Home இரகசியகேள்வி-பதில் கணவனின் ஆண்குறி விறைப்பு போதவில்லை.

கணவனின் ஆண்குறி விறைப்பு போதவில்லை.

258

images (5)amil doctor tips, tamil sex doctor tips, eppadi pennai santhosa pauththuwaathu, tamilsexdoctor.com, tamilsex.com, sex kelvi pathilkal, tamil sex kelvi pathilkal, sex kelvikal,kamaகேள்வி :கணவனின் ஆண் குறியில் விரைப்பு மிக குறைவாக உள்ளஊ. ஏவ்வளவு முயன்று தூண்டினாலும் முடியவில்லை. நல்ல ஆரோக்கியமான முறயை பின்பற்றுபவர் தான். விந்து மிக விரைவாக வெளியாகியும் விடுகிறது.

பதில் :
முதலில் இத்தளத்தில் இணைந்தமைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் சுபா.

இனி உங்கள் ஐயத்திற்கு வருகிறேன்.

உங்கள் கேள்வியில் உங்கள் கணவர் மற்றும் உங்களின் வயது குறிப்பிடப்படவில்லை. இது மிக மிக முக்கியம். ஏனென்றால் வயதினை ஒட்டித்தான் இது போன்ற ஐயங்களில் விரிவான விளக்கம் தரமுடியும்.

இருப்பினும் தற்சமயம் சில அறிவுரைகளைத் தருகிறேன். வாசித்து பயனடையுங்கள். உங்கள் இருவரின் வயதையும் குறிப்பிடுங்கள்.

ஆண்குறி விறைப்பு குறைவதற்கு பலவித காரணங்கள் உண்டு.

1. ஸ்மோக்கிங் அல்லது குடிப்பழக்கம் அல்லது இரண்டும்.

2. அதிக டென்சன். பல்வேறு பிரச்சினைகளால் மன நிலை அமைதியின்றி இருத்தல்.

3. சர்க்கரை வியாதி முற்றிய நிலையில் இருந்தால்.

4. சூழ்நிலை சரிவர பொருந்தாத நிலையில் உடலுறவு. உதாரணத்துக்கு பல உறுப்பினர்கள் இருக்கும் இல்லத்தில் மற்றும் குழந்தைகள் எந்நேரமும் விழித்துக் கொள்ளும் என்னும் பயம் இருக்கும் நிலையில் ஆண்குறி சரியாக எழும்பாது.

இத்தகு குறைபாடுகளை உனவுப்பழக்கங்கள் மூலமாகவும் மருந்து மாத்திரைகள் மூலமாகவும் சரியாக்கிக் கொள்ளலாம்.

மருந்து மாத்திரைகள் குறித்து உங்கள் இருவரது வயது மற்றும் உடல்நிலை பற்றிய குறிப்புகளுக்குப் பின்னர்தான் ஆலோசனை வழங்க முடியும்.

உணவுப்பழக்கங்கள்:

1. தினசரி முட்டை சேர்த்துக் கொள்ளலாம்.

2. கடல் மீன் ( நண்டு இறால் மிக மிக அருமையான ஊக்கி ) வகைகளைச் சேர்த்துக் கொள்லலாம்.

3. பாலில் பாதாம் பருப்பை அரைத்துக் கலக்கி இரவில் ஒரு தம்ளர் குடித்து வரலாம்.

4. முடிந்த அளவுக்கு முருங்கைக் கீரை முருங்கைக் காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்லலாம்.

மேலும் சில வழிமுறைகள் கீழ்க்கண்ட திரியில் வாசியுங்கள்.

பாலியல் ஆற்றலை அதிகரிக்க..

அடுத்து உங்களது வயது எத்தனை குழந்தைகள் உடல் வாகு ( பருமன் அல்லது ஒல்லி ) போன்ற சில குறிப்புகளைத் தந்தால் மேற்கொண்டு ஆலோசனை வழங்குகிறேன்.

கேள்வி :
நான் எனக்கு தெரிந்து பலவருடங்களாக சுய இன்ப பழக்கத்தில் ஈடுபட்டு வந்தேன். எனது பிறப்புறுப்பு சிறியதாக இருபதாக உணர்கிறேன் ஆனால் விறைப்பில் பெரியதாக உள்ளது. பின் காம உணர்வு ஏற்படும் பொது நான் சுய இன்ப பழக்கத்தை செய்வேன் ஆனால் அளவுக்கு அதிகமாக என் வாழ்நாளில் செய்து விட்டதாக உணர்கிறேன். காம உணர்வு ஏற்படும் போது எனது பிறப்பு உறுப்பில் வழவழப்பான திரவம் விந்து வெளியேற்றுவதற்கு முன்னாள் வரும். ஆனால் இது வேறு எந்த நேரத்திலும் வந்தது இல்லை. ஆனால் நான் திருமணம் செய்து கொள்ள போகும் பெண்ணுடன் போனில் பேசும் பொழுது திரவம் வழிகின்றது. எனக்கு 26 வயது ஆகின்றது… அதே சமயம் திரவம் வழிந்த பின்னல் விதைகளில் லேசான வலி ஏற்படுகின்றது. அதில் வலது பாக விதையில் மட்டும் வலி ஏற்படுகின்றது . மேற் தோலில் அடிகடி அரிப்பு ஏற்படுகின்றது. ஆனால் நான் இப்பழக்கத்தை விட்டு 2 மாதங்கள் ஆகின்றது. திருமணத்திற்கு பின் என் மனைவியை திருப்தி படுத்த முடியாமல் போய்விடுமோ என்று பயமாக உள்ளது மற்றும் விரைவாக விந்து வெளிவந்து விடுமோ என்றும் பயபடுகின்றேன், நான் இருக்கும் நிலையில் என்னால் வெளியே சொல்ல முடியாமல் மன கஷ்டத்திலும் உள்ளேன். நீங்கள் தான் எனது தந்தை ஸ்தானத்தில் இருந்து எனக்கு வழிகாட்டவேண்டும். “எனக்கு குடி, புகை, போன்ற வேறு எந்த கெட்ட பழக்கமும் அறவே கிடையாது”

வழிமுறை மற்றும் மருந்து அதனை உட்கொள்ளும் முறை இவற்றை எனக்கு தருவிக்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.
பதில் :
ஆண்கள் வயதுக்கு வரும்போது விந்து சுரக்க ஆரம்பிக்கிறது. அது ஒரு ஊற்று போல. இறைக்க இறைக்க ஊறிக்கொண்டே இருக்கும். ( கிட்டத்தட்ட 70 வயது வரை.)

எனவே சுய இன்பம் செய்வது என்பது இயற்கையான ஒன்றே.

விந்து அதிகம் ஊறி நிறையும் போது நீங்கள் சுய இன்பம் செய்யவில்லை என்றாலும் உறக்கத்தில் அது வெளியேறியே தீரும். எனவே இது பயப்படும் விஷயம் இல்லை.

உங்கள் உறுப்பு சிறியதாக இருக்கிறது என்னும் பயம் அவசியமே இல்லை. விறைக்கும் போது அது விரிகிறது நீள்கிறது என்று நீங்களே குறிப்பிட்டுள்ளதைக் கவனிக்கும் போது உங்களது ஆண் உறுப்பு இயல்பான நீளத்தில் தான் உள்ளதென அறிய முடிகிறது.

நீங்கள் சொல்லும் விந்துக்கு முன் வருகின்ற திரவம் ப்ரிகம் ( pre cum ) என்னும் உடலுறவுக்கு அவசியமான வழவழப்புதிரவம். அதனால் தான் உடலுறவில் கடினம் இன்றி எளிதாக வலியில்லாமல் உடலுறவு கொள்ள முடியும்.

நீங்கள் உங்கள் வருங்கால மனைவியுடன் பேசும்போது உணர்வுகள் தூண்டப்படுகிறது. உடலுறுவுக்காக நீங்கள் தயாராகிறீர்கள் என்பதற்கான அறிகுறியே அது.

விந்து வெளியேறிய பின் விதைப்பைகளில் வலி என்பது மிக மிக சாதாரணமானது. பயப்பட அவசியமில்லை.

திருமணத்திற்குப் பின் உங்கள் இல்லறம் மிகவும் நன்றாகவே இருக்கும். எனவே எந்த பயமும் இல்லாமல் தன்னம்பிக்கையுடன் உங்கள் வருங்காலத்தை எதிர்நோக்குங்கள்.

எனது நல்வாழ்த்துகள்.