Home சூடான செய்திகள் செயற்கை ஆணுறுப்பு அணிந்து பெண்களுடன் செக்ஸ்: பெண்ணுக்கு சிறை

செயற்கை ஆணுறுப்பு அணிந்து பெண்களுடன் செக்ஸ்: பெண்ணுக்கு சிறை

40

stainsரப்பர் ஆண் உறுப்பை பயன்படுத்தி பல இளம்பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பிரிட்டனில் உள்ளது பிரிஸ்டன் நகரம். இங்குள்ள நீதிமன்றத்திற்கு வினோதமான ஒரு வழக்கு வந்தது. அதாவது 23 வயது ஜெனிபர் ஸ்டைன்ஸ் ஆண் போன்ற செயற்கை ஆண் உறுப்பு அணிந்து 16 முதல் 17வயதில் பல பெண்களை ஏமாற்றி அவர்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டுள்ளார். அந்தப் பெண்களிடம் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்போது காண்டம் பயன்படுத்தி வந்துள்ளார். இத்துடன் அவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளும்போது அறுவெறுப்பான புகைப்படங்களையும் எடுத்துள்ளார்.

இந்த விஷயம் போலீசாருக்கு தெரிய வர அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து இந்த வழக்கு பிரிஸ்டல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கின் மீது தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாரி காட்டார் கூறுகையில், ”கவனமாக செயல்பட்டு ஏமாற்றி இளம் பெண்களை ஏமாற்றி இருக்கிறீர்கள். இதை காதல் என்றோ, காதலுக்கான செக்ஸ் என்றோ, செக்சுக்காக மட்டுமா என்று என்னால் அறுதியிட்டுக் கூற முடியவில்லை. இந்தக் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு இருப்பதால் ஜெனிபருக்கு 39 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படுகிறது” என்றார்.

கடந்தாண்டும் இதேபோல், தன்னுடைய பெண் நண்பருடன் உறவு வைத்துக் கொள்ள ஆண் போல செயற்கையாக உறுப்பை மாற்றி ஏமாற்றிய பெண்ணுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.