Home சூடான செய்திகள் க‌ணவன் மனைவி என்ற உன்ன‍த உறவும், உடலுறவின் முக்கியத்துவமும்

க‌ணவன் மனைவி என்ற உன்ன‍த உறவும், உடலுறவின் முக்கியத்துவமும்

49

Captureவாழ்கையில் கணவன் மனைவி உறவு என்பது மிகவும் உன்னத மானது. வாழ்க்கை பாதையை சீரமைக்கும் ஒரு கருவி தான் அன்பு. வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்று ம் வல்லமை அன்பிடம் மட்டுமே உள்ளது. இந்த உன்னதமான உணர் வுகள் தான் நம் வாழ்வையே அர்த் தமுள்ளதாக மாற்றக்கூடியவை.
அன்பால் மலரும் உணர்வுகளே குடு ம்பத்தை வழிநடத்திச் செல்லும் என் பதை கணவன்- மனைவி உணர வேண்டும். அன்பை வெளிபடுத்த வே திருமணம் நம்மை இணைத்துள்ளது என்று எண்ண வேண்டும். மனிதர்கள் உணர்வு களுக்குக் கட்டுபட்ட வர்கள்.
அதனால் பல நேரங்களில் தவறு செய்ய க் கூடும். ஆனால், அத்தகைய தவறுகள் அன்பினால் சீரமைக்கபட வேண்டும். `என்னை நல்ல படியாக வைத்துக் கொ ள்ளும் அன்பு உன்னிடம் இருந்து நிச்சயம் கிடைக்கும்` என்ற எண்ணம் தம்பதிகள் இருவரிடம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க வேண்டும்.
நல்ல விஷயங்களின் அடிப்படையில் உருவாக்கபடும் கூட்டுத் தொ குப்பே குடும்பம். நமக்கு நேர்மை அவசியம். “என் சிந்தனை உள்பட எனது ஒவ்வொரு வார்த்தையும், செயலும் உண்மை. அதை உன் னோடு பகிர்ந்து கொள்வேன்.
என் நோக்கம், இயல்பான முறையில் நீண்ட நாள் உறவை பேணுவது தான்” என்று இருவ ரும் எண்ண வேண்டும். நேர்மை இல்லாத குடும்பம் தண்டவாளத்தில் ஓடாத ரெயில் போன்றது. நேர்மைதான் குடும்பத்தின் முது கெலும்பு என்பதை உணர்ந்து கணவர் மனை வி இருவரும் பரஸ்பர அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க …???
கணவன்-மனைவி உறவு எவ்வளவு இனிமையானது தெரியுமாங்க ??? அந்த உறவில் வரும் சின்னச் சின்ன ஊட ல்கள், சண்டைகளு க்காக வக்கீலிடம் ஏங்க நீங்க போகனும்..?? கோட்டு கேசுன்னு ஏங்க நீங்க அலையனும்…?? உங்களுக்கு உங்க பிரச்சினைகளை பேசித் தீர்க்க முடியாதா…???
உங்க ரெண்டு பேருக்கும் இடையில் சின்னச் சின்ன சண்டைகள் வரும்போது விவாகரத்து வரைக்கும் ஏங்க போக ரை பண்னு ரிங்க…?? பிரச்சினைகள் வரும் போது உங்களது பசுமை யான பழைய நினைவுகளை ஒரு முறை நினைத்துப் பாருங்க.
அந்த நினைவுகள் எவ்வளவு அழகான சோலையாக இருக்கும் தெரி யுமா…??? நீங்க ரெண்டு பேரும் ஒரு செடியில் பூத்த பூவாக இருப் பீர்கள் தெரியுமா..?? அந்த நினைவுகள் உங்களுக்கு சொர்க்கமாக வும் அந்த சொர்க்கத்தில் ஆதாம்-ஏவாலாகவும் நீங் கள் இருப்பீர்கள் தெரியுமா…??
உங்களுக்குல் சண்டைகள் வரும்போது ஒருத்தரோடு ஒருத்தர் மனம் விட்டுப் பேசுங்க. அவ யாருங்க உங்களுக்கு …. நீங்க தாலி கட்டிய மனைவி. அவரு யாருங்க உங்களுக்கு….நீங்க கட்டிய கணவர். உங்க ரெண்டு பேரோட உறவு க்கு மேல ஒரு உறவு இந்த உலகத்தில் இருக்குமா சொல்லுங்க…??
நீங்க ஒருத்தரை ஒருவர் விவாகரத்து செய்யும் போது உங்கள் குழந் தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிடாதா…??? உங்களுக் குத் தான் நிம்மதியான வாழ்க்கை அமையுமா??? உங்க ரெண்டு பேரோட காதல் உங்கள் மனதில் ஏதோ ஒரு மூலையில் குத்திக் கொண்டு இரு க்கும் அல்லவா…???
படுக்கையறையில் காணாமல் போகும் கணவன், மனைவிக்கு இடை யான காதல்
கணவன், மனைவிக்கு இடையே படுக்கை அறையில் காதல் காணா மல் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அவர்களுக்குள் நிகழும் செக்ஸ் உறவில் நேசமும், மனம் லயிக்கும் நெருக்கமும் இல்லா மல் போய்க்கொண்டிருக்கிறது. இருவருக்குமே இருக்கும் மன நெருக்கடியும், பிரச்சினைகளு ம், சோர்வும் படுக்கை அறையை பெயரளவுக்கு உடல்கள் மட்டும் இணையும் இடமாக மாற்றிக் கொ ண்டிருக்கிறது. கணவன் – மனைவி படுக்கை அறை உறவு ஏதோ ஒரு சடங்கு, சம்பிரதாயம் போல் ஆகிவிட்டது. இந்த நிலையை சமூகம் உணர்ந்து விழித்துக் கொள்ளா விட்டால் எதிர்காலத்தில் கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் எல்லையில்லாமல் போய்விடும்.
நகரத்தில் வாழும் 44% திருமணமான ஆண்களுக்கு செக்ஸ் மீது இரு க்கும் ஆர்வம் குறைந்து கொண்டே இருக்கி றது. இதனால் அவர்களது தாம்பத்ய வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகுகிற து. மேற்கண்டவர்களில் 29 % பேர் நிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களில் பெரும் பாலானவர்கள் வே ளையிலே மிகவும் சோர்ந்துபோகிறார்கள். வாரத்தில் ஒரு முறை யாவது உறவு வைத்துக்கொள்ளாவிட்டா ல் மனைவி மீது எங்களுக்கு பாசம் இல் லை என்று நினைத்து விடுகி றார்கள். அப்படி ஒரு எண்ணம் அவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் படுக் கையை பகிர்ந்துகொள்கிறார்கள்.
இந்த மாதிரியான எண்ணத்துடனே அவர்கள் படுக்கையை பகிர்ந்து கொள்வதால் அவர்களையே அவர்கள் ஏமாற்றிக்கொள்வதோடு, தங்கள் மனைவிகளின் உணர்வுகளையு ம் மழுங்கடிக்கிறார்கள் என்பது அவர்க ளுக்கே தெரியாமல் போய்விடுகிறது. இப் படி திருப்தி யில்லாமல் உறவு வைத்துக் கொள்வதாலும், அதிக நாட்கள் இடை வெளி விட்டு உறவு கொள்வதாலும் கால ப்போக்கில் அந்த கணவன், மனைவி இரு வருக்குமே உறவில் எந்த சுகமும் இல்லா மல் போய்விடும். முடிவில் ஆசையே குறைந்துபோய் `திருப்திதராத இந்த உறவு நமக்குள் தேவையா?’-என்ற ரீதியில் சிந்திக்கத் தொடங்கி விடு வார்கள். அதன் விளைவுகளால் குடும்ப உறவுகளில் சிக்கல் ஏற்படு கிறது. மட்டுமின்றி குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணி க்கையும் அதிகரித்து வருகிறது”.
நேரமின்மை:
கணவன், மனைவி உறவுச்சிக்கலு க்கு முக்கிய காரணமாக இருப்பது நேரமி ன்மை தான். இரண்டு பேரும் வேலை பார்க்கும் குடும்பங்க ளில் இதுவே பெரிய வில்லன். மனைவி அலுவலக வேலையை முடித்து க்கொண்டு வேகவேக மாக வீட் டிற்கு வருவார். வந்த வேகத்தி லே சமையல் அறைக்கு ள் அவர் நுழையவேண்டும். பிரிஜ் ஜில் ஏற்கனவே வாங்கி வைத்த மீனோ, இறைச்சியோ இருக்கும். அதை எடுத்து சமையல் செய்ய வேண் டும். மறுநாள் காலை உணவுக்கு என்ன தயாரிப்ப தென் று முடிவெடுக்க வேண்டும். வீட்டை சுத்தம் செய்தல், பாத்திரம் தேய் த்தல் என்று அவள் சுழல்கிறாள். அதோடு நின்று விடுவதில்லை. குழந்தை படி த்துக்கொண்டிருக் கும். அதன் சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண் டும்.
இந்த நிலையில் கணவர் வீடு திரு ம்புவார். அவர் எப்போது தூங்கலா ம் என் ற நிலையிலே வருகிறார். கணவன், மனைவி இருவர் நேர மும் வேலை, அலுவலகம், குழந் தை, டெலிவிஷன் நிகழ்ச்சி, உறவி னர்கள் வட்டம், வீட்டு வேலைகள் போன்ற அனைத் துக்கும் ஒதுக்க ப்பட்டுவிடுவதால் கணவன், மனைவி இருவருக்கும் அவர்களுக்கெ ன்றுநேரம் ஒதுக்கமுடியாமல் போய் விடுகிறது. அன்ற ன்றைய வேலை முடிந்து இருவரும் படுக்கைக்கு செல்லும்போது சோர்ந்து போய், எப்போது தூங்கலாம் என்ற நிலை க்குச் சென்றுவிடுகிறார்கள். கணவ னும், மனைவியும் சந்தோஷமாக பேசிக்கொண்டிருக்கவோ, அவர்கள் விரும்பிய பொழுது போக்குகளில் ஈடுபடவோ, அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொண்டிருக்கவோ நேரமில்லாமல் போய்வி டுகிறது. அதிக சோர்வு, களைப்பு, மறுநாள் பணி பற்றிய சிந்தனை போன்ற வைகளுடன் அவர்கள் படுக்கைக்குச் செல் லுவதால் படுத் ததும் தூங்கிவிடுகிறார்கள். அதைமீறி அவர் கள் உறவு கொள்ள விரும்பினால், அது முழு மையான மன ஈடுபாட்டோடு அமையாமல் ஏதோ அவசரகோலத்து சடங்குபோல் ஆகிவி டுகிறது. இதில் குறிப்பிடவேண்டிய இன்னொ ரு விஷயமும் இருக்கிறது. கணவர், மனை வியிடம் அன்பு செலுத்தாமல் இருந்தாலோ, அவருடைய அன்றாட செயல் பாடுகள் பிடிக் காமல் இருந்தாலோ அவளுக்கு பிறப்பு உறு ப்பு இறுக்க நிலைத்தோன்றி விடும். அதனால் உறவு, வலி நிறைந்த அவஸ்தையாக மாறி, உடலு றவில் நிரந் தர வெறுப்பை உருவாக்கி வி டும்.
பலகீனநிலை:
வேலையில் ஏற்படும் மனநெருக்கடியும், பொருளாதார சிக்கலும் ஆண்களுக்கு சோர்வு மனநிலையை அதிகம் ஏற்படுத்துகிறது. அந்த சோர்வுநி லை, ஆண்க ளுக்கு செக்ஸ் பலகீனத்தை உருவாக்கும். இந்த பல கீனத்தை அப்படியே வைத்துக் கொண்டிருந்தால், அது செக்சில் வெ றுப்பு நிலையை உருவாக்கும். அதனால் மனச் சோர்வில் இருந்து ஆண்கள் விடுபடவேண்டும். அவர் களுக்கு செக்ஸ் பலகீனங்கள் இரு ந்தால் அதற்குரிய சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளவேண் டும். இப்போது எல்லாவிதமான செக்ஸ் பலகீனங்களுக்கும் சிகிச் சைகள் உள்ளன.
திருமணத்திற்கு முந்தைய உறவு கள்:
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவில் ஈடுபட்டிருப்பதும், அதில் தோல்வி எற்பட்டு மனநெருக்கடி க்குள்ளாகுவதும் திருமணத்திற்கு ப்பிறகு செக்ஸ்மீது ஒருவித வெறு ப்பையும், பலகீனத்தையும் உருவாக்குகிறது. ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திரு மணத்திற்கு முன்பு உறவு வைத்து க்கொள்ளும்போது அந்த உறவி னை ஹோட்டல் அறையிலோ, தெரிந்த வீட் டிலோ வைத்துக்கொள்கிறார்கள். அப் போது அவர்கள் போலீஸ் பயம், தெரிந் தவர்கள் யாராவது பார்த்துவிடுவார்க ளோ என்ற அச்சம், பெற்றோருக்கு தெரி ந்து விடுமோ என்ற கவலை போன்ற வைகளுக்கு ஆட்படுகிறார்கள். அந்த பயத்தால் அவர்களால் முழு மையான உறவில் ஈடுபடமுடியாது. அது அவர்களுக்கு ஒரு வித தோல்வி மனப்பான்மையை தந்துவிடும். அதையே நினைத்து மனநெருக்கடி க்கு உள்ளாகி திருமணத்திற்குப் பிறகும் முழுமையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள முடியாமல் தவித்துப்போகிறார்கள்.
உடற்கூறு அறிவின்மை:
ஆண்களும், பெண்களும் இப்போது எவ்வள வோ படித்தவர்களாகவும், பொது அறிவில் சிறந்தவர்களாகவும் இருந்தாலும் உடற்கூறு பற்றிய அறிவில் ஏதும் அறியாதவர்களைப் போல்தான் இருக்கிறார்கள். ஆணின் உடற் கூறு பற்றி பெண்ணும், பெண்ணின் உடற்கூறு பற்றி ஆணும் சரியாக அறிந்திருப்பதில்லை. இப்போது பெரும்பால னவர்களுக்கு செக்ஸ் பற்றிய விழிப்புணர்வு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
பெண்களில் பலர் இப்போது வேலைக்குச் செல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் புடவையைத்தவிர இதர ஆடைகளையே அணிகிறார் கள். அப்போது உள்ளாடை அணிகிறா ர்கள். அவர்கள் முழுநேரமும் பேன்டீ ஸ் அணிவது நல்லதல்ல. ஏன் என்றா ல் கோடைகாலத்தில் நன்றாக பெண் களுக்கு வியர்க்கும். அப்போது மலத்து வாரப் பகுதியில் தொற்று க்கிருமிகள் இருக்கும். அவை வியர் வையுடன் சேர்ந்து தண்ணீர் தன்மையுடன் பிறப்பு உறுப்பு பகுதியில் பிரவேசிக்கும். அங்கு தொற்றுக்கிருமிகள் தாக்குதல் உருவாகிவிடும். அந்த தாக்குதலுக்கு உடனடியாக முறையா ன சிகிச்சை எடுக்காவிட்டால், உற வின் போது கணவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் பெண்கள் 24 மணிநேரமும் பேன்டீஸ் அணியும் பழ க்கத்தை உருவாக்கிக் கொள்ளக் கூடாது.
ஆண்களும் இறுகிய உள்ளாடை அணியக்கூடாது. விரைப்பகுதி எப்போதும் உடலை ஒட்டிய நிலை யில் இருக்கக்கூடாது. இறுக்க மான உள்ளாடை அதற்கு மாறான நி லையை உருவாக்கிவிடுகிறது. விரை ப்பகுதியின் தட்பவெப்ப நிலை உடல் தட்பவெப்பநிலையை விட ஒரு டிகிரி குறைவாக இருக்கும். உள்ளாடை அணிந்திருக்கும் போது உடலோடு விரைப்பை ஒட்டி உட லின் தட்பவெப்ப நிலைக்கு மாறிவி டுகிறது. அதனால் உயிரணுவின் உயிர்தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது.
இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உண வுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் கணவன்- மனைவி நேசத்திற்கு ம், படுக்கை அறை உற வுக்கும், திருப்தியான தாம்பத்ய வாழ்க்கைக்கும் எதிராக இருக்கி றது. அதை எல்லாம் உணர்ந்து கணவனும், மனைவியும் நடந்து பாசத்தையும், நேசத்தை யும் பெருக்கிக்கொள்ள வேண்டியது காலத் தின் கட்டாயம்.
கணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..

கணவன் மனைவிக்கிடையே, திருமணமான புதிதில் இருக்கும் நெருக்கம், நாட்கள் செல்லச் செல்ல குறைந்துவிடும் என்பது பொது வான கருத்து. இதற்கு காரணம், சரியா ன, பரஸ்பர புரிதல் இல்லா மையே.

கீழே தரப்பட்டிருக்கும் கருத்துக்கள், ஆண் பெண் என்ற பாகுபாடில் லாமல் இருவ ரும் கடைபிடிக்க வேண்டிய பொ துவான ஆலோசனைகள். இங்கு தரப்பட்டிருக்கு ம் ஆலோசனைகளில் சில, குழந்தை த்தனமானதாகவும் நகைச் சுவையாகவும் தோன்றலாம்..
ஆனாலும் தம்பதிகளுக்குள் கவுரவம் பார்க்காது, கடைபிடிப்பதில் தவறில்லையே..

1. எழும்போதே ஒருவருக்கொருவர் புன்ன கையுடன் பார்த்துக் கொள்ளுங்கள். குட் மார்னிங் சொல்லிக்கொள்வதில் தவறில் லை.

2. வாரத்திற்கொருமுறை குடும்பத்தோடு வெளியில் சென்று வரலா ம்.

3. மனைவிக்கு / கணவனுக்கு வேண்டிய வர்களிடம் தன்மையாக நடந்து கொள்ளுங்கள.

4. அவ்வப்போது சின்னச் சின்ன பரிசுப் பொருட்களை வாங்கிக் கொ டுத்து ஆச்சர்யப்படுத்துங்கள்.

5. எப்போதும் செய்தித்தாள் அல்ல து டிவி பார்த்துக்கொண்டே இருக்காம ல், கூடுமானவரை ஒருவருக்கொரு வர் முகம் பார்த்து பேச முயலுங்கள்.

6.சமையல் முதல்அனைத்து வேலை களிலும் ஒருவருக்கொருவர் உதவ முற்படுங்கள்.

7. சாப்பிடும் தருணங்களில் டிவி பார்க் காமல் பேசிக்கொண்டே சமையலை ருசித்து சாப்பிடுங்கள். அது எதிர்தரப் பினரை திருப்தி யடையச்செய்யு ம்.

8. தொடுதல் மிக முக்கியம். தனிமையான தருணங்களில் இடை வெளிகளைக் குறைத்துக் கொள் ளுங்கள். தலைகோதி விடுவது, மடியில் தலை வைத்துப் படுப்பது, கை கோர்த்துக் கொள்வது போன் ற தொடுதல்கள் நெருக்கத்தை மேலும் வலுப்ப டுத்தும்.

9. எப்படியெல்லாம் இருக்க வேண்டு மென்ற எதிர்காலக் கனவுகள் பற்றி ஒருவருக்கொருவர் பே சுங்கள்.

10. இருவருக்கும் பிடித்த, பொதுவான பாடல்கள் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துக் கேளுங்கள். அது யதார்த்த சூழலில் கேட் கப்படும் போது மனதுக்குள் புன்னகை உண்டாக்கும்.

11. பின்கூட்டி அணையுங்கள். இது உடல் சார்ந்தது மட்டுமின்றி மன ரீதியாகவும் நெருக்கத்தினை ஏற்படுத்தும் என்று மருத் துவர்கள் கூறுகின்றனர்.

12. நகைச்சுவையான தருணங்களில் ஒருவருக்கொருவர் விஷயத் தைப் பகிர்ந்து சிரியுங்கள்.

13. I love you அல்லது I miss you போன்ற க்ரீட்டிங் கார்டுகளை அவ் வப்போது பரிமாறிக்கொள்ளுங்க ள்.

14. ஒருவரின் தேவைகள் என்ன வேன் று மற்றொருவர் கேட்கும் முன்பே, அதனைப் புரிந்து கொண்டு நிறைவே ற்றுங்கள்.

15. வாதம் செய்யும்போதோ, அறிவு ரை கூறும்போதோ, ஒருவர் சொ ல்வதை மற் றொருவர் அசட்டை செய்யாது கவனிக்க வேண்டும்.

16. தனக்குப் பிடித்த விஷயங்களை இன் னொருவர் செய்யும்போது மனம் விட்டுப் பாராட்டக் கற்றுக் கொள்ளு ங்கள்.

17. ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணும்போது மற்றொருவரின் பார்வை யிலும் இருந்து பார்த்து நடுநிலையாக முடிவெடுக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும், தன் வாதம் தான் கடைசியாக இருக்க வேண் டும் என்று நினைக்காதீர்கள்.

18. வெளியிலிருப்பின், அழைபேசி மூலம் அவ்வப்போது பேசி அக் கறை யை வெளிக்காட்டுங்கள்.

19. தங்கள் விருப்பங்களை மற்றொருவர் உடனே நிறைவேற்ற வே ண்டும் என்று அவசரப்படுத்தாதீர்கள். பொறுமை அவசியம். அதே போன்று நீ இப்படித் தான் இருக்க வேண்டு மென தன்னுடைய விருப்பங்களை அடுத் தவர் மேல் திணிக்கவும் கூடாது.

20. ஒருவரையொருவர் புரிந்துகொள்ளுங் கள். சுய விருப்பு வெறுப்புக்களை தெரிந்து வைத்துக்கொள்வது மிக முக்கியம்.

21. எந்த சூழ்நிலையிலும் அவர வர்க்குரிய சுய மரியாதையை கெ டுக்கும் வண்ணம் நடக்கக் கூடா து.

22.நண்பர்கள் உறவினர்கள் போ ன்ற வெளியாட்கள் வீட்டுக்கு வரும்போ து அவர்கள் முன் ஒரு வருக்கொரு வர் குறை கூறிக்கொள்ளக்கூடாது.

23. உறவினர்கள் இருப்பின், மறைமு கமான, காதல் ஜாடைகளில் பேசிக் கொள்ளுங்கள்.

24. பிறந்த நாள், காதலர் தினம் போன் ற நாட்களை மறந்துவிடாமல் ஒருவருடன் ஒருவர் ஒன்றாக நேர த்தை செலவழியுங்கள்.

25. தவறுகள் ஏற்படும் சந்தர்ப்பங் களில், தன் மேலுள்ள குறைக ளையோ அல்லது தவறுகளை யோ ஒத்துக்கொண்டு மனமார மன்னி ப்பு கேட்கப் பழகுங்கள்.

26. கணவனோ மனைவியோ தம் மிடம் தவறினை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும்போது அவ ரைக் குத்திக்காட்டாமல் மனதார மன்னித்து ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புங்கள்.

27. முத்தம் என்பது காமம் சார்ந்ததி ல்லை. அது காதலை வெளிப்படுத் தும் ஊடகமே.. தினமும் ஒருவருக் கொருவர் முத்தமிட்டுக் கொள்ளுங் கள்.

28. தான் என்ன செய்தால் மற்றொரு வர் மகிழ்ச்சியாக இருப்பார் என்ப தை அறிய முடியவில்லை யெனில், “நான் என்ன செய்தால் உனக்கு சந்தோ சமாக இருக்கும்“என வெளிப்படையாக அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

29. எப்போதும் பாசிடிவ்வாக யோசி யுங்கள்.

30.வீட்டில், குழந்தைகளிடமும் தன்மை யாக இனிமையாகப் பேசுங்கள், பழகுங்கள்.

31. ஏதேனும் சந்தர்ப்பங்களில் பலவீனமாக உணர்ந்தீர்களானால் அதை தாராளமாக தன் துணையிடம் தெரிவித்து அவருடைய உதவி யை ஈகோ பார்க்காமல் ஏற்றுக் கொ ள்ளலாம்.

32.வேண்டாவெறுப்பாக இருக்காம ல், வாழ்க்கைத்துணையின் எதிர் பார்ப்பை நிறைவேற்றுவதில் உண் மையான அக்கறையைக் காட்டுங் கள்.

33. உங்கள் வாழ்வின் கடந்த கால அனுபவங்களை, அதாவது உங்க ள் இருவருக்குள் நடந்த ஸ்வாரஸ்யமான காதல் சம்பவங்களை அவ்வப்போது நினைவுபடுத்தி ஒருவரு க்கொருவர் பேசிக்கொள் ளுங்கள்.

34. மனரீதியாக மட்டுமின்றி உடல்ரீதி யாகவும் ஒருவரையொருவர் நன்கு புரி ந்துவைத்திருக்க வேண்டும். உடல் சார் ந்த நேரங்களில் கூட, காமத்தை விட காதல் ப்ரதானமாக இருக்க வேண்டும்..

35. சாதாரணமாக கை கோர்க்கும் பிடியில் கூட உனக்காக நானிரு க்கிறேன் என்ற நம்பிக்கையை ஏற்ப டுத்தும் வகையில் அமைய வேண்டும்.

36. ஏதாவதொரு பொதுவான விஷய த்தை தேர்ந்தெடுத்து அதை சேர் ந்து ரசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொ ள்ள வேண்டும். உதாரண மாக இசை, மழை, பௌர்ணமி நிலவு, கவிதைகள், புத்தகங்கள் போன்ற வைகள்.

37.தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறும்போது, உதாரணமாக தலை வலி என்று சொன்னால் “என க்கு அதுக்கு மேல வலிக்குது“ என்று பதிலளிக்காதீர்கள். உண்மையான அக்கறையுடன் பணிவிடை செய்யுங் கள்.

38.என்னதான் ஒருவருக்கொருவர் அதிகமாக காதலித்தாலும் அதை வெளிக்காட்டப் பழகுங்கள். மனதிற்குள் வைத்து ஒளிக்கும் காதல் ப்ரயோஜனப்படாது.

விட்டுக் கொடுப்பதும், புரிந்துகொள்வ தும் அந்நியோன்யத்தை வலுப்படுத் தும். ஒருவருக்கொருவர் அவமான மோ வெட்கமோ பார்க்காமல் வெளிப் படையாக இருத்தல், ஈகோ பார்க்கா மல் மன்னிப்பு கேட்கவும், மன்னிக்க வும், பாரபட்சம் பார்க்காமல் அனைத்து விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி பகிர்தல் போன்றவைகள் கணவன் மனைவி உற வினை மேலும் வலுப்படுத்தும்.

கணவன் மனைவி உறவு பற்றியும் மனநிலை பற்றியும் நிபுணரின் அனுபவங்கள்!
வாரத்திற்கு மூன்று முறையோ… தினந் தோறும் ஒருமுறையோ எப்படி என்றா லும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடாலாம் என்கின்றனர் நிபுணர்கள். இதில் இப்படித் தான் என்ற கட்டுப்பாடு எதுவும் கிடையாது.
உடலின் தேவை… மூளையின் கட்டளை… உணர்வுகளின் விருப் பம்… ஹார்மோன்களின் சுரப்பு இவற்றி ன் கலவையே கலவியை நிர்ணயிக் கின்றன என்கின்றனர். இதில் புதிதாக திருமணமானவர்கள் என்றாலும் சரி, திருமணமாகி 15 ஆண்டுகளுக்கு மே லான தம்பதிகள் ஆனாலும் சரி அவர வர்களின் உடல்நிலை, மனநிலையை ப் பொருத்து உற்சாகமான உறவில் ஈடு படுகின்றனர்.
இதுபற்றி விரிவான ஆய்வு மேற்கொண்ட செக்ஸாலஜிஸ்ட் எம்மா ஜிஃப் தனக்கு நேரிட்ட அனுபவ ங்களை எழுதியுள்ளார்.
இதற்கு எதற்கு கணக்கு
தினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெ ல்லாம் இல்லை உங்களுக்கு தேவை என்று படுகிறதா? துணையு டன் உற்சாகமாக ஈடுபடுங்களேன் என்கிறார் எம்மா.
காலியாகும் கலோரிகள்
செக்ஸ் மூலம் உயர் ரத்த அழுத்தம் சரியாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மூளை உற் சாகமடையும் என்பது உண்மைதான் என்கி றார் நிபுணர். ஒவ்வொருவர் வாழும் வாழ்க் கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பதான நேரங்களில் உறவில் ஈடுபடலாம். இது தொட ர்பாக 5 தம்பதியரிடம் மேற்கொண்ட ஆய்வில் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார் நிபுணர்.
வயது வித்தியாசம் பெருசில்லையே
நடாலியா என்ற 35 வயது பெண் தன்னைவிட 7 வயது குறைவா ன கெவின் என்பவரை திரும ணம் செய்து கொண்டுள்ளார். நடாலி யாவிற்கு ஏற்கனவே 20,15,6 வயதில் மூன்று குழந் தைகள் இருக்க திடீரென்று கெ வினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப் போது 6 மாத ஒரு குழந்தை இருக்கிறது.
படுக்கை அறையில் சூப்பர்

தங்களுக்கு இடையேயான வயது வித்தியாசம் பெரிதாக தெரிவதில் லை என்று கூறும் நடாலியா படுக் கை அறையில் உற்சாகமாக இருப் பதாக கூறுகிறார். இதை கெவின் ஒத்துக் கொள்கிறார். தினசரி ஒரு முறை ஏன் இரண்டு முறை கூட உற்சாகமாக ஈடுபடுகிறோம் என்கிறார் கெவின்.
அத எப்படி சொல்றது?

ஜானி கெனித் தம்பதியருக்கான அனுபவம் வித்தியாசமானது. இருவ ருமே ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்கள். பத் தாண்டு களுக்கு முன்பு வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். தினசரி உறவில் ஈடு படுவது தங்களுக்கு பிடித்தமானது என்கி ன்றனர். செக்ஸ் என் பது வார்த்தைகளால் வர்ணிக்க இயலாத புதுவித அனுபவம் என்கின்றனர் இந்த தம்பதியர்.
திகட்டாத அனுபவம்
புதிதாக திருமணமான தம்பதியான பென் போலன் தம்பதியின் அனுபவம் வித்தி யாசமானது. முதலிரவு தொடங்கி மூன்று வாரத்திற்கு அதைப் பற்றிய நினைவாக வே இருந்துள்ளது என்கின்றனர். படுக் கை அறையில் திகட்ட திகட்ட அனுபவித் தோம் என்கின்றனர் அந்த புதுமணத் தம்பதியர்.
முத்தமும் நடனமும்
லேகா பென்டன், லெவிஸ்கென்ஸ்பி தம்பதியரின் அனுபவம் புது விதமானது. முத்தமிடுவதும் நடனமாடு வதும் தங்களை உற்சாக ப்படுத்தும் என்று கூறும் இந்த தம்பதியர் வாரம் முழுவதும் செக்ஸ் வைத்துக்கொண் டாலும் அலுப்பதில்லை என்கின்றன ர். இதனால் இருவருக்கும் இடையே யான காதல்தான் அதிகரிக்கிறது என்கி ன்றனர்.
உற்சாகமான விளையாட்டு

கனடாவைச் சேர்ந்த கோசியா, மைக் கேல் என்பவரை திருமணம் செய்திருக் கிறார் 10 வருடங்கள் ஓடிவிட்டது. ஆனாலும் புதிதாய் திருமணமானதுபோல வாழ்க்கை யை கொண்டாடுவதாக கூறுகின்றனர். போரடிக்கும் நேரங்களில் பல வித உபகர ணங்களை பயன்படுத்தி விளையாட்டினை உற்சாகப் படுத்திக் கொள்வதாக கூறுகின்ற னர்.
எதுவுமே தப்பில்லை
இந்த ஆய்வை நடத்திய செக்ஸ் எக்ஸ்பர்ட் எம்மா ஜிஃப், செக்ஸ் என்பது பலருக்கும் பலவிதமான உணர்வுக ளை தரும். இதற்கு என்று வகுக்கப் பட்ட விதிமுறை எதுவுமில்லை. தின சரி உறவில் ஈடுபட்டால் நார்மல் என் றோ, வாரம் ஒருமுறை என்றால் அப்நார்மல் என்றோ எடுத்துக்கொ ள்ளவேண்டியதில்லை. அவரவர் உடல்நிலையைப் பொருத்து இத னை கையாளலாம்.

துணையுடன் பகிர்ந்து கொள்ளுங் கள்
பெண்களுக்கு மெனோபாஸ் காலம், ஆண்கள் புகை,போதை வஸ்துக்க ளை பயன்படுத்துவதன் மூலம் செக்ஸ் உணர்வுகளை குறைய வாய்ப்புள்ள து. இதுபோன்ற குறை உடையவ ர்கள் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
கிளர்ச்சியை தூண்டும் உணவுகள்
உணவுகளும், மூலிகைகளும் செக்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள் ளைப் பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் செக்ஸ் உணர்வுகளை தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் செக்ஸ் ஹார்மோன் சரியான அளவில் சுரக்கும் என்கின்றனார் நிபுணர்.