Home சூடான செய்திகள் தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு இருக்க‍ வேண்டியன் அவசியம்!

தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு இருக்க‍ வேண்டியன் அவசியம்!

13

images (2)மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் கணவனும், கணவன் அமைவெதல்லாம் இறை வன் கொடுத்த‍ வரம் என்று மனை வியும் நினைக்க‍ வேண்டும்
இல்லற வாழ்க்கையில் தம்பதியரி டையே விட்டுக் கொடுத்தல் இருந்தா ல் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என் கின்றனர் உளவியலாளர்கள். வீட்டி ல் மனைவியை அதிகாரம் செய்யும் ஆண்கள் ஒரு சில விசயங்களில் விட்டுக்கொடுத்து மனைவியின் சொல் பேச்சு கேட்பது அவசியம்.. எந்த விசயம் என்றாலும் தனக்கேற்றார் போல நடந்து கொள்ளவேண்டும் என்று நினைக்கும் ஆண்கள், பெண்ணுக் கும் மனதுண்டு என்பதை அறிந்து கொள் ளவேண்டும்.

புதியதாக முயற்சிக்கிறேன் என்ற நினை ப்பில் எதையாவது செய்யப்போய் பெ ண்களின் வலிகளையும், துன்பங்களையு ம் உணராமல் இருந்துவிடுகின்றனர். இத னால் உறவில் விரிசல் ஏற்படுகிறது. எனவே தன்னைப் போல தனது துணைக்கும் விருப்பம் இருக்கும் என்ப தை உணர்ந்து செயல்படுவது சிக்கல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
பெண்களைப் பொருத்தவரை கணவர் தான் அவர்களின் கதாநாயகன். என வே இருவரும் தங்களின் விருப்பங்க ளை மனம் விட்டுப் பேசி தேவையான தைப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் இருவரின் விருப்பு, வெருப்புகளை அறிந்து கொள்ளமுடியும். இருவரும் நட்பாய் இருந்தால் குடும்ப உறவில் விரிசல் எழ வாய்ப்பில்லை.
மதிக்கப்படுகிறோம் என்று மனைவியும் மகிழ்ச்சியடைவார். தம்பதியர் இடையே மனதளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இருப் பது குடும்பத்திற் கு நன்மை ஏற்படும். இது இருமனங்களுக்கு இடையேயான இருக்கத் தை நீக்கும். தன்னை தன் கணவர் புரிந்து கொள்கிறார் என்பதே மனைவியை மகிழ் ச்சிக்கடலில் ஆழ்த்தும்.

திருமணத்திற்கு முன்பு இருந்த குடும்ப சூழ்நிலை வேறு. திருமணத்திற் குப் பின்னர் பிறந்த குடும்பத்தில் இருந்து தனது உறவுகளையும், விருப்பங்களையும் முழுவது மாக விட்டு விட்டு கணவரின் குடும்பத்திற்குள் வருகின்றனர். அவர்களை அடிமைப்படுத்தாமல் சுதந்திர உணர்வோடு செயல்பட விடுவது பெண் களை மகிழ்ச்சிப்படுத்தும்.
ஒரு சிலர் பெண்களை தாம்பத்ய உறவிற்காகவும், குழந்தை பெற்றுக் கொடுக்கும் இயந்திரம் போல வும் நினைத்து நடத்துவார்கள். இது தவறான நடைமுறை. இதனால் கணவன், மனைவி இருவ ருமே சந்தோச மாக இருக்க முடியாது.
வாழ்க்கைத் துணைவியை கடவுள் தந்த வரம் என நினைத்து அவரை போற்றினால் உங்களின் வாழ்க்கை யை வசந்தமாக்குவது நிச்சயம். மனைவியை உங்கள் மனதின் வடி வமாக நினைத்து கொண்டாடுங்கள். அப்புறம் என்ன உங்கள் வாழ்க்கை யில் மகிழ்ச்சி அலை வீசும்.