Home சமையல் குறிப்புகள் க்ரீன் கபாப் சைவம் -மட்டன் கபாப்

க்ரீன் கபாப் சைவம் -மட்டன் கபாப்

10

தேவையானவை:

கடலைப் பருப்பு – ஒரு கப்
நறுக்கிய கொத்தமல்லி – அரை கப்
புதினா இலை – கால் கப்
சீரகத்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
பிரெட் தூள் – 2 டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – கால் கப்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்துஸ கொ த்தமல்லி, புதினா, பச்சைப்பட்டாணி ஆகியவற்றை சேர்த்து தண்ணீர்விட்டுகெட்டியாக அரைத்துக்கொள்ள வும். அரைத்த விழுதுடன் சீரக த்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத் தூள், பிரெட் தூள், சோளமாவு, இஞ்சி–பூண்டு விழுது, உப்பு சேர்த்துக் கலந்து நீளமான உருளை வடிவத்தில் உருட்டி, ஐஸ்கிரீம் குச்சியால் குத்தி (இட்லி தட்டில்) ஆவியில் வேக வைக்கவும். 10நிமிடம் கழித்து எடுத்து, தக்காளி சாஸ் அல்லது தக்காளி சட்னியுடன் பரிமாற வும். இந்த உருண்டைகளை எண்ணெயில் பொரித்தும் சுவைக்க‍லாம்.

மேலும் இதனுடன் கூடுதலா ன‌ சிறிதளவு துருவிய பனீர் சேர்த்தால், இதன் சுவை அபா ரமாக இருக்கும்

மட்டன் கபாப்

சமையல் குறிப்பு – சுவையான மட்டன் கபாப் எப்ப‍டி செய்வது என்று பார்ப்போமா?

தேவையான பொருட்கள் :
.
மட்டன் கொத்துக்கறி – 1 கிலோ
எண்ணெய் – தேவையான

அளவு
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
பப்பாளிக் காய் பேஸ்ட் – 3 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 2
மிளகாய்த் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலாத் தூள் – 1/4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :
.
வெங்காயத்தை முதலில் பொடியாக நறுக்கிக் கொள் ளவும். பிறகு நன்கு சுத்தமாக கழுவிய ஆட்டிறைச்சி யை, (மட்ட‍ன் கொத்துக்கறியை) தண்ணீரில்லாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன்பின் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் மட்டன், வெங்காயம், இஞ்சிபூண்டுவிழுது, வெண்ணெய், பப்பா ளிக்காய் பேஸ்ட், மிளகாய்த் தூள், கரம் மசாலாத்தூள் மற்றும் உப்புசேர்த்துப் பிசைந்து வைத்துக்கொள்ளவும் .

Garam Masala

பின் அந்த கலவையை இரண்டு மணிநேரம் ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு ஊற வைக்கவும்.

பிறகு அதனை எடுத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத் து, அதில் பொரிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடேற்றவு ம்.

எண்ணெயானது காய்ந்ததும், அந்த கலவையை கட்லட் போல் வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

இப்போது சுவையான மட்டன்கபாப் ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லி மற்றும் புதினாவைத் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.