Home இரகசியகேள்வி-பதில் ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன்

ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன்

64

Hot-Aunty-Arpitha-Malayalam-Sex-Storiesகேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது. அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்

பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில் அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும். பின்வரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.

முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப் படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர் களிடம் தெரிவியுங்கள்.

மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள். தேவைப்பட்டால் மருத்துவரிடமோ உளவியல் ஆலோசகரிடமோ திருமணத்திற்க்கு முந்தைய கவுன்சிலிங் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.

முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.

அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்த்து விடவும்.

முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும், பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள்.

உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.

நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான நகைகள் வேண்டாம்.

காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட் தடவிக் கொள்ளுங்கள்.

உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.

கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.

படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.

முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள் உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.

முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப் பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.

உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன் விளையாட்டுகளில் செலவழியுங்கள்.

முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.

பெண்ணுறுப்பில் வலியையும், வறட்சியையும் ஏற்ப்பட்டால் அதைக்குறைக்க குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.

உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.

பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக – பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள். நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.

முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால் உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா இருக்கலாம்.

கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம், 39 வயது ஆண் நான், எனக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. அதற்கு மருந்துகள் ஏதும் சாப்பிடவில்லை, உணவுக்கட்டுப்பாடும் பின்பற்றுவதில்லை. தற்போது எனக்கு விரைப்புத்தண்மை குறைபாடு, உடலுறவில் ஈடுபாடின்மை போன்ற பிரச்சனைகள் உள்ளன, இது எதனால், இதற்கு சிகிச்சை உண்டா?

பதில்: சர்க்கரை வியாதியால் பல்வேறு கேடுகள் உடலின் உள்ளுறுப்புகளுக்கு உண்டாகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் சுமார் 35 முதல் 75 விழுக்காடு வரை ஆண்மைக் குறைபாட்டை உண்டாக்கிவிடுகிறது என்பது அனைவரும் அறியாத விஷயம்.

இரத்தநாளச் சுவர்களில் இருந்து நைட்ரிக் ஆக்சைடு என்ற இரசாயனப் பொருள் வெளியிடப்பட்டு இரத்தத்தில் கலந்து செல்கிறது. இந்த இரசாயனப் பொருள்தான் ‘இரசாயனத் தூதுவர்’ மாதிரி செயல்பட்டு ஆணுறுப்பின் மென்மையான தசைகள் மற்றும் இரத்த நாளங்களை விரிவடையுமாறுத் தூண்டுகிறது.

அதிகமான இரத்த சர்க்கரை இருக்கும் போது இரத்தத்தில் கலக்கப்படும் நைட்ரிக் ஆக்சைடு வெளியிடப்படுவதையே தடுத்துவிடுகிறது. இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைடு குறைந்து விடுவதால் ஆணுறுப்புக்கு வரும் இரத்த நாளங்கள் சுருங்கி, இரத்த ஓட்டத்தையும் குறைக்கிறது. நாளடைவில் இரத்த நாளங்கள் கேடுற்று பழுதாகிச் சிதைந்து விடுகின்றன.

ஆணுறுப்பு இரத்த நாளங்களை மட்டுமின்றி, உடலின் எல்லா பகுதியிலுமுள்ள இரத்த நாளங்களுக்குச் செல்லும் நைட்ரிக் ஆக்சைடையும் சர்க்கரை தடுப்பதால்தான் இரத்த நாள பாதிப்புகள் ஏற்படுகிறது.

சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 73 விழுக்காடு அளவிற்கு அதிகமான இரத்த அழுத்தமும், சர்க்கரை வியாதியும் சேர்ந்து இரத்த ஓட்டத்தைக் குறைத்து, இரத்த நாளச் சிதைவை உண்டாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகள் இரத்த நாளச் சுவர்களில் படிந்து, அவற்றைச் சுருக்கிவிடுகின்றன. இந்த நிலையில் இரத்த நாளங்கள் விரிவடைவதில் சிக்கல்கள் தோன்றுகின்றன. ஒருவேளை விரிவடைந்தாலும் அது நைந்து கிழிந்துவிடுகின்றன. இரத்தக் கொழுப்புடன் சர்க்கரை நோயும் சேர்ந்திருக்கும் போது பாதிப்பின் அளவு அதிகரித்து விரைப்பு ஏற்படாத நிலை உண்டாகிறது.

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் இரத்த நாளங்கள் சுருங்குவதால் அவை விரிவடைவதில் சிக்கல்கள் இருக்கும். சர்க்கரை வியாதியும் இதனோடு சேர்ந்து கொள்வதால் இரத்த நாளங்கள் விரைப்படையாமல் ஆண்மைக்குறை ஏற்படுகிறது

எனவே தாமதிக்காமல் மருத்துவர் அவர்களை சந்தித்து மருந்துகளுடன் பூரண உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றி ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.

கேள்வி: டாக்டர் நான் ஒரு கல்லூரி மாணவன். இரண்டு வாரங்களுக்கு முன்னால் கோவாவிற்கு டூர் போன போது நண்பர்களின் கட்டாயத்தின் பேரில் ஒரு விலை மகளிடம் உடல்ரீதியான தொடர்பு வைத்துக் கொண்டேன். மறுநாளே எனக்கு பயம் வந்து விட்டது, எயிட்ஸ் தொற்றிக் கொண்டிருக்குமோ என்று. அதனால் மறுநாளே எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொண்டேன். பரிசோதனை முடிவில் எனக்கு எச்.ஐ.வி இல்லை என்று முடிவு வந்துள்ளது. இதனால் எனக்கு எயிட்ஸ் தொற்றவில்லை என்று அர்த்தமா டாக்டர்?

பதில்: எயிட்ஸ் பாதிப்பிற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டாலோ, அல்லது நீங்கள் ஒரு முறை தகாத உடலுறவு கொண்டிருந்தாலோ, நீங்கள் பரிசோதனைக்கு குறைந்த பட்சம் மூன்று மாதம் நீங்கள் பொறுத்து இருக்க வேண்டும். நீங்கள் எயிட்ஸ் தொற்றும் சூழ் நிலை ஏற்பட்ட மறு நாளே பரிசோதனை செய்ததால், இந்த பரிசோதனை சரியான முடிவைத் தராது. இந்த மாதிரி பரிசோதனை செய்ய சரியான சமயம் மூன்று மாதங்கள் கழித்தே. அபூர்வமாக, சிலருக்கு ஆறு மாதங்கள் கழித்து செய்யும் பரிசோதனையில் தான் அவர்கள் பாதிக்கப் பட்டிருப்பது தெரிய வரும். அதனால் நான் பரிந்துரைப்பது இது தான்: மூன்று மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் அன்றிலிருந்து ஆறு மாதம் கழித்து ஒரு பரிசோதனையும் செய்துகொள்ளுங்கள். இனிமேல், உங்கள் வாழ்க்கைத் துணையைத் தவிர வேறு யாரிடமும் பாதுகாப்பில்லாமல் உடலுறவு கொள்ளாதீர்கள்.

எச். ஐ. வி- HIV பரிசோதனை என்பது உங்கள் ரத்தத்தில் உள்ள எச். ஐ. வி கிருமியை கண்டுபிடிக்கும் பரிசோதனை அல்ல. மாறாக, இந்தக் கிருமியினால் உங்கள் உடலில் உருவாகும் எதிர்ப்பு அணுக்கள் (Antibodies) உள்ளனவா என்று தான் பரிசோதிக்கப்படுகிறது. இவ்வாறான எதிர்ப்பு அணுக்கள் (Antibodies) ரத்தத்தில் இருந்தால், உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது என்று முடிவு சொல்லி விடுவார்கள். இதனால் தான் இந்த பரிசோதனையை ஆங்கிலத்தில் “HIV Antibody Test”என்று சொல்லுகிறார்கள். ஒரு முறை உங்களுக்கு எச். ஐ வி கிருமி தொற்றி விட்டால் இந்த எதிர்ப்பு அணுக்களை உங்கள் உடல் உற்பத்தி செய்ய சுமாராக மூன்று மாதங்கள் ஆகும். அபூர்வமாக ஆறு மாதங்கள் கூட ஆகலாம்.

நீங்கள் எச். ஐ.வி பரிசோதனைக்கு போகும்போது, சந்தேகத்திற்கு இடமான ஒரு சூழ்நிலைக்கு – தகாத உறவு அப்புறம் குறைந்தது மூன்று மாதம் கழித்தே போக வேண்டும். உங்களுக்கு எச். ஐ.வி இல்லை என்று முடிவு வந்தால், அந்த பரிசோதனைக் கூடத்திலேயே -லேப் மறுபடி ஆறு மாதம் கழித்து வந்து மறுபடி பரிசோதனை செய்து கொள்ள சொல்லுவார்கள். மறக்காமல் அதே போல செய்யுங்கள். இதற்கு இடைப்பட்ட நேரத்தில் பாதுகாப்பில்லாத உடலுறவால் வரும் பிரச்சனையை எண்ணிப் பாருங்கள்.

ஒரு வேளை, துரதிர்ஷ்டவசமாக “HIV Positive ” என்று பரிசோதனையில் தெரியவந்தால் உங்களுக்கு எச். ஐ. வி. கிருமி தொற்றி விட்டது என்று அர்த்தம். ஆனால், இதனால் உங்களுக்கு எயிட்ஸ் வந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. எயிட்ஸ் என்பது இந்த கிருமியின் தாக்கம் முற்றிப்போனால் வரும் கடைசி நிலையாகும். நீங்கள் எச்.ஐ.வி க்கு சரியான மருந்துகளை உட்கொள்ளவில்லை எனறால் இது எயிட்ஸில் போய் முடியலாம்.

உங்களுக்கு எச். ஐ.வி உள்ளது உறுதி ஆகிவிட்டால், நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் ரெண்டு:

உடனடியாக மருத்துவரை அணுகி, எயிட்ஸ் வராமல் தடுப்பது எப்படி என்று ஆலோசனை பெறுங்கள். எச்.ஐ.வி தாக்கம் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், ஓரளவு நல்ல வாழ்க்கைத் தரத்துடன் வாழ வழி உள்ளது.

உங்களின் மூலம் மற்றவர்களுக்கு இந்த கிருமி பரவும் அபாயம் உள்ளது என்பதை அறிந்து பொறுப்புடன் செயல்படுங்கள்.

எச்.ஐ.வி தாக்கி விட்டால், நீங்கள் தனி மரம் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.இந்தக் கிருமி தாக்கப் பட்டவர்களுக்கு என்று இணையங்களிலும், கிட்டத்தட்ட எல்லா நகரங்களிலும் இப்போது குழுக்களும் அமைந்துள்ளன. இவற்றில் சேர்ந்து, பயன் பெறலாம்.