Home சூடான செய்திகள் கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் தாம்பத்திய அசௌகரியங்கள்

கூட்டுக் குடும்பத்தில் ஏற்படும் தாம்பத்திய அசௌகரியங்கள்

9

Captureசில சமயங்களில் உடல்நலம், சூழ்நிலை, மன அழுத்தம் போன்ற ஏதேனும் காரணத்தால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு குறைவது அல்லது நாட்டமின்றி போவது ஏற்படலாம். தம்பதிகள் யாரேனும் ஒருவருக்கு இது போன்ற எண்ணம் எழலாம். பல ஆண்களாலும், சில பெண்களாலும் கண்டிப்பாக இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பெரும்பாலும் அனைவரும் கூட்டுக் குடும்பத்தில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று அசௌகரியமானதாக தான் இருக்கிறது என கூறுகின்றனர். பெரியோர், சிறியவர்கள் அனைவரும் உறங்கிய பிறகும் கூட தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சற்று சிரமமானதாக இருக்கும் எனவும் சிலர் பதில் அளித்துள்ளனர்.

இயல்பாகவே கூட்டுக் குடும்பம் என்று வந்துவிட்டால் உடுத்தும் உடையில் இருந்து, கணவன், மனைவி கொஞ்சம் கொஞ்சிக் கொள்ள வேண்டும் எனிலும் கூட நீண்ட தயக்கத்திற்கு பிறகு தான் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியும்…

விளக்குகள் அணைத்த பிறகும் கூட உணர்சிகளை வெளிப்படுத்த முடியாது. ஆங்காங்கே உறக்கத்தில் சிலரின் சிறு அசைவுகளும் கூட அசத்தத்தை உண்டாக்கும், அது பதட்டத்தை உண்டாக்கும். அனைவரும் உறங்கிவிட்டனரா என சோதிக்க வேண்டும், இதற்கு பதிலாக வார இறுதிகளில் எங்கேனும் அருகே வெளியிடங்களுக்கு பிக்னிக் சென்று வந்து விடலாம். இல்லையேல் குடும்பத்தைபிக்னிக் அனுப்பி விடலாம்.

ஆடை அணியும் விஷயத்தில் நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். ஸ்கர்ட், ஷார்ட்ஸ் எல்லாம் அணிய முடியாது கால்கள் மறைக்கும் அளவிலான நீளமான உடைகளை தான் தேர்வு செய்ய வேண்டும். இதையும் தாண்டி கணவருக்கு உணர்ச்சி ஏற்பட்டால், அனைவரும் உறங்கும் வரை காத்திருக்க தான் வேண்டும்.

நெருக்கம் என்பதை தவிர்த்து, ஒரு மருமகள் கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்வதே கடினம். கணவன், மனைவி உடனான உறவே இதனால் பதிக்கப்படுகிறது.

வார நாட்களில் வரும் விடுமுறை வரும் போது தம்பதிகள் அதை வீட்டில் கூறுவதில்லை. எங்கேனும் லாங் டிரைவ் சென்று விடுவார்கள். சில வார இறுதிகளில் அலுவலக வேலை என கூறி சுற்றுலா சென்றுவிடுவார்கள்.

பல அறைகள் கொண்ட வீடுகளில் நள்ளிரவில் தான் தாம்பத்தியத்தில் ஈடுபடுவார்கள். இந்நேரத்தில் அவர்கள் மற்றவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதாக கருதலாம். ஆயினும், யாரேனும் நீர் குடிக்க அல்லது என்ன நடக்கிறது என்பதை அறிந்து எழுந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

கூட்டுக் குடும்பத்தில் அனைவருக்கும் தனித்தனி அறைகள் இருந்தால் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது பெரிய பிரச்சனை இல்லை. இங்கு பிரச்சனை என்னவெனில் அனைத்தும் சத்தமின்றி நடக்க வேண்டும். முக்கியமாக மறுநாள் ஆணுறையை யாருக்கும் தெரியாமல் வெளியேற்ற வேண்டும்.

தொடக்கத்தில் சற்று தயக்கமாக தான் இருக்கும். ஏனெனில், மற்றவர் ஹாலில் டிவி பார்த்துக் கொண்டிருக்கலாம். உறங்காமல் இருக்கலாம். அந்நேரத்தில் படுக்கையறையில் தாம்பத்தியத்தில் ஈடுபடுவது சிரமமாக தான் இருக்கும். முக்கியமாக வீட்டில் பருவ வயதினர் இருந்தால் தான் மிகவும் அசௌகரியமான உணர்வு தரும்.