Home பாலியல் கன்னிப்பெண்களைத் தாக்கும் ஒரு மர்ம நோய்!- அதிர்ச்சித் தகவல்

கன்னிப்பெண்களைத் தாக்கும் ஒரு மர்ம நோய்!- அதிர்ச்சித் தகவல்

22

கன்னிப் பெண்களைத் தாக்கும் ஒருவித நோய்!- அதிர்ச்சித் தகவல்கள்
கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய்
கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய் –
Poly-Cystic Ovarian Syndrome (PCOS) என்றால் என்ன?
கன்னிப் பெண்களுக்கு ஏற்படும் ஒரு நோய், Poly-cystic Ovarian Syndrome (PCOS)அதாவது சூலக நீர்க் கட்டிகள்
ஓவரி (OVARY) எனப்படுவது பெண்களின் சூலகம். இதுதான் முட் டைகளை உருவாக்கி அந்த
முட்டைகள் கருக்கட்டியே குழந்தைகள் உருவாகின்ற ன. cyst எனப்படுவது தண் ணீர் நிரம்பிய கட்டிகள், poly என்பது பல என்பதை க் குறிக்கும்.
ஆக ஒரு பெண்ணின் சூலக த்திலே பல திரவக்கட்டிக ளின் உருவாக்கமே poly-cystic ovarian syndrome எனப்படுகிறது.
இந்த நோயானது பெண்க ளிலே பொதுவான ஒரு நோயாகும். நிறையப் பெண்களுக்கு இந்த நோய் இருந்தாலும் அது எல்லா பெண்களிலும் தன்னை வெளி க் காட்டிக் கொள்வதில்லை.
இந்த திரவக் கட்டிகளை கொ ண்ட சூலகங்கள் அசாதாரண மாக ஹோர்மொன்களை சுரப் பதன் மூலமே ஒரு பெண்ணுக்கு பிரச்சினைகளைக் கொடுக்கிறது.
இந்த நோயின் அறிகுறிகள் எவை?
1.அளவுக்கதிகமான பரு( முகப் பரு)
2.உடற் பருமன் அதிகரித்தல்.
3.அசாதாரண இடங்களி லே பெண்களுக்கு மயிர் வளர்தல், அதாவது முகம் , மார்பு, தொடை போன்ற இ டங்களில் மயிர் வளர்தல்.
4.ஒழுங்கற்ற மாதவிடாய்
5.மலட்டுத் தன்மையை ஏற்படுத்தல்.
இவை எல்லாம் , எல்லா பாதிக்கப் பட்ட பெண்களிலேயும் இருக்கு ம்என்றில்லை. இந்த நோய் இரு க்கும்போதே பல பிள்ளைகளை ப் பெற்று வாழ்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கிட்டத்தட் ட பதினைந்து பெண்களுக்கு ஒரு பெண் இந்த நோயினால் பா திக்கப் பட்டவளாக இருக்கிறார் கள் மற்றும் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சீனியைக் கட்டுப்படுத்தும் இன்சுலின் என்ற ஹோர்மொனின் திறன் குறைவதால் அவர்கள் நீரழிவு நோயினால் பாதிக்கப் படுவதற்கான சந்தர்ப்ப ங்கள் அதிகரிக்கின்றன.
இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த் துக் கொள்வதற்காக நிறைய மருத்துவ வசதிகள் வந்து விட்டன. அதிலும் எவ்வள வு விரைவாக மருந்து ஆரம்பிக்கப்படுகி றது என்பதைப் பொறுத்தே அதன்பின் விளைவுகள் தீர்மானிக்கப் படுகின்றன.
ஆகவே , கன்னிப் பெண்களே உங்களுக்கு கீழே உள்ள ஏதாவது ஒரு பிரச்சினை இரு ந்தால் வைத்தியரை நாடி ஆலோசனை பெறுங்கள்….
1. 14 வயதாகியும் மாதவிடாய் ஆரம்பிக்கா விட்டால்.
2.மார்பு , முகம் போன்ற இடங்களிலே மயிர் வளர்ந்தால்.
3.ஒருவருடத்திலே எட்டுக்கும் குறை வான மாதவிடாய்கள்தான் ஏற்படுகிறது என்றா ல்.
4.அளவுக்கு அதிகமான கட்டுப்படுத்த முடி யாத முகப் பரு ஏற்பட்டால்.
5.உங்கள் கழுத்து மற்றும் கமக்கட்டுப் பகுதிகளிலே கறுப்புப் படிவு கள் காணப்பட்டால்.
6.அதிக தாகம், அதிக சிறுநீர் கழித்த ல், அதிக பசி போன்ற நீரழிவு நோய் க்கான குணங்குறிகள் ஏற்பட்டால்.
7.உடற்பருமன் அளவுக்கதிகமாக அதிகரித்தால்.