Home சமையல் குறிப்புகள் திணைஅரிசி காய்கறி உப்புமா

திணைஅரிசி காய்கறி உப்புமா

28

2தேவையான பொருட்கள் :

திணை அரிசி – 1 கப்
துவரம் பருப்பு – 1 கைப்பிடி
மிளகு சீரகத் தூள் – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
காய்கறிக் கலவை – 1 கப் ( காரட், பீன்ஸ், பட்டாணி )
தேங்காய்த் துருவல் – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1 இரண்டாக கீறவும்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்

செய்முறை:-

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

* காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* துவரம் பருப்பை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.

* திணைஅரிசியோடு கரகரப்பாக பொடித்த துவரம் பருப்பையும், மிளகு சீரகத் தூளையும் சேர்த்து வைத்துக் கொள்ளவும்.

* கடாயில் எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டுச் சிவந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

* அடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காய்கறிக் கலவையை வதக்கி உப்புப் போட்டு 2 1/2 கப் தண்ணீர் ஊற்றவும்.

* தண்ணீர் கொதிக்கும்போது திணை அரிசி, துவரம்பருப்பு, மிளகு சீரகப் பொடியைச் சேர்த்துக் கிளறி வெந்ததும் தேங்காய்த் துருவல் சேர்த்துப் பரிமாறவும்.

* சுவையான திணைஅரிசி காய்கறி உப்புமா ரெடி.