Home சூடான செய்திகள் குழந்தைப் பேறுக்கு பின்னர் உறவு ருசீகரமாக இருக்குமாம்!!சொல்றாங்க

குழந்தைப் பேறுக்கு பின்னர் உறவு ருசீகரமாக இருக்குமாம்!!சொல்றாங்க

30

Captureகுழந்தைபேறுக்கு பிறகு செக்ஸ் வைத்துக் கொள்ளும் தம்பதிகள் உடலுறவை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். இது அவர்களுக்குள் புரிதல் மிகுந்த காதல் உணர்வை அதிகரிக்கச் செய்யும் என புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

சுமார் 1,118 குழந்தை பெற்ற தம்பதிகளிடம் நடத்திய கணக்கெடுப்பில் 94% தம்பதிகள் தங்களது செக்ஸ் உறவில் திருப்தி அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், 60% தம்பதிகள் குழந்தைப்பேறுக்கு பிறகு தங்களது செக்ஸ் வாழ்க்கை சிறப்பாக அமைந்துள்ளது என கூறியுள்ளனர். புது பெற்றோர்கள் குழந்தைப்பேறுக்கு பிறகு 58 நாட்கள் காத்திருந்து உடலுறவுக் கொள்ள வேண்டும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெண்கள் தங்களது கணவன்மார்கள் குழந்தை பெற்ற பின் தங்களை கவர்ச்சியாக கருதுவதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த இணையதளம் நடத்திய ஆய்வில் குழந்தை பிரசவிப்பதற்கு முன்னதாக இருக்கும் தோற்றத்தையே ஆண்கள் விரும்புகிறார்கள். இதில் வெறும் 14% பெண்கள் மட்டுமே குழந்தைப்பேறுக்கு பிறகும் திடமான உடல் அமைப்பை பராமரிக்கின்றனர் என தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில்,’குழந்தை பெற்றுக் கொள்வது தம்பதிகளின் உறவில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், அவர்கள் இடையே உள்ள தாம்பத்திய உறவை வலுப்படுத்த உதவும்’ என கூறுகின்றனர். 10 மாத கர்ப்ப கால இடைவெளிக்குப் பிறகு உடலுறவில் ஈடுபட பெண்களை விட ஆண்களே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் ஆண்கள் வாரம் இரு முறையும், பெண்கள் வாரம் ஒரு முறையும் உடலுறவில் ஈடுபட்டால் திருப்தியடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.