Home பாலியல் காலாவதியான கா ண்டத்தை பயன்படுத்தினால் என்னவாகும்? அப்படி பயன்படுத்தியது உண்டா?

காலாவதியான கா ண்டத்தை பயன்படுத்தினால் என்னவாகும்? அப்படி பயன்படுத்தியது உண்டா?

61

பா ல்வினை நோ யிலிருந்து பாதுகாக்க, கரு உருவாவதை தடுக்க, பாதுகாப்பான முறையில் தாம்பத்தியம் மேற்கொள்ள என முழுக்க முழுக்க பாதுகாப்பான விஷயம் ஆ ணுறை. ஆனால் இதன் பெயரை சொன்னாலே கெட்ட வார்த்தையை சொன்னது போல் ஒரு உணர்வு எல்லோர் மத்தியிலும்! இன்னும் பொதுவெளியில் பேசப்படாத ஒன்றாக மறைத்து மறைத்து வைக்க அது குறித்த விழிப்புணர்வும் குறைந்து கொண்டு தான் செல்கிறது. இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவு என்கிறது ஒரு ஆராய்ச்சி.

இதனை வாங்கும் போது அதில் குமிழிகள் எதுவும் இல்லாமல் வாங்குவது நல்லது. ஏனெனில் குமிழ்கள் இருந்தால் உ டலுறவின் போது அழுத்தம் ஏற்பட்டு கிழிந்து விட வாய்ப்புகள் அதிகம். ஆ ணுறையை தவறாக அணிந்துவிட்டால் உடனே அதனை கழட்டி தூர போட வேண்டும். மீண்டும் அதனையே பயன்படுத்துவது நல்லதல்ல.

மா தவிடாய் காலத்தால் பெண்கள் மாதத்தில் சில நாட்கள் தான் க ருத்தரிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் ஆண்களின் வி ந்து எப்போதுமே வீரியத்துடன் இருப்பதால் எந்த நேரத்தில் உறவு கொண்டாலும் க ருதரித்தலை ஊக்குவிக்கும் அதனாலே க ருத்தடை பெண்களை காட்டிலும் ஆண்களுக்கு அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது.

இந்தியாவில் ஆ ணுறையை யார் வேண்டுமானாலும் வாங்கலாம் ஆனால் பாதுகாப்பான ஒரு விஷயத்தை வாங்க பலரும் கூச்சப்பட்டு கொண்டு தான் வாங்குகிறார்கள். அப்படி கடைகளில் வாங்க சங்கடமாக உணர்ந்தால், இருக்கவே இருக்க ஆன்லைன் சந்தை, அங்கு சென்று வாங்கலாம்.

கடையோ ஆன்லைனோ காலாவதி தேதியை மட்டும் சரியாக பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள். ஒருவேளை காலாவதியான ஆ ணுறையை பயன்படுத்தினால் என்னவாகும் என்றால் அதனது மீட்சி தன்மையை இழந்து பயன்படுத்த இலகுவாக இல்லாமல் இருக்கும். பார்க்க நன்றாக இருப்பினும் அதனை பயன்படுத்துவது நல்லதல்ல.

ஆ ணுறை போன்றே உறவின் போது என்ன வகையான உயவு பொருள் பயன்படுத்துகிறோம் என்பதும் முக்கியம். ஏனெனில் அது கா ண்டத்தை சேதப்படுத்த வாய்ப்புண்டு. அசால்டாக இல்லாமல் ஆ ணுறை பயன்படுத்தும் முன் காலாவதி தேதியை ஒருமுறை பார்த்துக்கொள்வது தேவையற்ற பின்விளைவுகளை தவிர்க்கும்.