Home இரகசியகேள்வி-பதில் ஒரு மோசமான கணவன் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணம்

ஒரு மோசமான கணவன் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணம்

215

real-indian-girls-nude-recent-image-porn-freeTamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka,cenimasex,என் வயது 45; பெற்றோருக்கு நான் ஒரே பெண். கூடப் பிறந்தவர்கள் இரு அண்ணன்கள்; எங்கள் மூவருக்கும் திருமணமாகி,
குழந்தைகள் உள்ளனர். எனக்கு, 18 – 19 வயதுகளில் இரு பெண் குழந்தை கள். இருவரும் படிக்கின்றனர்.
திருமணம் ஆகும் வரை, பெற்றோர் மற்றும் அண்ணன்களுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். என், 23வது வயதில் திருமணம் நடந்தது. என் கணவர் என்னை விட, ஆறு வயது மூத்தவர். அரசு வேலையில், நல்ல சம்பளம் வாங்குபவராக இருந்தார். நானும், நல்ல வேலையில் இருக்கி றேன். என் கணவருடன் உடன் பிறந்தோர் இரு அண்ணன்கள், ஒரு அக்கா. அனைவருக்கும் திருமணமாகி, சந்தோஷமாக உள்ளனர்.
எங்களை மிகவும் நல்ல முறையில் வளர்த்தனர் என் பெற்றோர். உறவி னர் மற்றும் நண்பர்களை மதித்து, பணிவுடன் நடந்து கொள்வோம். நானும், என் இரு அண்ணன்களும் பட்டப்படிப்பு முடித்தவர்கள்.
எனக்கு திருமணம் நடப்பதற்கு முன், என் கணவரைப் பற்றி அவர்கள் ஊரில் உள்ள ஒருவரிடம் விசாரித்துள்ளார் என் தகப்பனார். அவர், என் கணவர் மற்றும் மாமனாரைப் பற்றி மிக நல்ல விதமாகவும், உயர்வாக வும் கூறியுள்ளார். அதை நம்பி, என்னை இவருக்கு திருமணம் செய்து வைத்தனர் என் பெற்றோர்.
கல்யாணத்திற்கு பின்தான், என் தகப்பனாருக்கு கிடைத்த தகவல் பொய் என்றும், என் கணவர் மிகவும் கெட்ட குணம் கொண்டவர், குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும், இவரைப்பற்றி நல்லவித மாக தகவல் கூறியவர், என் கணவரின் உறவினர் என்பதும் தெரிந்தது.
தான் சம்பாதிப்பது தனக்கு மட்டுமே என வாழ்ந்து வருபவர் என் கணவர். வீட்டுச் செலவுக்கு பணம் தர மாட்டார்; நான் தான், வீட்டுச் செலவுகள் அனைத்தையும் ஏற்று, குடும்பத்தை இன்று வரையில் நடத்தி வருகிறேன். அவர் நல்ல வேலையில் இருந்தும், பணம் சம்பாதிக்கும் வெறியில், குதிரை ரேசுக்கு போவதும், சூதாடவும் ஆரம்பித்தார். அது, இன்றும் தொட ர்கிறது. வீட்டின் அருகே உள்ளவர்களுடன் அதிகம் பழக மாட்டார்; பேச மாட்டார். மற்றவர் முன் நல்லவன் போல் நடி ப்பார். ஆனால், என்னை பல்வேறு வழிகளில் இம்சித்து வந்தார். முதல் சில ஆண்டுகளில் அடி, உதை, சகஜம். சில நேரங்களில் இரவில், என்னை வீட்டிற்கு வெளியே தள்ளி, கதவை பூட்டிக் கொள்வார்.
அவரது கெட்ட குணங்களை வெளியே சொன் னால் என் பெற்றோர் மற்றும் அண்ணன்கள் வேதனைப்படுவர் என்பதால்அனைத்தையும் பொறுத்துவந்தேன். ஆனா ல், விஷயம் எல்லைமீறி, இவரைப்பற்றி என் வீட்டினருக்கு தெரிந்துவிட் டது.
எங்கள் குடும்பத்தார், என் மாமனாரிடம் என் கணவரின் கெட்ட நடவடிக் கைகளைக்கூறி, அவரை கண்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதெல்லா ம், அவர் எதையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இந்நிலையில், என் மாமியாரும், மாமனாரும் இறந்து விட்டனர்.
இதன் பின்பும், என் குடும்பத்தார், என் கணவரின் உடன் பிறந்தோரிடம் சென்று முறையிட்டு, அவரை நல்வழிப்படுத்துமாறு பல முறை கேட்டு விட்டனர். ஆனால், அவர்கள் சுயநலவாதிகளாகவே உள்ளனர். தம்பிக்கு கல்யாணம் நடந்ததும், தங்கள் பொறுப்பு முடிந்தது என்று ஒதுங்கிக் கொண்டனர். மேலும், என் கணவரின் கெட்ட குணம், அவர்களுக்கு முன் பே தெரிந்து இருந்ததால், எனக்கு அவர்கள் எந்த உதவியும் செய்ய முன் வரவில்லை.
என் கணவர் மீது, அவர் வேலை செய்த இடத்தி ல் பல்வேறு புகார்கள் கூறப்பட்டன. இறுதியி ல், சில ஆண்டுகளுக்குமுன், அவரை வேலை யில் இருந்து நீக்கி விட்டனர். இருப்பினும், ஓய்வூதியமாக மாதம், 17,000 ரூபாய் வாங்குகிறார். இந்தத் தொகை, அவருக்கு ஒரு பொருட்டே இல்லை. வழக்கம் போல் இப்பணத்தையும் தானே செலவு செய்து, வீட்டிலேயே வெட்டியாக உட்கார்ந்து, குடித்துக் கொண்டும், ரேசுக்கும் போய் வருகிறார்.
வீட்டில் உள்ள நகைகள் அவ்வப்போது காணாமல் போகும். எனக்கு நகை கள் மீது கொஞ்சமும் நாட்டம் இல்லை என்றாலும், இரு பெண்கள் இருப்ப தால், நானே அவற்றை அடகு கடைகளில் பணம் செலுத்தி மீட்டு வருகி றேன். சில நேரங்களில், ‘நகைகளை காணோம்…’ என்று காவல் நிலைய த்தில் புகார் செய்து, இவரை மாட்டி விடலாம் என்று தோன்றும். இருப்பி னும், குடும்ப கவுரவத்திற்காக விட்டு விடுகிறேன்.

ஒரே வீட்டில் இருந்தாலும் நானும், என் இரு பெண்களும் அவருடன் பேசு வதில்லை. நன்றாக விசாரிக்காமல், குணம் கெட்டவரை எனக்கு கல்யாணம்செய்து வைத்து விட்டதாக எண்ணி, வேதனைப்படுகிறார் என் அப்பா. என் இரு பெண்களின் எதிர்காலத்தை மனதில் இருத்தி, வீடு ஒன்றை எனக்கு எழுதி வைத்துள்ளார் அப்பா. இதில் தான், நாங்கள் கடந்த, 10 ஆண்டுகளாக வாழ்ந்து வருகி றோம். இவ்வீட்டை தன் பெயருக்கு எழுதித் தரவில்லை என்று மிகுந்த கோபத்துடன் கத்தி, அவ்வப்போது என் பெற்றோரை கெட்ட வார்த்தைகளால் திட்டுவார். ஆனா லும், சில நேரங்களில் அவர்களிடமே ஏதாவது பொய் சொல்லி பணமும் வாங்குவார்; அதை திருப்பித் தரவும் மாட்டார்.
ஒரு கட்டத்தில், வழக்கறிஞர் ஒருவரை சந்தித்து ஆலோசனை கேட்டோ ம். மகளிர் காவல் நிலையத்தில், புகார் தருவது அல்லது விவாகரத்து பெற்றுக் கொள்வது என, இரண்டு வழிகளைக் கூறினார். என், இரு பெண் களின் திருமண வாழ்க்கை, அவர்களின் எதிர்காலம் மற்றும் குடும்ப கவுரவத்தை நினைத்து, அவற்றை தவிர்த்து விட்டோம்.
தற்போது, வேலை வெட்டி இல்லாமல் வீட்டில் இருப்பவர், எந்நேரமும், ‘டிவி’யை சத்தமாக போட்டு, பெண்கள் படிப்பை கெடுக்கிறார். அத்துடன், தேவையில்லாத நேரங்களில்கூட ‘ஏசி’ போடுவதுடன், வீட்டிலேயே குடி க்கிறார். தினமும் நிறைய சிகரெட் குடித்து வீடே நாறும்படி செய்கிறார். அவர் எங்களுடன் இருப்பதை நானும், என் பிள்ளைகளும் விரும்பவில் லை. அவர் வீட்டைவிட்டு வெளியேறி னால் போதும் என்று நினைக்கிறோம்.
ஆனால், என் இரு பெண்களுக்கும் கல் யாணம் செய்ய வேண்டும். மாப்பிள்ளை வீட்டார் பெண்ணின் தகப்பனாரைப் பற்றி கேட்டால் என்ன சொல்வது… இவரது கெட்ட நடவடிக்கைகள் அவர் களுக்கு தெரியும் போது, என் பெண்களின் எதிர்காலம் என்னவாகும்… இவ்விஷயம் என் மனதில் கவலையை ஏற்படுத்துகிறது.
அம்மா. நாங்கள் அனைவரும் மனநிம்மதியோடு, சந்தோஷமாகவாழவும் , என் பெண்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்க, என் கணவர் விஷயத்தில் நான் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை, தங்கள் பத்திரிகை மூலம் அறிவுரை கூறுங்கள்.
— தங்கள் அன்புள்ள மகள்

அன்புள்ள சகோதரிக்கு —
ஒரு மோசமான கணவன் எப்படி இருப்பான் என்பதற்கு உதாரணம், உன் கணவன். குடிகாரன், ஊதாரி, சூதாடி, மனைவி யை சித்ரவதை செய்யும் கொடுமைக்காரன்; தன் சுகமே பெரிதென நினைக்கும் சுய நல வாதி. பணி செய்யும் இடத்தில் கெட்ட பெயர் சம்பாதித்து பணியை விட்டு நீக்கப்பட்ட பொறுப்பற்ற ஆசாமி. இத்தகைய குணாதிசயங்களைக் கொண்ட கணவ னை, மகள்களின் கல்யாணங்களை முன்னிட்டு, பொறுத்து போவது உசிதமல்ல.
கணவரின் துர்நடத்தைகளை, புகாராக எழுதி மகளிர் காவல் நிலையத்தி ல் சமர்ப்பி. பெண் காவல்துறை ஆய்வாளர், உன் கணவரை கூப்பிட்டு கண்டிக்கட்டும். தொடர்ந்து மூன்று முறை புகார் கொடுத்த பின், குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய். விவாகாரத்து மனுவில், ஜீவனாம்சம் கேள்; குடிகார கணவனை உங்களுடன் வைத்திரு ந்தால் தான், உன் மகள்களின் திருமணம் பாதிக்கப்படும்.
உன் மூத்த மகளுக்கு வயது, 18. திருமணத்திற்கு குறைந்த பட்சம் இன்னு ம் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்த 5ஆண்டுகள் அவகாசத்தில் கணவன் இல்லாமல் நீயும், தந்தை இல்லாமல் உன் மகள்களும் வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
நீ விவாகரத்து பெற்றவள் என்ற தகவல் தெரிந்தவர்களே, உன் மகள்களை பெண் கேட்க வருவர். தகவல் தெரியாதவர்களுக்கு நீயே சொல்லி விடு.
சமூகம் என்ன சொல்லுமோ என பயந்து, கூடுதல் சுமையை சுமக்காதே. மகள்களை நன்கு படிக்கவைத்து, நல்ல வேலைக்கு அனுப்பி, நல்ல வரன் களாக பார்த்து திருமணம் செய்து வை. அடுத்த, எட்டு ஆண்டுகளுக்கு இது உன் வாழ்க்கை குறிக்கோளாய் இருக்கட்டும். உன் முடிவு மற்ற குடிகார கணவ ன்களை பெற்ற மனைவிமார்களுக்கு எடுத்துக் காட்டாய் அமையட் டும்.
புலம்பியதுபோதும் கொதித்தெழு. காலுக்கு பொருந்தாத காலை கடிக்கும் செருப்பை அணிந்து, அவதிப்படாதே. தூக்கி எறி.
உன் இரு மகள்களுக்கு, நல்ல வரன்கள் அமைய வாழ்த்துகள்.

என் வயது, 28; வீட்டுக்கு ஒரே பிள்ளை. பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன்; சிறுவயதிலிருந்தே தாத்தா, பாட் டியின் அரவணைப்பில்
வளர்ந்தேன். ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செ ய்தேன்; தற்போது, அதிலிருந்துவிலகி, வேறு வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.
என் அப்பா, இறந்து விட்டார். என் அப்பாவிற்கு, என் அம்மா இரண்டாவது மனைவி. அப்பாவின் முதல் மனைவி மற்றும் அவர் பிள்ளை தற்சமயம் உயிரோடு இல்லை. நான் சிறுவனாக இருந்தபோது, அப்பாவுக்கு ம், அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். நான் சிறு வன் என்பதால், இந்த சண்டை எதனால் வருகிறது என் று தெரியாது. என் அப்பாவின் நண்பர் ஒருவர் அடிக்க டி வீட்டிற்கு வருவார். அவருக்கும், என் அம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அம்மா அவருடன் சென்று விட்ட தால், அப்பாவும் அம்மாவை பிரிந்து விட்டார். என்னை ப் பற்றி யாரும் கவலைப் படவில்லை.
என்னை, என் தாத்தா, பாட் டி (என் அம்மாவின் பெற் றோர்) அழைத்துச் சென்று விட்டனர். பிரிந்துசென்ற என் அம்மாவுக்கு, இன்று வரையிலும் நிம்மதி இல்லை. அந்த மனிதன் இன்று வ ரை வேலைக்கு சென்றதி ல்லை. அரசு ஊழியரான என் அம்மாவின் வருமானத் திலேயே, உடலை வளர்த்து வந்தான்.
அந்த மனிதனின் அம்மாவும், அக்காவும், தினமும் என் அம்மாவை தகாத வார்த்தைகளால் திட்டி கொடுமைப் படுத்தியுள்ளனர். சில சமயங்களில் அடிக்கவும் செய் துள்ளனர். இதைப் பற்றி வெளியில் சொன்னால், உன் மகனை கொன்று விடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால், எனக்காக அம்மா எல்லாவற்றையும் தாங்கி க் கொண்டு இருந்துள்ளார்.
இச்சமயத்தில், அவருக்கு சொந்தமான நிலத்தை விற் று, அந்தப் பணத்தில், தன் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியே, அவ்வளவு பணத்தையும் செலவு செய்து, இன்று அதில் சிறிதளவு கூட இல்லாமல் இருக்கிறார்.
இது அனைத்தும் அவருடைய அம்மாவுக்கும், அக்காவு க்கும் தெரிந்திருந்தும், என் அம்மாவின் மீது பழி போட வேண்டுமென்ற காரணத்திற்காக, ‘இந்த பணத்தையெ ல்லாம் நீ தான் பறித்துக் கொண்டாய்…’ என்று, அம்மா வுக்கு திருட்டுப் பட்டம் சுமத்தினர். இதனால், என் அம் மா பட்ட துன்பங்களையும், தகாத வார்த்தைகளால் பட்ட அவமானங்களையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இப்பிரச்னையால், நான்கு ஆண்டுகளுக்கு முன், எங்கள் வீட்டிற்கே வந்து விட்டார் அம்மா. ஆனா லும், இந்த நான்கு ஆண்டுகளாக, அந்த மனிதரும் அவ ரைச் சார்ந்தோரும், ஏதாவது பிரச்னையை எழுப்பி, எங்களுடன் சண்டைக்கு வருகின்றனர்.
நான் ஒழுக்கமாக வாழ ஆசைப்படுபவன். ஊரில் அ னைவரிடத்திலும், எனக்கு நல்ல மரியாதை உண்டு. நான் தற்பெருமைக்காக சொல்ல வில்லை… எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் இல்லை. இந்த காரணத்திற் காக, என் அம்மா, ‘அவர்களுடன் சண்டைக்குப் போகா தே…’ என்று தடுத்து விடுவார்.
நாங்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தோம். ஆ னால், அவர்களோ இரு தரப்பிலும் பணம் பறிப்பதிலே யே குறியாக இருக்கின்றனர். அங்கே உண்மைக்கு இட மில்லை என்று தெரிந்து கொண்டோம்.
என் அம்மா, அவருடன் வாழ்ந்தாரே தவிர, அதற்குண் டான எந்த ஒரு ஆதாரமும் இல்லை. (குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இதுபோன்ற எந்த ஒரு ஆதாரமும் என் அம்மா பெற்றுக் கொள்ளவில்லை.) அரசு பணியி ல் இருப்பதால், அதிலுள்ள அனைத்து பதிவுகளிலும், என் தந்தை மற்றும் என் பெயரே இருக்கிறது. என் அம் மாவுக்கு பின், நான் தான் வாரிசு என்பதற்குண்டான அனைத்து ஆவணங்களையும் அம்மா செய்து வைத்து ள்ளார். இதற்கும், அவர் அம்மாவிடம் பிரச்னை செய்து ள்ளார்.
என்அம்மா வேலைக்கு செல்லும் போது, தினமும் வழி மறித்து பிரச்னை செய்கிறார். இதை அம்மா என்னிடம் சொல்லும் போது, அவரை கொலை செய்து விடலாமா என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு ஏதாவது என் றால், என்வீட்டில் யாரும் உயிரோடு இருக்கமாட்டார் கள். அதனால், அமைதியாகஇருக்கிறேன். எனக்கு திரு மணம் செய்து வைக்க பெண் பார்த்துக் கொண்டிருக்கி ன்றனர். திருமண விஷயத்தில், அவர் பிரச்னை செய் வார் என்று எங்களுக்கு தெரியும். இதனால், என் திரு மணம் நடக்குமா என்ற அச்சத்தில் உள்ளனர் என் குடு ம்பத்தார்.
அம்மா, நீங்கள் சொல்லுங்கள் இந்த பிரச்னையை எவ் வாறு கையாளுவது? நீதிமன்றங்கள்ரீதியாக, இதற் கோர் நிரந்தரதீர்வுகிடைக்குமா அல்லது காவல்துறை யை அணுக வேண்டுமா? எவ்வாறு இப்பிரச்ச‌னைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்று ஆலோசனைகூறுங்க ள்.
இப்ப‍டிக்கு
பெயர்சொல்லாத விரும்பாத மகன்

அன்பு மகனுக்கு,
பெற்றோரின் தவறுகளால், பிள்ளைகளின் வாழ்க்கை பெரியளவில் பாதிக்கிறது. முதல் மனைவியோடு திரு ப்தியாய் குடும்பம் நடத்தாமல், உன் தாயை இரண்டாம் தாரமாக கட்டிக் கொண்டது உன் தந்தையின் குற்றம். இரண்டாம் தாரமாய் வாழ்க்கையை நடத்தினாலும், அதனுடன் நிறுத்திக் கொள்ளாமல், கணவனின் நண் பனுடன் குடும்பம் நடத்தப் போனது உன் தாய் செய்த குற்றம். பெற்றோரால் வஞ்சிக்கப்பட்ட நீ, அதிகம் படி த்து நல்ல வேலைக்கு போகாமல், பத்தாம் வகுப்புடன் நிறுத்திக் கொண்டது நீ செய்த குற்றம். அதிலும், பார்த் து வந்த வேலையிலிருந்து நின்று, வேறு வேலை தேடி க் கொண்டு இருக்கிறாய்.
கணவனை துறந்து, கள்ளக்காதலனை கை பிடிக்கும் பெண்கள், பெரும்பாலும், நிம்மதியாக, சட்டப்பூர்வ ம னைவியாக வாழ்வதில்லை. தாலி கட்டிய கணவனை பேய் என்று ஏசி, பிசாசுடன் கூட்டு சேர்கின்றனர். கள்ள க்காதலர்கள் ஸ்திரிலோலன்களாக, குடிகாரர்களாக மற்றும் ஒட்டுண்ணிகளாக திகழ்கின்றனர். கள்ளக் கா தல் வழி கிடைக்கும் பெண்களை, ஆண்கள், பணம் சம் பாதித்து தரும் கறவை மாடுகளாக பாவிக்கின்றனர். கள்ள உறவுகளை அங்கீகரிக்கா விட்டாலும், கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு நெருங்கிய உறவினர்கள் சுயலாபம் எதிர்பார்க்கின்றனர்.
உன் தாய், சாக்கடையில் ஆனந்தமாய் அமிழ்ந்து கிட க்கும் பன்றியின் மனப்பான்மையில் இருந்திருக்கிறா ர். அதனாலேயே, தாலி கட்டிய அந்தஸ்தை பெறாமல், அடிமையாக கள்ளக்காதலனுடன், 25 ஆண்டுகள் வாழ் ந்திருக்கிறார்.
உன் தாயின் கள்ளக்காதலனை கொலை செய்வது பிர ச்சனைக்கான நிரந்தர தீர்வல்ல. கொலையாளியாகி, ஆயுள் தண்டனைபெற்று சிறையில் உழல்வாய். ஆயு ள் தண்டனைக்கு பின், விடுதலையாகி வரும் உன்னை , உன் சமூகமும், நட்பும் சீண்டாது; உரிய பணி கிடைக் காது; நல்ல திருமண வாழ்க்கை அமையாமல் மக்கிப் போவாய்.
உன் குடும்பப் பின்னணி அறிந்து, பெண் வீட்டார் உனக் கு பெண் தர மறுக்கலாம். ஆனால், நல்ல மாப்பிள்ளை கிடைத்தால்போதும் என்போர் பெண்கொடுப்பர். கள்ள க்காதலனின் வீட்டார் உன் திருமணத்தை நிறுத்த முயற்சிப்பர் என்பது அபத்தமான கற்பனை.
இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா மகனே…
உன் தாயாரின் வேலைக்கு பிரச்னை வராமல், உன் தா யாரின் கள்ளக்காதலன் மீது, காவல்துறையில் புகார் கொடுக்க, ஒரு கிரிமினல் வக்கீலை அணுகி, கட்டண ம் வழங்கி, சட்ட ஆலோசனை பெறு. உன் தாய், மகளிர் காவல் நிலையம் மற்றும் இலவச சட்ட ஆலோசனை மையத்தை அணுகி, தேவையான அறிவுரைகளை பெ றலாம். கள்ளக்காதலன் மற்றும் அவனது குடும்பத்தா ரை வரவழைத்து சமாதானம் பேசி, நிரந்தர விலகலுக் கு வழி செய்யலாம். உன் தாயுடன் அமைதியாய் வாழ விரும்புவதாக கள்ளக்காதலன் தெரிவித்தால், சாட்சிக் காரன்காலில் விழுவதைவிட, சண்டைக்காரன்காலில் விழுவதுமேல் என்கிற விதத்தில், கள்ளக்காதலனை யே முறையாக திருமணம் செய்து கொள்ளச் சொல்.
எல்லாவகை தீர்வுகளும், மருந்தும் உன் கையில்தான் இருக்கிறது. நீ சாணக்கியத்துடன் செயல்பட்டால் கத் தியின்றி, ரத்தமின்றி உன் பிரச்னைகளை ஜெயிக்கலா ம். உனக்கு நல்ல வேலையும், நல்ல வாழ்க்கைத் துணையும் அமைய, நெஞ்சார வாழ்த்துகிறேன்.