Home சூடான செய்திகள் ஓரினசேர்க்கை தகராறில் 3–ம் வகுப்பு மாணவனை கொன்ற 8–ம் வகுப்பு மாணவன்

ஓரினசேர்க்கை தகராறில் 3–ம் வகுப்பு மாணவனை கொன்ற 8–ம் வகுப்பு மாணவன்

50

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த தாசம்பட்டி பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் விடுதியில் தங்கி படித்த வேலூர் மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்த தனியரசு (9) என்ற 3–ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 1–ந் தேதி மாலை விடுதி குளியலறையில் ரத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார்.

இதையடுத்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மாணவன் தனியரசுவை கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நடத்திய விசாரணையில் மாணவர் கொலை செய்யப்பட்டது அம்பலமானது. அதன் பேரில் காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் ஆகியோர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் விடுதி காப்பாளர் ரவி என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மாணவர் தனியரசு இறந்து கிடந்த தகவல் தெரியவந்ததும் மற்ற மாணவர்களின் வீட்டிற்கு தகவல் கொடுத்து அவர்களை அழைத்து செல்ல கூறி விட்டேன். அப்போது 8–ம் வகுப்பு படிக்கும் மாணவர் சக்திவேலின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தேன். அவர்கள் மாணவரை பெங்களூருக்கு பஸ் ஏற்றி அனுப்பி வைக்க கூறினார்கள்.

அதன்படி நான் காவேரிப்பட்டணம் சென்று பஸ் ஏற்றி அனுப்பி வைத்தேன் என்றார். இதையடுத்து போலீசார் பெங்களூர் சென்று மாணவர் சக்திவேலை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவன் வார்டனுக்குத்தான் தெரியும். எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறிவந்தான். மேலும் அவனது பேச்சில் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் தெரிந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் சக்திவேல் குறித்து மற்ற மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது லோகேஷ் என்ற ஒரு மாணவன், தனியரசு இறந்த அன்று சக்திவேல் பேண்டில் ரத்தக்கறை படிந்து இருந்ததாக தெரிவித்தான்.

அதன்பேரில் மாணவர் சக்திவேலை பிடித்து விசாரணை நடத்திய போது கொலை செய்ததை ஒப்பு கொண்டான்.

அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுப்பற்றிய விபரம் வருமாறு:–

விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக 3 நாட்கள் விடுமுறையாக இருந்ததால் சக்திவேல் பெங்களூர் சென்று இருக்கிறான். அங்கு நண்பர்களுடன் செல்போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான். அப்போது இருந்தே ஒரு மாதிரியாக இருந்து வந்திருக்கிறான். திங்கட்கிழமை பள்ளிக்கு வந்தும், செல்லாமல் விடுதியிலேயே தங்கி கொண்டான்.

அந்த நேரத்தில் குளியலறைக்கு சக்திவேல் சென்றான். அப்போது தான் மாணவர் தனியரசு அங்கு வந்திருக்கிறார். அங்கு ஓரின சேர்க்கைக்கு அழைத்த போது தனியரசு மறுக்கவே ஆத்திரத்தில் சக்திவேல் அடித்து இருக்கிறான். இதில் அவர் மயக்கம் அடைந்தார். பின்னர் வெளியில் சொல்லி விடுவான் என்று பயந்த சக்திவேல் அருகில் இருந்த ஹாலோ பிளாக்ஸ் கல்லால் மாணவன் தனியரசு தலையில் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் சக்திவேலை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.