பள்ளிக்குச் செல்லும் உன்னை யாராவது இழிவுபடுத்தினால், முதலில் பொறுமையாக தன்னிலை விளக்கம் அளி. கேட்காவிட்டால், பள்ளி நிர்வாகத்துக்கு புகார் செய். நிர்வாகம் அவர்களை கண்டிக்க தயங்கினால், முதலமைச்சரின் செல்லுக்கு புகார் செய்.
பெண்களுடன் இணக்கமாக பழகி, நீயும், பெண்தான் என்பதை அவர்கள் மனதில் உறுதிபடுத்து. உன் தாய் உன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் அல்லவா? அவளிடம் உன் பிரச்சைகளை எல்லாம் கொட்டித்தீர்.
தகுந்த மருத்துவரிடம் சென்று, முழுமையான பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்து கொள்.
என்ன… குழந்தைதான் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், அடுத்த இருபது வருடங்களில், அந்த குறையையும் விஞ்ஞானம் நிவர்த்தி செய்து விடும். ஆபரேஷன் செய்யும் வரை, கல்லூரியில் சேராதே. ஆபரேஷனுக்கு பின் வெளியூர் கல்லூரியில் சேர்.
நீ ஆபரேஷன் செய்து கொண்டதை இரண்டு மூன்று நாட்கள் வரைதான் ஆர்வமாய் பேசுவர். அப்புறம், பிரபுதேவா – நயன்தாரா பிரச்னையின் லேட்டஸ்ட் நிலவரத்தை பேசப் போய் விடுவர். முதல் இரு கதவுகளை உனக்கு மூடிய இறைவன், மூன்றாவது கதவை திறந்து விட்டுள்ளான். உடல்குறை, மனக்குறை, பால் குறைபாடு, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு இவைகளை ஜெயிக்கும் ஒரே ஆயுதம் – தன்னம்பிக்கை தான். அடுத்த பத்து வருடம் போராடு. 29வது வயது ஆரம்பத்தில் வெற்றிக்கனியை புசிப்பாய்.