Home சூடான செய்திகள் சுய இன்ப மோகத்தால் முதியவருக்கு நேர்ந்த கதி

சுய இன்ப மோகத்தால் முதியவருக்கு நேர்ந்த கதி

24

ஜேர்மனியில் சுய இன்பம் காண முயன்று வீட்டில் கீழே விழுந்த முதியவர் ஒருவர் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஜேர்மனியின் முனிச் (Munich) மாகாணத்தில் முதியவர் (57) ஒருவர், பெண்கள் அணியும் உள்ளாடை மற்றும் காலணிகளை அணிந்து, தனது வீட்டின் சமையலறையின் கதவு அருகில் நின்று, சுய இன்பம் பெற முயற்சித்துள்ளார்.

அப்போது எதிர்பாரதவிதமாக அவர் தனது இருப்புநிலையை தவறியதால், கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில் இவரது வீட்டின் வெளியே சில நாட்களாய் நாளிதழ்கள் குவிந்த வண்ணம் இருந்ததால், அண்டை வீட்டுக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

முதியவர் மரணம் அடைந்திருக்கலாமோ? என எண்ணி அவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், முதியவரின் வீட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர்.

இதன்பின் அங்கு மயங்கிய நிலையில் இருந்த முதியவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் முதியவர் அதிஷ்டவசமாக பிழைத்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.